Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 7, 2021

கீதைப்பதிவு அத்தியாயம் -9 ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

  

கீதைப்பதிவு  அத்தியாயம் -9 ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

ஸ்ரீ பகவான் சொன்னது

எதை அறிந்து அசுபத்திலிருந்து விடுபடுவாயோ, அனுபவத்தோடு கூடிய அந்த ஆழ்ந்த ஞானத்தைப் பொறாமைப்படாத உனக்கு நன்கு எடுத்துரைக்கிறேன்.(1)

இந்த ஞானம் வித்தைகளுள் வேந்து;. மறைபொருளுள் மேலானது.;தூய்மை தருதலில் சிறந்தது.;கண்கூடாக உணர்தற்குரியது.;தர்மத்தோடு கூடியது.; செய்தற்கு மிக எளியது.; அழிவற்றது.(2)

எதிரிகளை எரிப்பவனே, இந்த தர்மத்தில் சிரத்தை இல்லாதவர்கள் என்னை அடையாது மரண சம்சார மார்க்கத்தில் உழல்கின்றனர்.(3)

அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் ஜகத் யாவும் வியாபிக்கப் பட்டிருக்கிறது.பூதங்கள் என்னிடத்து இருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில்லை.(4)

பூதங்கள்  ( உண்மையில் ) என்னிடத்து நிற்பவைகளல்ல.என்னுடைய ஈசுவர மகிமையைப் பார்.! பூதகணங்களை ஆக்கவும் காக்கவும் செய்கிற என் சொரூபம் அவைகளிடத்தும் இல்லை.(5)

எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங் காற்று வானத்தில் நிலை பெற்றிருப்பது போன்று பூதங்கள் எல்லாம் என்னிடத்து இருக்கின்றன என்று தெரிந்து கொள்,(6)

குந்தியின் புதல்வா, பூதங்களெல்லாம் கற்ப முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் கற்ப துவக்கத்தில் நான் அவைகளை தோற்றுவிக்கிறேன்.(7)

என் பிரகிருதியை அருளுடையதாகச் செய்து, சுதந்திரமில்லாது அப்பிரகிருதியின் வசமாயிருக்கும் இவ்வுயிர்த்திரள்  யாவற்றையும் திரும்பத் திரும்ப நான் தோற்றுவிக்கிறேன்(8)

தனஞ்செயா, அக்கர்மங்களில் பற்றற்றவனும் உதாசீனனைப் போல் உட்கார்ந்திருப்பவனும் ஆகிய என்னை அவைகள் தளைக்க மாட்டா.(9)

குந்தியின் மகனே, என்னால் கண்காணிக்கப் பெற்று, பிரகிருதியானது, ஸ்தாவர ஜங்கம உலகத்தைச் சிருஷ்டிக்கிறது.இதன் காரணத்தால் ஜகத்தானது சுழல்கிறது.(10)

என்னுடைய பர சொரூபத்தையும் நான் உயிகளுக்கெல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.(11)

வீண் ஆசையுடையவர்கள், பயன்படாச் செயலாளர்கள், கோணலறிவு உடையவர்கள், விவேக மில்லாதவர்கள். மையலூட்டுகிற ராக்ஷச, அசுர இயல்பை அடைகின்றனர்.(12)

பார்த்தா, ஆனால் மகாத்மாக்கள் தெய்விக இயல்பை அடைந்தவர்களாய், உயிர்களுக்குப் பிறப்பிடமும், அழியாதவன் நான் என்று அறிந்து, வேறு எதிலும் பற்று வைக்காது, என்னை வழிபடுகின்றனர்(13)

எப்பழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும் பக்தியுடன் நமஸ்கரிப் பவர்கள் ஆகியும் நித்திய யோகிகள் என்னை உபாசிக்கிறார்கள்.(14).

ஞான  யக்ஞத்தால் வேட்பவர்களாகிய ஏனையவர்களும், என்னை ஒன்றாய், வேறாய், பலவாய்- இத்தனை விதங்களில் உபாசிக்கிறார்கள்.(15)

நானே கிரது என்ற வைதிக கருமம்;யக்ஞம் நானே; ஸ்வதாவாவது நான்;ஔஷதம் நான்;மந்திரமாவது நான்; ஹோமம் செய்யப்படும் நெய்யும் நான்; அக்கினியாவது நான்; வேட்டல் நானே.(ஸ்வதா=பித்ருக்களுக்குப் படைக்கப்படும் உணவு; கிரது=வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒரு வ்கை கர்மம் வேட்டல்=வேள்வி வேட்டல் எனும் வினையானது ஹுதம் எனப்படுகிறது)(16)

இந்த ஜகத்தின் தந்தை,தாய்,பாட்டனாரவனும் , கர்ம பலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும், தூய்மை செய்பவனும்,ஓங்காரம், ரிக் சாமம் யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே.(17)

புகலிடம், வளர்ப்பவன், உடையவன். சாக்ஷி, இருப்பிடம், அடைக்கலம். தோழன், ஒடுங்குமிடம், தங்குமிடம், களஞ்சியம்,அழியாத வித்து.(18)

அர்ஜுனா, நான் வெப்பந்தருகிறேன்; மழையைப் பெய்விக்கவும் தடுக்கவும் செய்கிறேன்; சாகாமையும் சாவும், ஸத்தும், அஸத்தும் நானே.(19)

மூன்று வேதங்களை அறிந்தவர்கள். யாகங்களால் என்னைப் பூஜித்து, சோம பானம் செய்து, பாபத்தினின்று விடுபட்டவர்களாகி, வானுலகு ஏகுதலை வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணியமான தேவேந்திர லோகத்தை அடைந்து சொர்க்கத்தில் திவ்யமான தேவ போகங்களை அனுபவிக்கின்றனர்.(20)

அவர்கள் அந்த அகன்ற வானுலகை அனுபவித்து, புண்ணியம் தேய்ந்தபின்பு மண்ணுலகில் புகுகிறார்கள். இங்ஙனம் மூன்று  வேத நெறிகளைப் பின் பற்றும் போக பித்தர்கள் பிறப்பு இறப்பு எய்துகின்றனர்(21)

எனக்கு அன்னியரல்லாதவராய், என்னையே நினைந்து, யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோக க்ஷேமத்தை நான் வழங்குகின்றேன்.(22)

சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என்னையே வணங்கு கிறார்கள்.(23)

நானே சகல யாகங்களுக்கும் போக்தாவாகவும்( உண்பவன்) பிரபுவாகவும் (தலைவன்) இருக்கிறேன். ஆனால் பல தேவதைகளை வணங்குபவர் என்னை உள்ளபடி அறிகிறார்களில்லை. ஆகையால் அவர்கள் வழுவிப் பிறவியில் வீழ்கின்றனர்(24)

தேவர்களைத் தொழுபவர் தேவர்களை அடைகின்றனர்.பித்ருக்களைப் போற்றுபவர் பித்ருக்களைப் பெறுகின்றனர், பூதங்களை வணங்குபவர் பூதங்களைப் போய்ச் சேருகின்றனர், என்னைப் பூஜிக்கிறவர்கள் என்னையே எய்துவார்கள்.(25)

யார் எனக்கு இலை, மலர், கனி, அல்லது நீரைப் பக்தியோடு படைக்கிறானோ அந்த தூய மனத்தானனது அன்பளிப்பை நான் (இன்புடன்) அருந்துகிறேன்.(26)

குந்தியின் புதல்வா, நீ எதைச் செய்தாலும், யாது புசித்தாலும்,ஏது ஹோமம் பண்ணினாலும். எதை ஐயமிட்டாலும், எத்தவத்தைப் புரிந்தாலும், அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்.(27)

இங்ஙனம் நன்மை தீமைகளைப் பயக்கின்ற வினைத்தளைகளிலிருந்து விடுபடுவாய், சன்னியாச யோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்தவனாய், வினையினின்று விடு பட்டு என்னை அடைவாய்.(28)

நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருக்கிறேன்.எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை, ஆனால் என்னை பக்தியோடு பஜிக்கிறவர்கள் என்பால் உளர், நானும் அவர்கள்பால் உள்ளேன்.(29)

கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னை பஜிப்பானானால், அவன் சாது என்றே கருதப்பட வேண்டும்.ஏனென்றால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான்(30)

விரைவில் அவன் அறவாளன் ஆகிறான்.நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசமடைவதில்லை என்று நன்கு அறிவுறுத்துக.(31)

பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.(32)

புண்ணியவான்களும் பக்தர்களுமாகிய பிராம்மணர்களையும் அவ்வாறே ராஜ ரிஷிகளையும் பற்றிப் பின்பு பேசுவானேன்.? நிலையற்றதும் சுகமற்றதுமாகிய இவ்வுலகைப் பெற்ற நீ என்னைப் பஜிப்பாயாக.(33)

மனதை என்னிடத்து வைத்து, என்பால் பக்தி பண்ணி, எனக்கு யாகம் செய்து, என்னை வணங்கு.என்னைக் குறியாகக் கொண்டு உள்ளத்தை உறுதி படுத்தி என்னையே அடைவாய்.(34)

                  ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் நிறைவு.    


G.M Balasubramaniam Posts    

No comments:

Post a Comment