Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 7, 2021

கீதைப் பதிவு அத்தியாயம் -3 கர்ம யோகம்

 

கீதைப் பதிவு அத்தியாயம் -3 கர்ம யோகம்

அர்ஜுனன் சொன்னது

ஜனார்தனா, கர்மத்தினும் ஞானம் சிறந்தது என்பது தம் கருத்தாயின். என்னை ஏன் கேசவா, கொடுவினையில் ஈடுபடுத்துகிறீர்.?(1)

முரண்படுவன போன்ற மொழிகளில் என் அறிவைக் குழப்புகிறீர் போலும் நான் நலம் பெறுவதற்கான ஒன்றை உறுதியாக இயம்பும்(2)

ஸ்ரீபகவான் சொன்னது

பாபமற்றவனே,நல்ல விசாரம் செய்கிறவர்களுக்கு ஞான யோகம் என்றும் அதை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கர்ம யோகமென்றும் இரண்டு நன்னெறிகள் முன்பே என்னால் இயம்பப் பட்டிருக்கின்றன. (3)

புருஷன் கர்மங்களை அனுஷ்டிக்காமையினால் கர்மாதீதத்தை அடைவதில்லை.வெறும் சன்னியாசத்தால் அவன் நிறை நிலையைப் பெறுவதுமில்லை.(4)

யாரும் ஒரு கணப் பொழுதேனும் செயலாற்றாதிருப்பதில்லை. ஏனென்றால் பிரகிருதியினின்று உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன் வயமின்றி கர்மம் செய்விக்கப் படுகிறது(5)

கர்மேந்திரியங்களை அடக்கி , இந்திரிய விஷயங்களை மனதால் எண்ணிக் கொண்டிருக்கும் மூடன் பொய் ஒழுக்கமுடையவன் என்று பகரப் படுகிறான்(6)

அர்ஜுனா ஆனால் இந்திரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று கர்மேந்திரியங்களைக் கொண்டு கர்மயோகம் செய்பவன் மேலானவனே(7)

நித்திய கர்மத்தை நீ செய். செயல் இன்மையைவிடச் செயல் சிறந்தது செயல் இலானுக்கு உடலைப் பேணுதல் கூட இயலாது.(8)

யக்ஞ கர்மம் தவிர மற்ற கர்மத்தால் இவ்வுலகம் கட்டுண்கிறது. குந்தியின் மைந்தா, யக்ஞத்துக்கான கர்மத்தைப் பற்றற்று நன்கியற்று.(9)

சிருஷ்டித் துவக்கத்தில் பிரம்மதேவன் யக்ஞத்தோடே பிரஜைகளைப் படைத்து “இதனால் விருத்தியடையுங்கள், இது உங்களுக்குக் காமதேனுவாகட்டும் என்றார்(10)

இதனால் தேவர்ளைப் பேணுங்கள்.தேவர்கள் உங்களைப் பேணட்டும் பரஸ்பரம் பேணி பெருநன்மை எய்துவீர்.(11)

யாகத்தால் பேணப்பெற்ற தேவர்கள் உங்களுக்கு நாடிய போகங்களை நல்குவார்கள அங்ஙனம் அவர்களால் கொடுக்கப் பெற்று அவர்களுக்குக் கைம்மாறு அளிக்காது நுகர்பவன் திருடன்.(12)

யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.ஆனால் தங்கள் பொருட்டே சமைக்கும் பாபிகள் பாபத்தை உண்கின்றனர்(13)

உணவினின்று உயிர்கள் உண்டாகின்றன.மழையினின்று உணவு உருப்படுகிறது.யக்ஞத்திலிருந்து மழை வருகிறது.யக்ஞத்துக்குப் பிறப்பிடம் கர்மம்(14)

கர்மம் வேதத்தினின்று உதித்ததென அறிக.வேதம் பரமாத்மாவிடமிருந்து வந்தது. ஆகையால் எங்கும் நிறைந்துள்ள வேதம் யாண்டும் யக்ஞத்தில் நிலைபெற்றுள்ளது.(15)

இகத்தில் இங்ஙனம் இயக்கப்பெற்றுள்ள சக்கரத்தைப் பின் பற்றாதவன்,ஓ பார்த்தா,பாபவாழ்க்கை உடையோனாய், புலன்களில் பொருந்தினவனாய், வீணே  வாழ்கிறான்.(16)

ஆனால் ஆத்மாவில் இன்புற்று, ஆத்மாவில் திருப்தியடைந்து, ஆத்மாவில் மகிழ்ந்திருப்பவனுக்கு வினையாற்றும் கடமையில்லை.(17)

அவனுக்குக் கர்மம்செய்து ஒன்றைப் பெறுதலும், செய்யாது எதையாவது இழத்தலும் இல்லை.ஏதாவது பொருளைநாடி உயிர்களைச் சார்ந்திருப்பதும் அவனுக்கு இல்லை.(18)

ஆகையால் யாண்டும் பற்றற்றுப் பண்புடன் பெருவினையாற்றுக. ஏனென்றால் பற்றற்றுத் தொழில் புரியும் புருஷனே பெரு நிலையைப் பெறுகிறான்.(19)

ஜனகர் முதலானவர்கள் கர்மத்தாலேயே முக்தி அடைந்தார்கள்.உலகத்தை நல் வழியில் நடத்துதலை நன்குணர்ந்தாவது கர்மஞ் செய்யக் கடமைப் பட்டிரு.(20)

மேலோன் எதைச் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின் பற்றுகின்றனர்.அவன் எதைப் பிரமாணமாக்குகிறானோ அதையே உலகம் அனுசரிக்கிறது.(21)

பார்த்தா, மூவுலகிலும் எனக்குக் கடமையேதும் கிடையாது. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லவே இல்லை.ஆயினும் நான் கர்மம் செய்து கொண்டே இருக்கிறேன்.(22)

அர்ஜுனா, நான் அயர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபடாவிடில் மனிதர்களென் வழியையே யாண்டும் பின்பற்றுவர்.(23)

நான் கர்மம் செய்யாவிட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோம். ஜாதிக்கலப்புக்கும் நானே கர்த்தாவாய் மக்களைக் கெடுத்தவன் ஆவேன்.(24)

பார்த்தா, பற்றுள்ளவராய்ப் பாமரர் கர்மம் செய்வதுபோல பண்டிதர் பற்றில்லாதாராய்ப் பாரினில்  பெருநெறி புகட்டுதற் பொருட்டுக் கர்மம் செய்ய வேண்டும்.(25)

ஞானியானவன் கர்மப் பற்றுள்ள அக்ஞானிகளிடத்து மனக்கலக்கத்தை உண்டு பண்ணலாகாது.எல்லா கர்மங்களிலும் தானே ஈடுபட்டுக் கொண்டு மற்றவர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.(26)

பிரகிருதியின் குணங்களால் யாண்டும் கர்மங்கள் செய்யப் படுகின்றன.அகங்காரத்தால் மோகமடைந்தவன்  ”நான் கர்த்தா என்று நினைக்கிறான்.(27)

ஆனால் பெருந்தோளுடையோய், குண கர்மத்தின் தத்துவ ஞானியோ, குணங்கள் குணங்களில் பிரவ்ர்த்திக்கின்றன என்று பற்று வைப்பதில்லை.(28)

பிரகிருதியின் குணங்களால் மோகமடைந்து குணங்களின் தொழில்களில் பற்று வைக்கின்ற மந்த புத்தியினரைத் தெளிந்த அறிவுடையோர் கலங்கும்படி செய்யலாகாது(29)

கர்மங்களை எல்லாம் எனக்கர்ப்பணித்து, சித்தத்தை சைதன்யத்தில் வைத்து,ஆசையையும் மமகாரத்தையும் அகற்றி, மனக் கொதிப்பின்றிப் போர் புரிவாயாக.(30)

எனது இக்கோட்பாட்டை எம்மனிதர் சிரத்தையுடனும் பொறாமைப் படாமலும் பின் பற்றுகிறார்களோ அவர்கள் கூட வினையினின்று விடுபடுகிறார்கள்(31)

எனது இக்கொள்கையை மற்று யார் இகழ்ந்து பின் பற்றுவதில்லையோ, எவ்வித ஞானமும் விவேகமும் இல்லாத அம்மூடர்களைக் கெட்டுப் போனவர்களென்று அறிக.(32)

ஞானியும் தன் இயல்புக்கு ஏற்றபடி நடக்கிறான்.உயிர்கள் அவ்வவற்றின் குணங்களைப்   பின்பற்றுகின்றன.தடை செய்வதால் ஆவதென்ன.?(33)

இந்திரியங்களுக்கு விஷயங்களில் விருப்பு வெறுப்பு உண்டு.அவைகளுக்கு வசப்படலாகாது. அவைகளே அவனுக்குச் சத்துருக்கள்.(34)

நன்கு இயற்றப்படும் பரதர்மத்தைவிட, குணமில்லாத் தன் தர்மம் மேலானது. ஸ்வதர்மத்தில் இறப்பது மேல்.பிறர் தர்மம் பயம் தருவதாம்.(35)

அர்ஜுனன் சொன்னது

விருஷ்ணி குலத்தோய் இப்புருஷன் இச்சிக்காதிருந்தும் பலவந்தமாய் ஏவப்பட்டவனாய், எதனால் தள்ளுண்டு பாபம் செய்கிறான்.?(36)

ஸ்ரீபகவான் சொன்னது.

ரஜோ குணத்து உதித்த, இக்காமம்தான், இக்குரோதம்தான் எதையும் உண்ணவல்லது.;பெரும் பாபமுடையது; ஈண்டு இதை எதிரியென அறிக.(37)

நெருப்பானது புகையினாலும் கண்ணாடி அழுக்கினாலும் , சிசு கருப்பையினாலும் மூடப்பட்டிருப்பது போன்று ஞானம் ஆசையினால் மூடப் பட்டிருக்கிறது(38)

குந்தியின் மைந்தா,ஞானியின் நித்திய சத்துருவும், காம வடிவெடுத்ததும் ,நிரப்ப முடியாததும், போதும் எனாததும் ஆகிய இந்த ஆசையினால் மூடப்பட்டிருக்கிறது,(39)

இந்திரியங்களும் மனதும், புத்தியும் அதற்கு இருப்பிடம் என்று சொல்லப் படுகிறது.இவைகளால் இது ஞானத்தை மறைத்து மனிதனை மயக்குகிறது.(40)

ஆகையால் பரதவீர ,நீ முதலில் இந்திரியங்களை அடக்கி ஞான விக்ஞானத்தை அழிக்கின்ற பாப வடிவமான ஆசையை அறவே ஒழித்துவிடு.(41)

இந்திரியங்கள் (உடலினும்) பெரிதாம். அவற்றினும் மேலானது மனம். புத்தியோ மனத்தைவிடப் பெரியது.புத்திக்கும் உயர்ந்தது ஆத்மா.(42)

மஹாபாகுவே, இங்ஙனம் புத்தியிலும் மேலான ஆத்மாவால் ஆத்மாவை அடக்கி. வெல்ல முடியாததும் ஆசை வடிவு உடையதுமாகிய சத்துருவை அழைத்து விடுவாயாக.(43)

                   கர்ம யோகம் நிறைவு.    


G.M.Balasubramaniam Posts 

No comments:

Post a Comment