Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 7, 2021

கீதைப்பதிவு அத்தியாயம்—5 ஸந்யாஸ யோகம்

 

                              கீதைப்பதிவு  அத்தியாயம்—5 ஸந்யாஸ யோகம்

அர்ஜுனன் சொன்னது

கிருஷ்ணா, கர்மத்தைத் துறக்கவும், பின்பு அதைக் கையாளவும் சொல்கின்றீர்.இவ்விரண்டிலும் சிறந்தது எது என்று நிச்சயிக்கப் பட்டதை எனக்கு சொல்லுங்கள்(1)

ஸ்ரீ பகவான் சொன்னது

கர்ம ஸந்யாஸம் , கர்ம யோகம், ஆகிய இரண்டும் சிறப்பைத் தருமெனினும் கர்ம ஸன்யாஸத்தைவிட கர்ம யோகம் மேலானது.(2)

பெருந்தோளுடையோய், வெறுப்பும் விருப்பும் இல்லாதவன் நித்திய ஸந்யாஸி எனப்படுகிறான். ஏனெனில் இருமைகள் அற்றவன் எளிதில் பந்தத்தில் இருந்து விடுபடுகிறான்(3)

சாங்க்யமும் யோகமும் வெவ்வேறு என்று பலரும் பகர்வர்.பண்டிதர் அங்ஙனம் பேசார்..இவற்றுள் ஒன்றை உறுதியாய் அனுஷ்டிப்பவன் இரண்டின் பலனையும் பெறுகிறான்(4)

சாங்க்யர் அடையும் பேற்றை யோகியரும் அடைகின்றனர்.சாங்க்யத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்போன் உண்மை காண்கின்றான்.(5)

பெருந்தோள் படைத்தவா, கர்மயோகம் செய்யாது, கர்ம ஸந்யாஸம் பெறுதல் எளிதல்ல. கர்ம யோகம் செய்யும் முனிவனோ விரைவில் பிரம்மத்தை அடைகிறான்(6)

கர்மயோக நிஷ்டன், மனந்தெளிந்தவன்,உடலை வென்றவன், இந்திரியங்களை அடக்கியவன், தனது ஆத்மாவே உயிரனைத்துக்கும் ஆத்மாவெனக் காண்கிறவன் கர்மம் செயினும் கட்டுண்பதில்லை( அதில் ஒட்டுவதில்லை) (7)

தத்துவம் தெரிந்த யோகி, பார்க்கினும் கேட்பினும், தீண்டினும், மோப்பினும், அருந்தினும், நடக்கினும் , உறங்கினும், சுவாசிக்கினும், பேசினும்,கழிக்கினும், பிடிக்கினும், கண் திறக்கினும்,கண் மூடினும், பொறிகள் புலன்களில் போகின்றன என்று உறுதி கொண்டு “நான் ஒன்றையும் செய்கிறேன் இல்லை என்று நினைப்பான்.(8,9)

பிரம்மத்தைச் சார்ந்து, பற்றுதலைத் துறந்து கர்மங்களை செய்பவன் நீரில் தாமரை இலை போன்று பாபத்தில் பந்தப் படுவதில்லை.(10)

யோகிகள் பற்றைத் துறந்து. சித்த சுத்திகாக வெறும் காயத்தாலும் ,மனதாலும், புத்தியினாலும் இந்திரியங்களாலுமே கர்மம் செய்கிறார்கள்.(11)

யோகி வினைப்பயனில் பற்றற்று, நிஷ்டையில் இருந்து உதிக்கும் சாந்தியை அடைகிறான். யோகம் செய்யாதவன், ஆசைக்கு வசப்பட்டு, பயனில் பற்று வைத்து பந்தப் படுகிறான்.(12)

தன்னை வசப்படுத்திய தேகியானவன் கர்மங்களையெல்லாம் விவேகத்தால் விலக்கி விட்டுஒன்றும் செய்யாதும், செய்விக்காதும் நவ வாயில் நக்ரில் (ஒன்பது துவாரங்களை உடைய உடலில்) இன்புற்றிருக்கிறான்.(13)

வினைத் தலைமை, வினை, வினைப்பயனைப் பெறுதல், ஆகியவைகளை இறைவன் உண்டு பண்ணவில்லை. இயற்கையே இங்ஙனம் செய்கிறது.(14)

யாருடைய பாப புண்யத்தையும் பரமாத்மா பொருட்படுத்துவது இல்லை. ஞானம் அக்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது.ஆதலால் உயிர்கள் மயக்கமடைகின்றன(15)

யாருடைய அக்ஞானம் ஆத்ம ஞானத்தால் அழிக்கப் படுகிறதோ, அவர்களுக்கு அந்த ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம் பொருளை விளக்குகிறது.(16)

பிரம்மத்தில் புத்தியை வைப்பவர், அதுவே தாமாயிருப்பவர், அதிலேயே உறுதியாய் இருப்பவர்,அதையே புகலிடம் ஆக்குபவர், ஞானத்தால் பாபங்களைப் போக்கடிப்பவர் பின்பு பிறப்பதில்லை.(17)

கல்வியடக்கமுடைய  பிராம்மண னிடத்தும், பசுவினிடத்தும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் கீழோனிடத்தும் ஞானிகள் சம திருஷ்டியே வைக்கின்றனர்.(18)

மனதை சம நிலையில் உறுதிப் படுத்தியவர்களால் இம்மையிலேயே இயற்கை வெல்லப் படுகிறது. பிரம்மம் சமநிலையுடையது, தோஷமற்றது,ஆகையால் அவர்கள் பிரம்மத்தில் நிலைத்து இருக்கிறார்கள்.(19)

பிரம்மத்தை அறிந்தவன், பிரம்மத்தில் நிலை பெற்றவன், உறுதியான அறிவை உடையவன் மனக் குழப்பம் அடையாதவன்.பிரியமானதைப் பெற்று இன்பமடைவதும் இல்லை, பிரியமில்லாததைப் பெற்றுத் துன்பமடைவதும் இல்லை.(20)

புறப் பொருட்களில் மனம் பற்றாதவன் ஆத்மாவில் இன்பம் எய்துகிறான். பிரம்ம சமாதியில் மனதை உடைய அம்மனிதன் அழியாத சுகத்தை அடைகிறான்.(21)

இந்திரிய விஷயங்களில் தோன்றிய போகங்களே துன்பத்துக்கு ஏது வானவை ஆகின்றன. குந்தியின் மகனே, ஆதி அந்தமுடைய அவைகளில் ஞானிகள் இன்பமுறுவதில்லை.(22)

இம்மையில் சரீரத்தை விடுவதற்கு முன்பு காமம், குரோதம், இவைகளின் வேகத்தைப் பொறுக்க வல்லவனே யோகி. அவனே இன்பம் துய்ப்பவன்(23)

ஆத்மாவில் இன்பம் துய்த்து, ஆத்மாவில் கிரீடித்து(விளையாடி), இன்னும் ஆத்மாவில் உள்ளொளி காணும் யோகி தானே பிரம்மமாகி பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான்(24)

தீவினைகளைக் களைந்து, ஐயங்களை அகற்றி, இந்திரியங்களை அடக்கி, எல்லா உயிர்களின் நன்மையில் மகிழ்வுறும் ரிஷிகள் பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.(25)

விருப்பு வெறுப்பினின்று விடுபட்டு, மனதை அடக்கி, ஆத்மஞானம் அடையப் பெற்ற ஸந்யாஸிகளுக்கு  யாண்டும் மோக்ஷம் உள்ளது.(26)

வெளி விஷயங்களை வெளியே வைத்து, கண்களைப் புருவங்களுக்கு இடையில் நிறுத்தி, மூக்கில் இயங்கும் பிராண அபான வாயுக்களைச் சமப் படுத்தி, இந்திரியம், மனம், புத்தி, இவைகளை அடக்கி, மோக்ஷத்தை நாடி, ஆசை , அச்சம், சினம், இவைகளை விட்டு முனியாயிருப்பவன் முக்தனே.(27,28)

யக்ஞம் தபசு இவைகளை அனுபவிப்பவனும் உலகனைத்துக்கும் ஈசனும், உயிர்களுக்கெல்லாம் நண்பனும் நான் என்று அறிபவன் சாந்தி அடைகிறான்,(29)

                     ஸந்யாஸ யோகம் நிறைவு.    .


G.M.Balasubramaniam Posts 

No comments:

Post a Comment