Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 7, 2021

கீதைப் பதிவு—17 சிரத்தாத்ரய விபாக யோகம்

கீதைப் பதிவு—17 சிரத்தாத்ரய விபாக யோகம்

அர்ஜுனன் சொன்னது

கிருஷ்ணா, யார் சாஸ்திர விதியை மீறி,ஆனால் சிரத்தையோடு கூடியவர்களாய் ஆராதிக்கிறார்களோ, அவர்களுடைய நிலை சத்துவமா, ரஜஸா, தமஸா?(1)

ஸ்ரீபகவான் சொன்னது.

தேகிகளுக்கு இயல்பாய் உண்டான சிரத்தையானது  சாத்விகமென்றும், ராஜஸமென்றும் தாமஸமென்றும் மூவிதமாய் இருக்கிறது. அதைக்கேள்(2)

பாரதா ஒவ்வொருவனுடைய மனப் பாங்குக்கு ஏற்ப சிரத்தை அமைகிறது.மனிதன் சிரத்தை மயமானவன்; சிரத்தை எதுவோ அதுவே அவனுமாம்.(3)

சாத்விகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள். ரஜோ குணமுடையவர்கள் யக்ஷ  ராக்ஷசர்களையும், மற்ற தாமச ஜனங்கள் பிரேத பூத கணங்களையும் போற்றுகிறார்கள்(4)

வீம்பும் அகங்காரமும் உடையவர்களாய், காமமும் பற்றுதலும் வலுத்தவர்களாய், எந்த அறிவிலிகள் உடலிலுள்ள இந்திரியங்களையும்  உள்ளத்தில் உறையும் என்னையும் துன்புறுத்தி சாஸ்திரத்துக்கு ஒவ்வாத கொடுந்தவம் புரிகிறார்களோ, அவர்களை அசுர வழியில் துணிந்தவர்கள் என்று அறிக,(5,6)

ஒவ்வொருவருக்கும் விருப்பமான உணவும் மூவகைப் படுகிறது.யாகமும் தபசும்,தானமும் அங்ஙனமே அமைந்துள்ளன, அவைகளுள் இவ்வேற்றுமையைக் கேள்(7)

ஆயுள்,அறிவு, பலம், ஆரோக்கியம்,சுகம் ருசி ஆகியவைகளை வளர்ப்பவைகள்,ரசமுள்ளவைகள், பசை உள்ளவைகள். வலிவு தருபவைகள், இன்பமானவைகள் ஆகிய ஆகாரங்கள் சாத்விகர்களுக்குப் பிரியமானவைகள்(8)

கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, பெருவெப்பம், காரம் வரட்சி,  எரிச்சல் மிகுந்தவையும் துன்பம் துயரம் நோய் உண்டுபண்ணுபவைகளும் ஆகிய உணவுகள் ரஜோகுணத்தாருக்கு விருப்பமானவைகள்.(9)

யாமம் கழிந்த, சுவை அற்ற, துர்நாற்றம் எடுத்த, பழைய எச்சிலான, தூய்மையற்ற உணவு தமோ குணத்தாருக்குப் பிரியமானது.(10)

ஆராதனையாகச் செய்தே ஆகவேண்டுமென்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, வினைப் பயனை விரும்பாதவர்களால் சாஸ்திர விதிப்படி எந்த யாகம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமானது. (11)

பரதகுல சிரேஷ்டனே, பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ செய்யப்படுகிற ஆராதனையை ராஜஸமானது என்று அறிக.(12)

வேதநெறி வழுவியதும், அன்னதானமில்லாததும், மந்திரமற்றதும், தக்ஷிணை இல்லாததும் சிரத்தை அற்றது மாகிய யக்ஞம் தாமஸிகமென்று சொல்லப்படுகிறது(13)

தேவர் பிராம்மணர், குருமார் ஞானிகள், ஆகியவர்களைப் போற்றுவதும், தூய்மையும் , நேர்மையும், பிரம்மசரியமும், அஹிம்சையும் தேகத்தால் செய்யும் தவமெனப்படுகிறது(14)

துன்புறுத்தாத வாய்மையும், இனிமையும், நலனும் கூடிய வார்த்தை, மற்றும் வேதம் ஓதுதல்-இது வாக்கு மயமான தபசு என்று சொல்லப் படுகிறது.(15)

மன அமைதி, அன்புடைமை, மௌனம், தன்னடக்கம், துய நோக்கம்-இது மானஸ தபசு என்று கூறப்படுகிறது(16)

பயனை விரும்பாதவரும். யோகத்திலே உறுதி பெற்றவருமான நரர்களால் பெரு முயற்சியுடன் செய்யப்படும் இம்மூவித தபசு சாத்விகமானதென்று பகரப் படுகிறது(17)

பாராட்டுதலையும் பெருமையையும் போற்றுதலையும் முன்னிட்டு ஆடம்பரத்தோடேஈண்டு எத்தவம் புரியப் படுகிறதோ, த்ற்காலிகமானதும் உறுதி அற்றதுமான அது ராஜஸமானதென்று பகரப் படுகிறது(18)

மூடக் கொள்கையால் தன்னையே துன்புறுத்தியோ அல்லது பிறரை அழித்தற் பொருட்டோ செய்யப்படுகிற தவம் தாமஸமெனப் படுகிறது(19)

தக்க இடத்திலே, வேளையிலே பிரதி உபகாரம் செய்யாதவர் எனினும் தகுந்த பாத்திரமாய் உள்ளவர்க்கு தானம் செய்வது முறையெனக் கருதி வழங்கும் தானம் சாத்விகமானது(20)

மற்று, கைம்மாறு கருதியோ பலனை உத்தேசித்தோ வருத்தத்தோடு வழங்கப் படும் தானம் ராஜஸமென்று எண்ணப்படுகிறது.(21)

தகாத இடத்திலும், காலத்திலும் தகுதி அற்றவர்களுக்கு வணக்கமின்றி இகழ்ச்சியுடன் செய்யும் தானம் எதுவோ அது தாமஸமெனப் படுகிறது(22)

ஓம் தத் ஸத் என்று பிரம்மம் மூவிதமாய் மொழியப் பட்டுள்ளது. அதினின்று வேதியர், வேதம், வேள்வி  பண்டு படைக்கப்பட்டன(23)

ஆகையால் வேதம் அறிந்தவர்கள் வேத விதிப்படி செய்யும் யக்ஞ-தான-தபக் கிரியைகள் எப்பொழுதும் ”ஓம் என்று உச்சரித்துத் துவங்குகின்றன(24)

தத்என்று(பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லை) உச்சரித்துப் பலன் விரும்பாது மோக்ஷத்தை நாடுபவர்களால் நானாவிதமான யக்ஞ தபக் கிரியைகளும் தானக் கிரியைகளும் செய்யப்படுகின்றன(25)

அர்ஜுனா, உண்மை என்ற கருத்திலும் நன்மை என்ற கருத்திலும் “ஸத் என்ற சொல் வழங்கப் படுகிறது.மங்கள கர்மங்களிலும் ‘ஸத் என்ற சொல் உபயோகிக்கப் படுகிறது.(26)

வேள்வியிலும் தவத்திலும் தானத்திலும் நிலைத்திருப்பதுஸத்  என்று சொல்லப் படுகிறது. இன்னும் பிரம்மத்தின் பொருட்டு செய்யும் கர்மமும் ‘ஸத் என்றே இயம்பப்படுகிறது(27)

சிரத்தையின்றி செய்யும் யாகமும் தானமும் தபசும்மற்ற கர்மமும் ‘அஸத் எனப்படும். அது மறுமைக்கும் உதவாது. இம்மைக்கும் உதவாது.(28)

           சிரத்தாத்ரய விபாக யோகம் நிறைவு.       .

 

G.M Balasubramaniam Posts    

No comments:

Post a Comment