to INANYA MAHA MUNIVAR
23-08-2018
சத்தமன் என்பவன் தமிழ் அறிந்தவன் ! தமிழை உணர்ந்தவன் ! தமிழ் மொழி பேசுபவன் !
அழகு மொழி ;;;
செந்தமிழ், பைந்தமிழ், தென்றமிழ், கன்னித்தமிழ், வண்டமிழ், அமுத தமிழ், நற்றமிழ், இயன்றமிழ், இயல் தமிழ், தீந்தமிழ், இன்ப தமிழ், இனிய தமிழ் !
எத்துனை அழகு ? வடிவாய் படைத்தான், வசையாய் பொழிந்தான் ! எத்தனை திருநாமம் தமிழுக்கு ? உலகின் உயர்வின் மொழி ! மனிதன் வணங்கும் மொழி !
ஞானிகள், சித்தர்கள் தமிழ் பாடி தன்னை நிறுபித்த புனித மொழியை அறிந்து உணர் ! ஆயிரம் கோடி இன்பம் உன்னுள் ! சங்கம் அமைத்து வளர்த்தான். தரணியில் எந்த மொழிக்கும் இல்லா சிறப்பு !
தமிழால் பேசு கடவுளிடம் ! தமிழில் பேசி நெருங்கு ! காலத்தில் கரை சேர்வாய். யுகம் தோன்றி 48000 கோடி ஆண்டுகள் ஆனது என என் தந்தை சொல்வார்கள். யுகம் தோன்றும் பொழுதே தமிழ் மொழி தோன்றியது என்று ! ஆஹா மேன்மையில் மேன்மை ! கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்று முன்னோர் சொன்ன அதே வார்த்தை நிஜம் தான் !
தமிழிலே சித்தர்கள் தெள்ள தெளிவாய் பாடி கடவுளை நெருங்கினார்கள் ! உயிர், மெய், உயிர்மெய் என்று உயிரோட்டமாய் இருக்கும் அழகு மொழி !
உண்மை, உயர்வு மொழி, அழகு மொழி தமிழ் ! நான் இந்த அழகு தமிழ் பேச பெருமை கொண்டேன் ! என் அன்பினிற்கினிய தந்தையிடம் இந்த அழகு மொழி தமிழாலே நீண்ட நெடிய நேரம் உரையாடினேன் ! தமிழ் பேசியே கொஞ்சி விளையாடினேன் ! குதூகலம் அடைந்தேன்.
லிபி என்ற வேத இனன்ய மொழியின் சாரம்சத்தை என் அன்பினிற்கினிய தந்தை தமிழிலே மொழி பெயர்த்து வழங்க கண்டேன் ! வேதம் ஐந்தையும் தெள்ளு தமிழில் திறம்பட வடிவமைத்து தந்தார்கள் ! என் தந்தை கருணையாளன் தானே ?
வேதம் கையிலிருந்தால் காந்தம் போல ஒட்டும் ! உண்மையை அறி ! என் அன்பு தந்தையுடன் இறுதி பிறவி இந்த புண்ணிய தமிழ் மண்ணிலே ! எனது முதல், இறுதி பிறவி இந்த அழகு தமிழ் மண்ணிலே !
இந்த மண்ணிலே மணம் உண்டு ! மலர்ச்சியும் தானுண்டு ! அதனாலே நான் தரையில் படுத்து நித்திரை கொள்கிறேன். தமிழ் மொழி பேசினால் அறிவு வரும் ! வல்லமை வரும் ! இன்பம் தரும் மொழி , தித்திக்கும் மொழி இனிதாய் நீயும் உன் சந்ததிக்கு சொல்லிக் கொடு !
நான் மலர்வேன் உன் நெஞ்சில் ! இனியும் மலர்வேன் ! மொழியின் மோகம் உணர்ந்தேன் ! அதன் சாறு அருந்தி உனக்கு வேதமாக தருகிறேன். அழகு தமிழால் உன்னை ஆசிர்வதித்தேன் ! நீ தமிழ் போல் இனிமையாய், ஆனந்தமாய் வாழ்வாயடா !
இனி தமிழும் வாழும் ! தமிழனும் வாழ்வான் ! தமிழே வாழ்க !
நான் இநன்யா !
No comments:
Post a Comment