to INANYA MAHA MUNIVAR
16-08-2018
சகநாயகன் போல் ஒட்டும் சுகிதம் போல் இருக்கும் பொட்டில், நாயகன் அதன் நடுவிலே !
நெற்றிப் பொட்டு ;;;
புருவ மத்தியில் இருக்கும் சொரூபி, ஆதன்ய சக்கரம் என்ற உயிர் சக்கரம் ! காலச் சக்கரத்தை மாற்றும் அதித சக்தி அதற்கு உண்டு. அதனாலே புருவ மத்தியில் பெண்களை பொட்டு வைக்க சொன்னார்கள் முன்னோர்கள். திருநீறு என்று நீ அணிவது அதனாலே !
ஆதியில் முனிவர்கள் கமண்டலத்தில் நீர் வைத்து நெற்றியில் தொட்டு ஆசிர்வதித்தார்கள். இவன் ஏதேதோ பூசி மதிமயங்கி புத்தி தடுமாறி அலைகின்றான்.
ஆதன்யா என்ற உயிர் சக்கரத்தில் உன் உயிர் உறவாடும் ! உண்மை சொரூபம் சொல்லும். நெற்றியில் புருவ மத்தியில் எப்போதும் நீர் தொட்டு வை என்று என் அன்பினிற்கினிய தந்தை சொல்வார்கள் ! உயிர்ப்பு, துடிப்பு, சிலிர்ப்பு இருந்தால் தான் நீ ஆனந்தம் கொள்வாய் என்று சொல்வார்கள் !
உன் உடலை உயிர்த்துவமாக வைக்கும் சூட்சுமம் உன் நெற்றியில் உண்டு. உன் மனதின் பாவ, புண்ணிய கணக்கு படி தான், உன் பிறப்பும் இறப்பும் நிர்ணயிக்கப்படுகிறது ! ஆதலால் பெற்றோர், பெரியோர் சொல் கேட்டு வணங்கி மகிழ் ! வாழ்வில் இன்பம் பொங்க பெற்றோர் சொல் கேள் . எல்லாம் தெரியும் என்று பசப்பாதே ! பிதற்றாதே ! ஏனேன்றால் உன்னை பற்றி உனக்கு ஏதும் தெரியாது.
நானறிவேன் உன்னை ! நாயகன் என் தந்தை யாகவா எனக்குள் இருப்பதையும் நானறிவேன் ! தினமும் ஆன்மாவோடு பேசுகின்றேன் ! உலக சூட்சுமத்தை ஒரு நொடியில் அறியும் வித்தையை என் தந்தை எனக்கு சொன்னார்கள் !
எனக்குள் இருப்பது ஆறு பேராத்மாக்கள் !
என்னுள் இசைக்கும் நாதம் உலகத்தின் கீதம் !
நான் உயிரோடு உறவாடி மகிழ்கிறேன் ! எனக்குள் இருக்கும் உயிர் ஆனந்த நிலையிலே இருக்கிறது !
என்னுள் இசைக்கும் நாதம் உலகத்தின் கீதம் !
நான் உயிரோடு உறவாடி மகிழ்கிறேன் ! எனக்குள் இருக்கும் உயிர் ஆனந்த நிலையிலே இருக்கிறது !
நெற்றி இல்லா மனிதன் ஏதுமில்லை. உடலில் எந்த பாகம் இல்லாவிட்டாலும் மனிதர்களுக்கு நெற்றி இருப்பதை அறிந்து உணர் ! உன் வாழ்க்கை அதில் நிர்ணயிக்கப்படுகிறது.
நீரில்லா நெற்றி பால் !
புருவ மத்தியில் நீர் தொட்டு வை !! நிம்மதி உண்டு !
புருவ மத்தியில் நீர் தொட்டு வை !! நிம்மதி உண்டு !
நிஜம் நான் ! நிஜமான முகம் என்னுள் !
நீர் அமிர்தம் ! என் நாமமும் அமிர்தமடா !
நான் அமிர்தம் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment