to INANYA MAHA MUNIVAR
02-08-2018
வினையும் வினை அறுக்கும் சூட்சுமம் நான் ! ஊழ்வினையை வேறருக்க வந்த வேதமகன் நான் ! உணர் ! உனக்கு ஞானமிருந்தால் !
வினை அறுக்கும் சூட்சுமம் !
பிறப்பென்பது புரிந்தும் தவறு செய்கின்றாய். பாவம் கரைக்க யுகம் வந்தால் மீண்டும் பாவம் செய்கிறாய் ! ஏழு பிறவிகள் அல்ல ! ஏழேழு பிறவிகள் என்பதாகும். உன் வினை முன் வினையோடு கலந்து உன்னில் கலந்தது. முற்பிறவியின் கர்மா இப்பிறவியில் தொடர்கின்றது. மீண்டும் தீவினை நோக்கி தினந்தோறும் செத்து பிழைக்கின்றாய் !
பாவம், புண்ணியம் மிருகங்களுக்கு இல்லை. உனக்கு மட்டும் தான் ! உன்னை அறிவாய், அழகாய் படைத்தான் என் இனியவர் என் அன்பின் அப்பா ! ஆனால் அறிவை தொலைத்து எதையோ தேடுகிறாய் ! நான் படைத்தவன் பொற்கரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தவன். நான் படைப்பின் சூட்சுமம் அறிந்தவன் ! படைத்தவன் பாசப் புதல்வனடா நான் ! வினை அறுக்கும் சூட்சுமம் தெரிந்தவன் !
என்னுள் எத்தனையோ கோடி அண்ட ஜீவராசிகள் உறவாடுகிறது ! ஆனால் பிண்டத்தில் வந்தவன் நீ தான் வசைபாடுகிறாய் ! இன்று இந்த நிமிடம் மட்டுமே உன் கையில். நாளை நடப்பது உனக்கு தெரியாது ! நீ எதை உண்ணப் போகிறாய், எங்கே இருக்க போகிறாய், எங்கே தூங்க போகிறாய், எதுவும் உனக்கு தெரியாது. எதிர்கால இலக்கை நினைத்து போராட முடியுமே தவிற நீ நிர்ணயிக்க முடியாது உன் வாழ்வை !
காலகணக்கு என்னிடம் எதுவும் உன் கையில் இல்லை ! உன் உள்ளங்கையில் ரேகையை மட்டுமே பார்ப்பாய். என் உள்ளங்கையில் உலகம் இருப்பதை அறிவாயோ ? எல்லாம் இங்கே ஊழ்வினை ! உன் ஊழ்வினை அற்றுப் போக கடவுளின் பாதம் பற்று ! வேறெதுவும் உனக்கு கை கொடுக்காது ! ஜீவராசிகள் ஆனந்தமாக, நிம்மதியாக வாழக் கண்டேன். ஆனால் நீ படும் துயரம் வேடிக்கையடா !
”நான் (ஆன்மா) ! நான் இருப்பதால் நீ இருக்கின்றாய் ! நான் உன்னுள் மறைத்தலில் உள் இருப்பு. நான் என்பது இங்கே கடவுள் மட்டுமே ! கடவுளின் இருப்பில் நீ வாழ்கின்றாய். நான் இல்லை என்றால் நீ இல்லை. நீ இல்லை என்றால் நான் உண்டு ! ஏதறிந்தாய் ? எவையறிந்தாய் ?” என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள்.
இங்கே போகூழில் சிக்கி தவித்து ஆகூழில் நிவர்த்தி பெறாமல் தவிக்கின்றான். என்னுள் கரைந்திடு ! உன் ஊழ்வினை கரைந்து போகும் !
சர்வ நிச்சயமாக நான் பாவத்தை கரைப்பேன், இனிமேல் நீ பாவம் செய்யாமல் இருந்தால் ! இங்கே உணர்ந்தவன் ஞானியாகி, கடவுளை அறிகிறான்.
வினை அழிக்கும் சூட்சுமம் நான் !
நான் அணுவுக்குள் அணுவானவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment