to INANYA MAHA MUNIVAR
28-08-2018
உலகை நன்றாய் படைத்த பெருங்கருணைமிக்க என் அன்பிற்கினிய தந்தை யாகவா என்ற பேரொளி மனிதம் தழைத்தோங்க மனதின் சுமை நீங்க அன்பு பரிசாக தந்த சூட்சுமசுகம் !
செப்டம்பர் 9 லிருந்து 18 வரை யுகத்தில் என் தந்தை சுவாசிக்கும் புனித இடத்தில் ரிஷிகள், யோகிகள் வந்து வேதம் மனனம் செய்து செல்வார்கள்.
ரிஷிகள், யோகிகள் யுகத்தில் பிறப்பதில்லை. ஆதலால் தர்மாக்களே இந்த ஒன்பது நாளும் ஒருவேலை உணவருந்தி வேதத்தை மனனம் செய்யுங்கள் !
ஒரு டம்ளிரில் புனித நீர் வைத்து பறவைகள் எழும் நேரமும், அடையும் நேரமும் வேதத்தை உள்வாங்கி உன் பாவத்தை கரைத்து விடு !
பச்சரிசி சாதம் தான் சாப்பிட வேண்டும். பூசணிக்காய், சுரைக்காய், வாழைக்காய் சேர்க்காதே. ஒன்பது நாள் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு நாள் மனதார விரதம் இருந்து வேதத்தை உள்வாங்கு !
நிச்சய சத்தியமாக உன் பாவம் கரைந்து ,பிணி, பீடைகள் அகன்று பெரும் செல்வம் சேரும் ! பெருமை மிகுந்த என் தந்தை யாகவா அன்னை வசியாவிடம் வேண்டுவேன் நீ நலமாக, வளமாக இருக்க !
என் சத்திய பாதை என் தந்தை அமைத்து தந்தது ! இதில் வருபவர் யாரும் தோற்பதில்லை, தோற்கவும் விடமாட்டேன்.
முக்கியமாக இரவில் நட்சத்திரம் பார்த்து சாப்பிடு ! நானும் இந்த ஒன்பது நாளும் ஒரு சொட்டு நீர் அருந்தாமல் இருப்பேன்.
இநன்யா என்றென்றும் காப்பேன் !
நான் சத்தியமடா.
No comments:
Post a Comment