to INANYA MAHA MUNIVARமேலே சுத்தவாளி என்று பெயரெடுக்க ஆசைப்படு ! யாஷ்ய தீர்ப்பு காண்டம் உன் வரவை நோக்கி !
நிறைகாண் !
வாழ்வில் எப்போதும் குறை சொல்லி வாழ்கின்றாய் ! செய்கின்ற வேலையில், காண்கின்ற பொருளில் எல்லாம் குறை சொல்லி திரிகின்றாய். உனதருகில் இருக்கும் உறவுகளை குறை சொல்கின்றாய். இங்கே எதிலும் நிறை காண்பவன் நிம்மதியாய் இருக்கின்றான் !
நிறைமதியே பூர்ணசந்திரன் என்று புகழ்கின்றாய். மழையை, காற்றை, நீரை, சூரிய சுற்றத்தை எல்லாம் குறை சொல்லி தன்னில் குறையோடு வாழ்கின்றாய். தினமும் கடவுளை குறை சொல்லி மனித மூளையை செயல் இல்லா ஆக்கும் மானிடமே இங்கே நிரம்ப கண்டேன் !
உன்னில் குறை உண்டு அதை சீர்படுத்தி, சரிபடுத்து. எல்லாம் நிறையாக உன் குறைகளை உற்று நோக்கி சீர்படுத்து !
ஞானிகள், மகான்கள் எல்லாவற்றிலும் நிறைகண்டார்கள். நிம்மதியாய் எப்போதும் ஆனந்த நிலையில் வாழ்ந்தார்கள். நீ ஜடப்பொருளை கூட குறை சொல்கின்றாய். எப்போதும் முனுமுனுப்பாய் வாழ்கின்றாய். பயம், குறை, தன்னிலை மரத்தல் இதுவே உன் குறை ! எதையும் சரிபடுத்த முயலவில்லை. ஆனால் நிம்மதியை தேடுகின்றாய். நன்றி என்ற வார்த்தையை மறந்தான். கடவுளை தேடுவது, கோயிலுக்கு செல்வது, சித்தர்களை தேடுவது எல்லாம் எதிர்பார்த்து தான். கண்டுபிடித்து குறை சொல்லத்தான் !
உயிர் போகும் நிலையில் என்னிடம் வருவான். சுகம் கொடுத்தால் தன்நிலை மறப்பான். துன்பம் தீர்ந்து சுகம் கொடுத்தால் கடவுளை மறக்கின்றான். நன்றி சொல்ல மறக்கின்றான். என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் “நிம்மதியை நான் கொடுத்தால் நீ என்னை மறப்பாயடா” என்று !
கர்மத்தை, பாவத்தை தூக்கி சுமந்து கொண்டு கடவுளை குற்றம் சொல்லி கயவனாக திரிகின்றான். உயிரை கொடுத்தவனுக்கு மயிரை வளர்க்க தெரிந்தவனுக்கு, மரணத்தை நிர்ணயித்தவனுக்கு மனிதனின் நிலை தெரியாதா என்ன ?
மனிதன் குறுகிய மனபான்மையோடு வாழ்கின்றான். மனைவியோடு சண்டை, சொத்து தகராறு, ஜுரம், தலைவலி, கால் வலி என்று கடவுளிடம் புலம்ப கண்டேன். இந்த அற்ப செயல் அரை நொடியில் பஸ்பமாகும். ஆனால் என்னில் நிம்மதி வேண்டும், ஞானம் வேண்டும், மீண்டும் பிறவா வரம் வேண்டும் என்று கேட்பாரில்லை. வேடிக்கை மானுடமடா !
என் வியாதி சரியாகவில்லை. அதனால் இநன்யா கடவுள் இல்லை என்று பிதற்றுகின்றான். வேடிக்கை மனிதனடா ! உன் குறை, உன் பாவம், உன்னை உருக்குலைத்து மூலையில் முடங்க வைக்கிறது !
என்னில் குறை இல்லை ! நீ குறையில்லா வந்தால் நிறையோடு செல்வாய் ! நான் எல்லாவற்றிலும் நிறையை காண்கின்றேன் ! தன் குறை நினைப்பவன் பிறர் குறை நினைக்கமாட்டான். கடவுள் நிறைவான வாழ்வை தந்தும் மனிதன் இறக்கும் வரை குறை இருப்பதாய் எண்ணி இறக்கின்றான்.
கடவுள் அன்பானவன் ! நிறையுடையோன் ! அவனில் குறை இல்லை. உன் குறை நான் தீர்ப்பேன், நீ உணர்ந்தால் !
பயத்தையும், குறை சொல்லும் மனதையும் மாற்று ! மாயவன் உனை நிறையாக்குவேன் ! மிருகங்கள், பறவைகள், மரங்கள் குறை சொல்வதில்லை ! குறையோடு வாழ்வதில்லை ! இந்த அற்ப மனிதன் தான் குறை சொல்லி குறையோடு வாழ்கின்றான்.
என்னிடம் இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யும் மானுடமே நிரம்ப அவனே நிறை இல்லா வாழ கண்டேன் !
எனை அறிந்தவன் நிறைவோடு வாழ்வான் !
நிறையுடையோன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment