10-05-2018
என் நாவிலே ச்ருதி உண்டு ! நாயகன் விண் படைத்தோன் என் நெஞ்சில் உண்டு ! நாளெல்லாம் ஆனந்தம் தரும் என் அன்பின் அன்னை வசியாவும் உண்டு !
ஒன்றை கொடுத்தான்.
மேலிருந்து உன்னிடம் ஒரு பொருள் தந்து அனுப்பினார் என் தந்தை பிரபஞ்ச நாயகன் ! நீ அதை உபயோகிக்க தெரியாமல் உருக்குலைந்து போனாய். காலம் தான் அந்த பொருள். காலம் தான் உனை உணர வைக்கும். காலம் தான் உன் சொத்து ! அந்த காலத்தை விரயப்படுத்தி விகாரமானாய். ஏனடா ?
காலம் தான் கடவுள் என்பதை மறாவாதே ! மூன்று காலத்திலும் முதல்வனோடு இருப்பவன். ஆறு காலத்தில் ஆனந்தமாக நிற்பவன் ! நானே காலம் ! நீ காலத்தை மறந்து காலனுக்கு இரையாகினாய் !
கடந்த காலத்தை நினைத்து எதிர்காலத்தை எண்ணி பயந்து இன்று நடக்கும் நிகழ்காலத்தை மறந்தாய். இன்று இருக்கும் இறப்பே நீ ! இன்னொன்றும் முக்கியமாக தந்தார் ! ஆனால் மனிதன் மறந்தான். பொன் தரவில்லை , பொருள் தரவில்லை என்று புலம்புகிறான். ஆனால் உயரிய அறிவை தந்தான் என் தந்தை . அறிவை விரிக்காமல் ஒடுங்கி போனாய். கல்லறையிலே மீண்டும் பிறப்பதற்காக !
பூமியில் எதுவும் இல்லாமல் வாழலாம் ! ஆனால் புனித நீர் தந்தாரே, என்றாவது நன்றி சொன்னாயா ? படைத்த பொருள் எல்லாம் உனக்காகத்தான் ! ஆனால் படைத்ததில் மிக உயர்ந்தது சத்திய பெண்கள் தான் ! எதையும் அனுபவிக்க தெரியாமல் ஆளத் தெரியாமல் மாண்டு போகிறாய்.
எல்லாம் தந்தான் உயிர் வாழ ! பாவமடா நீ ! உயிரற்ற சட பொருளை வேண்டி நிற்கின்றாய் ! காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது என படித்தாய். ஆனால் நீ காலமும் அறியவில்லை ! கடமையும் அறியவில்லை ! குறை, குறை என்று வாழ் நாளெல்லாம் குமுறுகிறாய் !
நிறையுடையோன் உன்னுள் ! இதை ஏன் மறந்தாய் ? கடவுளிடம் எதுவும் கேட்காதே ! எப்போதும் நன்றி சொல்லும் மன நிலையில் உனை கொண்டு வா ! எல்லாம் உனக்கு வசமாகும் ! காலம் தந்த நாயகன், உண்ண உணவும், உடுக்க உடையும் , நீரும் , தானியமும், உறங்க இடமும் தந்தான் பரமபதன் யாகவன் சுயநலமில்லா அன்னையை போல !
உன் பாவத்தை, கர்மத்தை கரைக்க வழி சொல்லி தந்து அதை சுமக்கவும் செய்தான் தூயவன் என் யாகவா ! எனக்கும் கற்று தந்தார் ! என்றாவது கடவுளுக்காக கண்ணீர் சிந்தினாயா ? உலகில் உயர்வானது ஒன்று தாய்மை ! இன்னொன்று கடவுள் ! இருவரும் உன் சுமையை சுமப்பவர்கள் !
இந்த தூய உச்சத்திற்கு என்றும் நன்றியோடு இரு ! காலம் உன் காலடியில் வரும் உன் மனம் அழுக்காகி அனர்த்தமாகியிருக்கிறது. அதனாலே கடவுள் உன் கண்களுக்கு தெரிவதில்லை. கடவுள் நீக்கமற நிறைந்திருக்கிறான் காலத்தில் சூட்சுமமாய் !
எல்லா இடத்திலும் இன்முகமாக இருக்கின்றான் ! ஆனந்தமானவன் என் அருகிலே ! ஆளுமையோடு உணரடா, உண்மை நானென்று !
காலம் என் வலக்கரத்திலே !
வா காலத்தை வெல்லும் சூட்சுமம் அறிவாய் என் நாமத்தில் !
காலம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment