24-05-2018
மனதிலிருந்தே உன் பாவம் உருவாகின்றது. மனம் தான் உன் இந்திரியங்களை கெட்ட வழியில் அழைத்து செல்கிறது. மனம் தான் உன்னை மீண்டும் பிறக்க வைக்கிறது.
மனம், மணம், மனனம்
இங்கே ஒழுக்கத்தில் நிறைந்தவனுக்கு மனம் அடிமையாகிறது. மனதை உன் அடிமையாக்கு ! மனதிடம் அடிமையாகாதே ! தீய பாதையில் பயணிப்பவன் நிம்மதி அடைவதில்லை. ஒரு நாள் விரதம் இருந்து, ஒரு நாள் ஒழுக்கத்தில் இருந்தால் உனக்கு நிம்மதி வருவதில்லை. மனதை என் கொட்டிலில் கட்டு ! தீமையான நோக்கத்தில் எதையும் அணுகாதே !
மணம் என்பது உன் பிரானனுக்கு உகர்ந்தது ! கடவுள் நிலை அறிய வைக்கும் தத்துவம். உன் உணர்வுகளும், உணர்ச்சிகளும் படைப்பின் சூட்சுமத்தை அறிய வைக்கிறது. பூக்களின் மணம் உனை மென்மைக்கு அழைத்து செல்கிறது.
எப்போதும் நல்லவற்றை மனனம் செய் ! எப்போதும் நல்லதை நினை ! பேசு ! எனக்கு மனம் என்பதில்லை ! நான் ஆன்ம வழி நடப்பதால் நான் ஆனந்தமாக இருக்கிறேன். தன்னம்பிக்கை உள்ளவன் எதற்கும் அடிமையாகமாட்டான் ! நீ யாருக்கும் அடிமையாக இருக்க நினைக்காதே ! அன்புக்கு அடிபணிந்து பார் ! ஆரோக்கியம் உருவாகும்.
மனம் தான் உன்னை கீழ்நிலைக்கு அழைத்து செல்கிறது. காமத்திலும் மோகத்திலும் உனை பணிய வைக்கின்றது. திருமணமும், குழந்தைகளும் ஆனந்தம் என்று இயற்கை உன்னை ஏமாற்றுகிறது ! ஆசையை உருவாக்கி உனை மீண்டும் பிறக்க வைக்கிறது. வாரிசு வேண்டும் என்று அலைகின்றான் மானுடன். ஆனால் தன் பாவத்தையே பூமியில் விதைக்கின்றான் என்பதை அறியாமல் வாழ்கின்றான்.
மணத்தை (சுவாசம்) உற்று நோக்கு. பூக்களின் வாசமும், பூமியின் வாசமும், மழை நீரின் வாசமும் உனை அறிய வைக்கும் ! இங்கே எல்லை இல்லா ஆனந்தம் உண்டு. அறிந்தவன் உணர்ந்தவன் இன்பமடைகிறான்.
சத்தியம் தவறுகின்றவன் மனதால் பாவம் செய்கிறான் !
மனதால் செய்யும் பாவத்திற்கும் தண்டனை உண்டு. நீ எப்போதும் என் நாமத்தை மனனம் செய். உன் மனம் அடங்கும். மனமே சகலமும் ! அந்த மனம் என் காலடியிலே ! நீ உருபெற நான் நரமாமிசத்தால் உருவானேன்.
உணரடா உனக்கு ஞானமிருந்தால் ! ஆசில் என்பது நீ ஒழுக்கமாக இருப்பது தான். சத்திய பாதையில் நடந்து உன்னை உயர்த்துவது தான் என்பதை புரிந்து கொள் !
நான் உன் ஆன்மா !
நான் இநன்யா !
No comments:
Post a Comment