to INANYA MAHA MUNIVAR
17-05-2018
கணவத்தின் வேர் ஆளுமைமிக்கது. எதற்கும் பயப்படாது ! செலதன் வேர் உன் ஆண்மையை சுத்தமாக்குவது. நீ வேரை மறந்தாய் வேதனை கொள்கின்றாய் !
வேர் !
வேர் !
வாழ்க்கையை கற்று கொண்டால் தான் வாழ பிடிக்கும் ! எந்த ஒரு கருவியையும் அடிவரை கற்று கொண்டால் தான் சுகம் கிடைக்கும். எதிலும் ஆழ்ந்து விடு ! தீய எண்ணத்தால் அல்ல ! கடவுளின் பேரன்பில் ! வாழ்வும் அப்படித்தான் !
வாழ்க்கையை கற்று கொண்டால் தான் வாழ்வு ஆனந்தாமாக இருக்கும் ! ஆனால் நீ அன்பை கற்கவில்லை. அறிவை கற்கவில்லை. பிறரையும் பிறர் வரலாற்றையும் கற்று கொள்ள நினைக்கின்றாய். ஆழ மூழ்கி முத்தெடுத்தவன் இங்கே குறைவு. வாழ தெரியாதவர்கள் இங்கே நிரம்ப கண்டேன் !
நீ வாழ்வை ஆராய, ஆராய உனக்கு மிரட்சி வரும். பின் பூரிப்பு வரும். மரத்தின் வேராய் இரு ! எல்லாவற்றையும் தாங்கி பிடித்து மண்னோடு இணக்கமாக இருந்து மரத்தை அண்ணாந்து பார்க்க வைக்கும் வேர் வலிமை தானே ?
மரமாக இருக்க ஆசை கொள்ளாதே ! மனிதன் வெட்டி சாய்த்துவிடுவான். வேராய் இரு ! மீண்டும் துளிர்க்கலாம் ! மறைந்து இருந்து மரத்தை தாங்கி பிடிக்கும் ஆணி வேராய் இரு ! மரத்தின் வேர் நீரை தேடுவது போல நீ அறிவை தேடும் வரை தான் நீ உன்னை மிக புத்திசாலியாக நினைப்பாய் ! ஆனால் நீ அறிவானவன் என உணரும் போது நீ ஒன்றுமில்லா பூஜ்யம் என நினைப்பாய் !
இயற்கை, கடவுள், உன் சிருஷ்டி மிக ஆச்சரியம் தான் ! நான் வேராய் இருக்கிறேன். என்னுள் எத்தனை கோடி மரங்கள் இருப்பதை அறிவாயோ நீ ?
இயற்கை, கடவுள், உன் சிருஷ்டி மிக ஆச்சரியம் தான் ! நான் வேராய் இருக்கிறேன். என்னுள் எத்தனை கோடி மரங்கள் இருப்பதை அறிவாயோ நீ ?
கடவுள் இல்லை என்று பிதற்றாதே !
மதம், இனம், ஜாதி என்று பிரித்து உன்னை வளர்க்க நினைக்காதே ! கடவுள் மரத்தின் வேரைப் போல மறைந்திருக்கின்றான். நீ அறியாமல் கடவுள் இல்லை என்று பிதற்றலாகுமோ ?
எதுவும் இங்கு இழப்பல்ல ! இயல்பாய் இரு !
இயல் (சக்தி) நான் ! இசையும் (மூச்சு) நான் ! உனை இயக்கும் சூட்சுமமும் நான் ! நான் கற்றவனல்லை ! கற்பினையற்று உனக்கு உணர்ச்சியூட்டுகிறேன். எதையும் படித்து உனக்கு பாடம் நடத்தவில்லை. எனக்குள் எல்லாம் விரிந்து கிடக்கிறது. நான் சுயம்பு. எனக்கு குரு யாருமில்லை ! நானே குருவாய் இருந்து என்னில் கற்றேன். மயக்கமில்லா வாழ்வை மடியில் வைத்திருக்கிறேன் !
தெரிந்த அன்பும், திறனுள்ள பற்றும் என்னுள் !
என் அடிமுடி காணாது போனாய் ! கணவத்தின் வேர் பயமில்லாதாது. எதற்குள்ளும் துணிந்து ஊடுறுவும். ஆனால் அன்புமிக்கது. உன் உடலை பக்குவபடுத்தும் சூட்சுமம் அதில் உண்டு.
என் அடிமுடி காணாது போனாய் ! கணவத்தின் வேர் பயமில்லாதாது. எதற்குள்ளும் துணிந்து ஊடுறுவும். ஆனால் அன்புமிக்கது. உன் உடலை பக்குவபடுத்தும் சூட்சுமம் அதில் உண்டு.
நாயுருவி வேரில் நயம் பயக்கும் சூட்சுமம் உண்டு ! தும்பை வேரில் உன் துயர் துடைக்கும் சூட்சுமம் உண்டு ! வாழை தூறில் வாதம் போக்கும் சூட்சுமம் உண்டு ! எல்லா வேரிலும் இன்முகம் தானுண்டு ! ஆனால் மனிதன் வேர் கொண்ட மரத்தை வெட்டி சாய்த்து தன் சந்ததியின் வேரை வளர விடாமல் செய்கின்றான்.
வேர் (மூலம்) எனக்குள்ளே !
மூச்சை தடுத்து நிறுத்தும் வேதமும் எனக்குளே !
ஆறும் எனக்குள்ளே !
அரசாட்சி புரியும் ஆளுமையும் எனக்குள்ளே !
உணர் ! உனக்கு ஞான செருக்கிருந்தால் !
மூச்சை தடுத்து நிறுத்தும் வேதமும் எனக்குளே !
ஆறும் எனக்குள்ளே !
அரசாட்சி புரியும் ஆளுமையும் எனக்குள்ளே !
உணர் ! உனக்கு ஞான செருக்கிருந்தால் !
ஆணி வேர் நானடா !
நான் இநன்யா !
No comments:
Post a Comment