கூர்ப்பம் அறிந்தவன் சீடமணி வாழ்வை வைத்து மமதையால் வாழ்கின்றான், ஈன்றவளை தான் மறந்து !
மௌனம் ;;;;;;;
உலகில் மிக வலிமையான வடிவம் மௌனமே ! ஆனால் மௌனம் தெரியாது வஞ்சவம் எண்ணம் கொண்டு வாழ்கின்றான். மௌனம் என்பது வாய் மூடி இருப்பதில்லை. ஐம்புலன் அடக்குவதே மௌனம் ! அதுவே தியானம் ! யோகம் என்பது கடவுளை மட்டும் நினைப்பது அல்லாமல் மூச்சை நிறுத்தி மூடனாக திரிவதல்ல !
நான் எல்லாம் அறிய சிறு வயது முதல் மௌனமாக இருந்தேன். அற்ப சுகம் எல்லாம் அரை நாழிகை என்பதை புரிந்தேன். நான் யார் என்பதை அறிந்து உணர்ந்தேன். சிருஷ்ட பீஜம் என் வலக்கரத்தில் இருந்தும் மௌனமாக இருக்கின்றேன். மௌனம் தான் வலிமையானது !
என் மௌனம் காற்றை (உயிர்) நிறுத்தும் ! கடல் அலையை உசுப்பும் ! கரை தாண்டி சுழலச் செய்யும் ! சூறாவளியாய் இடி மின்னலாய் பொழிய வைக்கும் ! தர்மத்தை காக்கும் !
மௌனம் என்பது வாய் பேசாமல் இருப்பது அல்ல. ஏழு வீடு ஒன்பது வாசல் வைத்தான் ! அதில் ஐந்தை அடக்குவது தான் மௌனம். ஐந்தை அடக்க பழகினால் ஏழில் முற்று பெறும் ! பின் ஒன்பதில் நிலை பெற்று முக்தி தரும் ! முக்தி பெறும் சக்தி இருந்தும் தன்னை மறக்கின்றான். தனக்குள் கடவுள் தன்மை இருப்பதை மறந்து எண்ணற்ற பாவம் செய்கின்றான்.
மௌனம் எதையும் சாதிக்கும் ! ஆனால் கடவுள் துன்பம் கொடுத்து பக்குவப்படுத்தினால் மனிதன் கதறுகிறான். எல்லா சுகமும், நிம்மதியும் வேண்டும் என்று நினைக்கின்றான். இங்கே ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் ! அடக்கி ஆள தெரியாதவன் ஆளுமை தேடுகின்றான். உயிர் நிலையை அறிந்து கொள்ளாமல் ஆண்ம நிலையை அறிய முயல்கின்றான்.
மூச்சுக்கும், மனதிற்கும் சம்பந்தம் உண்டு. எண்ணங்கள் குறுகினால், அற்ப ஆசையில் மூழ்கினால் மனம் வலிக்கும். வலி மூச்சில் உஷ்ணமாய் வெளியேறி தன்னை எறிக்கும். எத்தனை யோகா, தியானம் நீ செய்தாலும் உன் மனதை அடக்க முடியாது. ஒரு நல் குருவை தேடி சரணாகதி அடைந்து உணர முயன்று பார்.
வெட்ட வெளியில் பல பேர் கூடி மூச்சை இழுத்தால் மூடனாகத்தான் திரிவான். எல்லாம் ரகசியம் !
எந்த குரு உன்னை தனிமைப்படுத்தி உன் பற்றை நீக்கி, மௌன உணர்வை சொல்கின்றானோ அவனே நல் குரு ! குருவை அறிய கோடி தவம் வேண்டும் !
உன் பெற்றோர்கள் கடவுள் தருவது ! ஆனால் உன் குருவை நீ தேடி சென்று அடையப் பார் ! உன் தர்மம், சத்யம் சரியாக இருந்தால் குரு உனை தேடி வருவான் ! உன் மனம் ஒருவரை குருவாகவோ, கடவுளாகவோ ஏற்றுக் கொண்டால் எந்த இடையூறு வந்தாலும், இறுதி வரை நம்பிக்கையுடன் இரு ! இறப்பே வந்தாலும், சத்ய வழி மாறாமல் சாதிக்க பழகு. எல்லாம் நொடிப் பொழுதில் மாறிவிடும் !
ஏன், எதற்கு என்று கேளாமல் உன் துன்பத்தை எதிர் கொள்ள பழகு ! பின் குரு உனக்கு ஞானோபதேசம் செய்வார். கடவுள் குருவாய் வருவார். அதற்கு நீ குறையில்லாத உப்பை போல இரு !
சூரியனிலும், சந்திரனிலும் கரும்புள்ளி உண்டு. குறை உண்டு ! ஆனால் நீரிலும், உப்பிலும் குறை இல்லை ! முறையாக நீ உணர்ந்தால் குறையில்லா வாழ்வு குரு மூலம் தேடி வரும். புலன்களை கட்டவிழ்த்து கரை சேரா தவிக்கின்றான். கோபம் உன்னை கொல்லும். ஆதலால் மௌனமாக இரு !
மனதை ஒரு நாழி கூட வசப்படுத்த சொல்லித்தராதவன், தியானம், யோகா என்று கூட்டத்தை கூட்டி கூவுகின்றான், குறையான மனதை வைத்து கொண்டு !
கற்று கொடுத்தால் வராது கடவுள் நிலை. மௌனமாக இரு ! கடவுள் உன்னுள் கலந்து உறவாடுவார் !
உலகில் வலிமையான வடிவம் மௌனமே ! ஆதலால் மௌனமாக இரு !
மௌனி நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment