மனம், ஆழ்மனம் என இரண்டுண்டு. இதில் மனம் சஞ்சலப்படக்கூடியது. இது புற வாழ்க்கைக்கு மட்டுமே லாயக்கானது. ஆழ்மனம் மட்டுமே ஆற்றல்களை பெறும் தகுதி வாய்ந்தது. இது மனதையும் கட்டுப்படுத்தும் சக்தி பெற்றது. இந்த ஆழ்மனதை நம் நெற்றிக்கண்ணுக்கு நிலையாக இருக்க முன் நிறுத்தினால் பல அதிசயத்தக்க நிகழ்வுகளையும் தகவல்களையும் தருவதோடு சித்த சாதனை செய்ய வைக்கும். ஆக இந்த ஆழ் மனதை நாம் முன்நிறுத்த முயற்சிக்கும்போது மனமானது பல இன்னலான கேள்விகளை கொடுத்தும் புதிய புதிய சந்தேகங்களை உண்டுபண்ணியும் ஆழ் மனதை செயல்பட விடாதபடி தடுக்கப்பார்க்கும். இந்த மனதை அமைதிப்படுத்த ஒரே வழி புற ஆசையை வெறுக்க வேண்டும். அல்லது ஒதுக்க வேண்டும். ஆசைகளிடம் மனம் போகாமல் மனதைக் கொண்டே மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதை செய்தால் மனமானது ஆழ்மனம் முன்வந்து ஆக்ஞா சக்கரத்தில் நிலைத்து நிற்க தடை செய்யாது. ஆழ்மனம் வந்து நின்றுவிட்டால் அதில் எந்த சக்தியை அழைத்தும் பேசமுடியும்.இதுதான் வாலை.
நீங்கள் எந்த சக்தியை நினைத்து தியானிக்கிறீரோ, எந்த உருவத்தை நினைத்து தியானிக்கிறீரோ, எந்த மந்திரத்தை நினைத்து தியானிக்கிறீரோ அவையெல்லாம் உங்கள் விருப்பம். ஆனால் ஆழ் மனம் ஆக்ஞா முன்வந்து நின்றால் மட்டுமே பலன்.
இன்னும் ஒரு உண்மையை சொல்லப்போனால் தெய்வ உருவம், யந்திரம், மந்திரம், விளக்கு பார்த்தல், கரும்புள்ளி பார்த்தல் எல்லாமே ஆழ்மனதை முன் நிறுத்தத்தான். யார் யாருக்கு எதன்மேல் பிரியமோ? எதன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையோ, எதை மனம் ஏற்கிறதோ அவையெல்லாம் ஆழ் மனதை பாதிக்காதவை ஆகும்.
இன்னும் ஒரு உண்மையை சொல்லப்போனால் தெய்வ உருவம், யந்திரம், மந்திரம், விளக்கு பார்த்தல், கரும்புள்ளி பார்த்தல் எல்லாமே ஆழ்மனதை முன் நிறுத்தத்தான். யார் யாருக்கு எதன்மேல் பிரியமோ? எதன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையோ, எதை மனம் ஏற்கிறதோ அவையெல்லாம் ஆழ் மனதை பாதிக்காதவை ஆகும்.
எனவே ஆக்ஞாவில் பிடித்ததை வைத்து உற்று நோக்கும் போது ஆழ் மனம் அமர்ந்து நிலைத்து விடும். இந்த ஆழ்மனதால் மட்டுமே நெற்றிக்கண் திறக்க முடியும். ஆழ் மனதில் மட்டுமே தெய்வ சக்தியாகட்டும், அசுப சக்தியாகட்டும் எதுவுமே வந்து பேச முடியும். இதுதான் வாலையின் பரிபூரண இரண்டாம் நிலை அருளாகும்.
No comments:
Post a Comment