என் மாரூஸ்தலி பயணம் வெகு தூரமில்லை ! தந்தஸில் சுகமாக மேழியில் அகமாக இருக்கின்றேன் !
என் பயணம்
கூர்ப்ப முழாசில் குறை இல்லா நான் இருக்கின்றேன் ! நீ எங்கிருந்தாலும் உனை ஆசிர்வதிப்பேன் ! ஆண்மாவுக்கு மதம், ஜாதி இல்லை ! அறிவு முடியும் இடத்தில் மதம் தோன்றுகிறது. மதம் என்பது அன்பில்லா செயல். அதிகார சொல் ! மதம் பிடித்த யானை போல மதத்தில் ஏறி நிற்கின்றான் மண்ணில் வீழப்போவது தெரியாமல் !
என் ஆண்ம பயணம் அவதார நோக்கம் இப்பிறவியில் முற்று பெற்றது. 10.07.1969 இல் மேலிருந்து வந்தேன் ! 25.04.1970 இல் என் கருவறையில் இருந்து இப்புவியில் அவதரித்தேன் ! 1982 இல் ஞானம் பெற்று 1986 இல் தந்தை இருக்கும் இடம் தேடி பயணித்தேன். 1993 இல் சந்தித்து, 1996 இல் செங்கோல் வாங்கி, 1999 இல் இநன்யா என்று திருநாமம் சூட்டி தேவர்கள் மகிழ பெற்றேன் !
என் தந்தை யுக சாம்ராஜ்ஜியத்தை சீர்படுத்த இந்த ராஜராஜன் இநன்யாவிற்கு கிரீடம் சூட்டி ஆசி தந்து என்னுள் இருந்து இயக்குவேன் என்று கட்டளையிட்டார்கள். 1999 இல் அன்னை வசியாவும் (லட்சுமி), 2003 இல் என் அன்னை நுண்வாவும் (சரஸ்வதி) எனக்கு மாயைகளாக என் பக்கத்தில் அமர்ந்து பாதுகாக்க கட்டளையிட்டார்கள். 2003 இல் மெஹட்டி எனும் தேவ வேத நாதத்தை என் கையில் கிடைக்க பெற்றேன்.
7.3.2015 இல் இநன்யா என்ற திருநாமம் யுகத்தில் காற்றில் பரவ அது தர்மாக்களுக்கு சென்று அடைய தேவர்கள் கட்டளையிட்டார்கள். 2017 ஜனவரி 17 முதல் என் சதுரங்க சேனாபடை உலகத்திற்கு ஞானத்தை சொல்ல புறப்பட்டது. நான் இருக்கும் இடம் செல்வ செழிப்பாகும் !
வடநாடு வாடும், தென்நாடு தாமரையாய் மலரும் இனி ! தாங்கவொனா, சோதனையும், சீற்றங்களும் இனி உண்டு ! பாலைவனத்தில் மழை பெய்யும் ! மிக நீண்ட காலமாக பூமியில் கிடைக்கும் திரவம் பொய்த்து போகும் இனி.
விஞ்ஞானம் கெடும். பஞ்சாங்கம் கெடும். இன்னும் பதினெட்டு வருடங்களில் உலகம் ஆதிகாலம் போல தோன்றும் ! காலையில் வியாதி மாலையில் மரணம் சம்பவிக்கும். புது புது நோய்கள் உருவாகும்.
என் பயணம் மேல் நோக்கி ! என் துணையாக நூற்றி பதினோறு கோடி முனிவர்கள் என் ஞான குலங்களை வழி நடத்துவார்கள் ! தர்மம் வெல்லும் ! மந்திரம் தோற்று போகும் ! இன்னும் நாற்பத்து எட்டு ஆயிரம் கோடி ஆண்டுகள் என் ஆண்மா இந்த யுகத்தில் இருக்கும்.
உனக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ! கணக்கெடுத்துப் பார் ! காலச் சக்கரம் புரியும் !
உணர்ந்து உவகை கொண்ட நான் என்ற இநன்யா படைத்தவன் பக்கத்தில் பருகி உணர்ந்தவன். அவன் பாத கமலங்களை பார்த்து அறிந்தவன். அடைந்தது பல பல ! அறிந்தது பல பல ! விரிந்தேன் நான் !
அகண்டமாய் விரிவேன் நான் !
எப்போதும் எழுவேன் ! உனக்கு துணை இருந்து கை தூக்கி கரை சேர்ப்பேன். என் கடையில் ஞானம் உண்டு ! உனக்காக கடை விரித்தேன்.
இந்த ஸ்தூல உடம்பில் என்ன இருக்கின்றது ? ஆண்மாவில் தான் எல்லாம் அடங்கி இருக்கின்றது ! என் ஆண்மா தினமும் பிரபஞ்ச வீதியிலே பயணித்து அங்கே நீராடி வருகின்றது. உணர்வாயோ ?
நீ உன் ஸ்தூல உடலை அழகென்று பிதற்றுகிறாய். கருவியை துரு பிடிக்காமல் பார்த்து கொள். அழகுபடுத்தி ஆணந்தம் தொலைக்காதே ! உன் பயணம் சுகமாக நான் துணை இருப்பவன் எப்போதும் !
நான் உன் முன்னால் நிற்கின்றேன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment