நான் எதிரிலி ! என் ஏற்றனை உனக்காக காத்திருக்கிறது ! எப்போது உணர்வாயடா ?
தேடுகின்றேன்
பொல்லா உலகில் நல்லோரை தேடுகின்றேன். தர்மத்தின் சாயல் இருந்தாலும் கர்ம எண்ணங்களோடு உணர்வில்லா திரியும் கர்ம மனிதர்களையே யுகத்தில் நிறைய கண்டேன். நான் யுகத்தை மாற்ற வந்தேன். மனிதன் மாறுவான். போகின்ற வழி தெரியாமல் புத்தி பேதலித்து அலைகின்றான். நான் கைபிடித்து கரை சேர்க்க நினைத்தால் குழம்பி திரிகின்றான். மனம் நிறைய வஞ்சவ சாயல் வைத்து என் நாமம் சொல்கின்றான். தன் துன்பத்திற்கும், வீட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு கடவுளை குற்றம் சொல்லி காலத்தை விரயமாக்குகின்றான்.
எப்பொழுது தன் துன்பத்திற்கு தானே காரணம் என்று புரிந்து தெளிவடைகின்றானோ அன்றே மலர்வான். வாழ்வில் மாற்றம் காண்பான். மாரூஸ்தலி பயனம் எளிதாக்க இங்கே யாரும் அறிய முற்படவில்லை. என்ன உரைத்தாலும், ஏது கற்றாலும் ஏதோ விரக்தியில் வாழ்கின்றான். இறப்பும், பிறப்பும் புரியாது பேதலித்து வாழ்கின்றான். வாழ்வதா, சாவதா என்று புரியாமல் விரக்தியில் வாழ்கின்றான். துன்பத்தை எதிர் கொண்டு வாழ்வை எளிதாக்க இங்கே யாருக்கும் துணிவில்லை. கோழை போல வாழ்வை துறக்க நினைக்கின்றான்.
கோமாளியைப் போல வாழ்கின்றான். தன் குறை பார்க்காமல் பிறர் குறை தேடி புலம்பி திரியும் மானிடா, உன்னை எப்போது தேடுவாயடா ? தன் குடும்பம், தன் பொருள், தன் வீடு என்று சுயநலமாக வாழ்கின்றான். ஆனால் துன்பம் வந்தால் என்னை குறை சொல்லி திரிகின்றான்.
நான் அகண்டமாய் விரிகின்றேன் ! ஆளுமை என்னுள் இருப்பதை புரியாமலும் என்னுள் இருக்கும் ஞானத்தை எப்படி அடைய வேண்டும் என்று அறியாமலும் வாழ்கின்றான்.
தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட நூறு நல் ஆத்மாக்களை தேடிக் கொண்டிருக்கின்றேன். இந்த யுகத்தை நல் யுகமாக மாற்றுவேன். என் நூற்றி பதினோரு கோடி முனிவர்களின் துணையோடு என் சதுரங்க சேனா படை தலைமை ஏற்று சதிராட எதிர் நோக்குகிறேன். தைரியமும், தன்னம்பிக்கையும், விவேகமும், வேகமும் கொண்டவனை தேடுகின்றேன்.
உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் ! சோர்வாய், விரக்தியில் இருப்பவனிடம் செல்வம் தங்குவதில்லை. வாழ்வின் பாதை தெரிவதில்லை.
நான் முற்றும் துறந்தவன் ! முழுமையின் வடிவம் நான் ! அரசு போல் ஆள்பவன், ஆல் போல தளைத்து வாழை போல் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவன். எனை அறிந்தவன் வாழ்வான் !
நீ நலமாக இருக்க தினமும் பிரபஞ்சம் சென்று என் அரசாங்கத்தில் முறையிடுகின்றேன். கோழை போல் வாழாதே ! உன் வீரியம் கல்லறை வரை இருக்கட்டும். உன் பெயரை வரலாற்றில் பதிய வை ! நீ முயற்சித்தால் நான் உனக்கு துணையாக வருகிறேன். ஆனாலும் வீரிய மிக்கவனையும், தன்னம்பிக்கை உள்ளவனையும் என் வாயிலில் நின்று எதிர் நோக்குகின்றேன்.
எப்போதும் விரக்தியோடு இறப்பை பற்றி நினைப்பவனை என் நெஞ்சில் நிறுத்துவதில்லை. என் தந்தை யாகவா தனது ஐம்பத்து நான்கு பிறவிகளிலும் நல்லோர்களை நான் காணவில்லை என்று சொன்னார்கள் ! ஆனால் நான் நல்லவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் காட்டுகிறேன் என்று 1999 இல் வாக்கு கொடுத்திருக்கின்றேன். நிச்சயம் நூறு வலிய, வீர , பராக்கிரம செயல் வடிவம் கொண்ட நல் ஆத்மாக்களை பார்ப்பேன் !
நான் சோதிக்க வரவில்லை. உன்னை சாதிக்க சொல்லவே வந்தேன் ! ஞானத்தை கொடுத்து உலகை மாற்றும் யுக்தியை சொல்லித் தர வந்தேன். வாய் மூடி, விழி மூடி, செவி மூடி, உன் மூடி எப்போது உணர்வாயடா ? மண் மூடி போகும் முன் என் மூடி எப்போது அறிவாயடா ?
உனை தட்டி எழுப்பவே இந்த யுகம் வந்தேனடா ! நான் தேடுகின்ற நல் ஆத்மாக்களில் நீயும் ஒருவனாக இருக்க ஆசைப்படு ! அத்தனை பேரின்பமும் உன் காலடியில் இருப்பதை உணர்வாய் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment