இனி சிறுவிலை தான். பெரு நிலை அறிவான். பெருமைமிகு சூத்ரம் என் கையில் ! உண்மையில் நன்மை நானடா !
படைத்தான் நன்றாக
என் தந்தை எனக்குரைத்தது, சகலமும் நான் தான் என்று !
முதலில் வேத நாதத்தை படைத்து பின் அண்ட சராசரங்களை படைத்தான் ! உயிர் படைத்தான் ! விதை படைத்தான் ! புணித நீரும் படைத்து காற்று என்ற ப்ரணத்தை தான் படைத்தான் ! விண்மீன்களையும், நட்சத்திரங்களையும், வெள்ளியையும், கோள்களையும் தான் படைத்தான். வெப்பத்தை தான் படைத்து அதை பக்குவமாக தான் வளர்த்தான். விதையின்றி பயிராகும் உப்பை தான் படைத்து, மரம் படைத்து, செடி கொடி படைத்து எண்ணற்ற ஜீவாராசிகளை தான் படைத்தான் ! கருவூல பெட்டகத்தில் பக்குவமும், பருவமுமாக காலத்தில் தான் படைத்தான் !
எண்ணற்ற ஜீவ கோடிகளை ஈன்றவன் என் அப்பன் ! அவன் என் இதய சாம்ராஜ்யத்திலே ! பாசத்தோடு என் இதய கருவறையிலே ! அவன் நிறை யாருக்கு உரைப்பேன் ?
எல்லா உறுப்புகளையும் மறை பொருளாக வைத்து செவிகளை மட்டும் திறந்து வைத்தான். ஏன் என்று உணர்வாயோ நீ ? எல்லா உறுப்புகளும் இரண்டு இரண்டாக வைத்து மூன்று உறுப்புகளை மட்டும் ஒன்றே ஒன்றாக வைத்தான். ஏன் என்று யோசி !
ரகசியத்தின் ரகசியமானவா ? என் அழகானவா ? ஏன் என்று அறியாமல், புரியாமல் வாழும் இந்த வம்பு பேசும் மானிட பதர்களை என்னவென்று சொல்வேன் ?
பசு, கழுதை, நாய், பறவைகள் இதற்கெல்லாம் வேதம் தெரிகின்றது. உன்னையும் தெரிகிறது. என்னையும் தெரிகிறது. எல்லாம் கற்றேன், எல்லாம் தெரியும் என்று விளம்பும் இந்த அற்ப மனிதனுக்கு மட்டும் தான் எதுவுமே புரியவில்லை. நான் ஏதென்று உரைப்பேன் ?
நான் என்பதை தன்னில் வைத்தான், நாயகன் உனை புரியாமல் ! நாம் என்று என்னுள் உன்னையும், என்னையும் அறியாமல் ! வாழ்வை தொலைத்தான். வசந்தத்தை அறுத்தான். வசந்தகாலம் நான் என்பதை புரியாமல்.
உன்னை மறந்துவிட்டான். என்னையும் மறந்துவிட்டான். புலம்பி திரிகின்றான். புத்தி கெட்டு போகும் வழி தெரியாமல் மூர்ச்சையாகி மூலையில் நிற்கின்றான் !
நம்பிக்கையின் அடித்தளம் உறவுகள் என்பதையும் மறந்தான். உறவுகளை புரிந்தால் உன்னை அறியலாம், பின் என்னையும் அறியலாம் என்ற புதிரை மறந்து அலைகின்றான்.
கடவுள் படைத்ததை வணங்காமல் மனிதன் படைத்ததை வணங்கி பாழ்பட்டு நிற்கின்றான். படைத்த வெப்பத்தை அக்னியாக்கி காலால் மிதிக்கின்றான். ஆனால் மனிதன் படைத்த மின்சாரத்தை தொட கூட முடியாமல் தவிக்கின்றான். பாவம் மனிதன் !
படைத்தவனை நினை !
நினைத்தால் இந்த ஆத்மத்தின் தலைவன் அறிய வைப்பேன். உருவ வழிபாட்டால் நூறு சத்ய மகான்கள் உருவாகினால் எனக்கு சந்தோஷம் ! உருவாகினால் வணங்கு ! இல்லையேல் யோசி !
உன்னை உணராமல் எதை வணங்கினாலும் பலன் ஒன்றுமில்லை ! பாதை தெளிவாக உணர முற்படு ! நான் போகின்ற போக்கில் உன் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்ல காத்திருக்கின்றேன் , சூட்சுமம், சூத்ரமும் உனக்கு கற்று தர !
என் சொல் சத்யம் !
என் செயல் சத்யம் !
என் நாமமும் சத்யமே !
என் செயல் சத்யம் !
என் நாமமும் சத்யமே !
உணர்ந்து உவகை கொண்டவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment