229 இகந்தம், உகந்தம் அறியா வாழ்கின்றாய், சுகந்தம் எனக்குள் இருப்பதை மறந்து ! அரியந்தம் என் மலர் கரங்களில் உணர் ! மாயவன் நானடா !
உனக்கு நான் இருக்கின்றேன் !
நான் விரும்பினால் உன் கூட்டுக்குள்ளே ! விரும்பாவிடில் யாக பிரஸ்தத்திலே ! நீ விரும்பினால் உனக்குள் நான் வருவேன். மேகவாயில் அள்ளி வைத்து அனைத்தும் உனக்குள் வைத்தேன். ஆனால் நீ வளர்வழி வாழ்வை போல வாழ்கின்றாய். சுகாசமித்தில் சுகம் ஒன்று வைத்தேன். வெண்மை உண்மை மறைத்தேன். தானிய சுகம் ஒன்றும் வைத்தேன். ஏனடா மறந்தாய் ? உயிருள்ள மூலிகை கையந்தரை உன் காலடியிலே, உற்று நோக்கி உணரடா !
நீ அழைக்கும் போதெல்லாம் உன் பக்கத்தில் நிற்கின்றேன். ஆணந்த தூறலாக உன் மேல் ஸ்பரிஷிக்கின்றேன் ! நீ உணராமல் இருப்பது ஏனடா ? வேண்டும் என்று அழைத்துவிட்டு நான் பக்கத்தில் வந்தால் என்னை மறக்கின்றாய்.
என் கரங்கள் அள்ளித் தரும் ! நம்பிக்கை கொண்டு கேள் ! நீ கேட்டது கிடைக்கும். வழிபாடுகளை தூக்கி எறிந்து வழிமுறைகளை கற்றுக் கொள். வசந்த காலம் நானடா ! எல்லாம் தருவேன். என்னுள் இருக்கும் அனைத்து சந்தோசமும், நிம்மதியும் உனக்கு தான் !
நீ உணராமல் உருக்குலைந்து உருந்து போகாதே ! உருவாக்கம் நானடா !
என்னை கடந்து போக நினைக்காதே ! என்னை அளந்து போக நினை ! உனக்கு மரக்காலில் முழு அளவும் அளந்து தருவேன். இராச சாரசத்தில் மகத்துவம் ஒன்றை வைத்து உனக்கு தந்தேன். உணர்ந்தவன் மட்டும் சாப்பிட்டு உன்னை மறந்தான். நிறை தருவதற்கு நீசமனம் இடம் தரவில்லை. உணரடா ! உனக்கு நான் தருகிறேன். உனக்கு செல்வம், நிம்மதி கொடுக்காமல் இருக்க போவதில்லை.
இந்த ராஜராஜன் இநன்யா உன்னை கடந்து போகவும் விரும்பவில்லை. உன்னை மறந்து போகவும் நினைக்கவில்லை. ஞான உணர்வு எப்போது வரும் என்றால் நோயில்லா உடல், இன்பம், துன்பம் அறியாது பற்றற்று இருப்பது, ஆசையே இல்லாது, எப்போது உனக்கு தோன்றுகிறதோ, அப்போது தான் உனக்கு தெளிவு வரும். திறன் இருந்தால் அரி !
எச்சில் பாலை சிலைக்கு செலுத்தி புணிதம் என்கின்றாய். வாய் எச்சில் தூவிரத்தை தூய்மை என்று பிதற்றுகின்றாய். உண்மை தான். உன் வரலாறு என்ன உணர்ந்தாயோ ?
நான் பெருங்கடல் (ஆண்மா). நீ அதில் வரும் கடல் அலை ! நீ மறைந்து போவாய். நான் அழிவதில்லை ! நான் நிரந்தரமானவன். உணர்வாயோ நீ ?
பதினென் தத்துவத்தில் நிகுலம்பில் என்னை அழைத்துப் பார் !
ஆகாசத்தில் பட்சிகளோடு நான் உலாவி வருவதை உன் ஊனக் கண்களால் பார்த்து அகமகிழ்வாய். பட்சிகளோடு உலாவுகிறேன். உன் பாழ்பட்ட கண்ணுக்கு தெரியவில்லை.
இந்த விடங்கனின் வேதவார்த்தைகள் சத்தியம் ! நீ தினமும் உள் வாங்கு ! உண்மையாய் உனக்கு அமிழ்தூட்டும். ஆணந்தம் தழைத்தோங்கும் தளைத்த மரம் சதுராட்டம் போடாது. உனக்கு உயிரோட்டம் தருவதற்கே ! ஆனால் நீ அதை உருகுலைக்க வைக்கின்றாய். நிஜம் நிழலை விரும்புவதில்லை.
ஆராய்ச்சி எண்ணத்தோடு என்னை அணுகாதே ! முழு நம்பிக்கையுடன் என்னை நோக்கு ! நான் உன் நம்பிக்கை, தன்னம்பிக்கை ! உனக்கு தோள் கொடுக்கும் உண்மை கை !
அறியாமை இருளை விலக்கு. அதை விலக்க போராடு ! என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்துவிட்டால் துன்பம் உன்னை எப்போதும் அணுகாது. எதையும் கேட்டு அறிவது சிறந்தது. அதைவிட நேரில் கண்டு உணர்வது தலை சிறந்தது. உன் நம்பிக்கை மரத்தின் விதை மண்ணை நம்பி இருப்பது போல இருக்கட்டும். ஆயிரம் மண் துகள் ஒரு அரசமரத்தின் ஆணி வேரை இறுக தழுவி முழு பலம் கொடுக்கின்றது !
உன் நம்பிக்கை தீவிரமாக இருக்கும் பட்சத்தில் நீ நினைக்கும் பொருள் உன் வீடு தேடி வரும். கடவுளை தவிர எல்லாம் இங்கு பொய். கடவுள் தான் அன்பின் உச்சம் ! அவன் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை. மெய்யானவன் இநன்யா வார்த்தை வேதம் ! சத்திய சொல் ! கடவுளின் நாமத்திற்கே இங்கே வலிமை. பூஜை, வழிபாடு ஒன்றுக்கும் உதவாது. உன் எண்ணம் போல் உன் பேச்சு இருந்தால் உன் சாதனை உன் காலடியிலே !
நீ சாதிக்க பிறந்தவனடா ! உன்னை சாதிக்க வைத்து உன்னை அழகு பார்க்க வந்தவன் நானடா ! உன் இலக்கை அடையும் வரை மரணத்தை பற்றி யோசிக்காதே ! உனக்குள் எப்போதும் நான் இருக்கிறேன் !
புற உலகில் காண்பதெல்லாம் பொய் தானடா ? நீ மெய் ! நான் மெய் ! என் வார்த்தையும் மெய் தானடா ? உனக்குள்ளே இருந்து சிரிப்பதும் நான் தானடா ?
மெய்யானவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment