230விசித்தியின் சசிகரத்தின் கோடியில் ஒரு அணு நானடா ! ஸ்வேத முழாசில் தூயவன் நானடா ! நான் மாயைகளோடு இருக்கின்றேன். மானிடரோடு அல்ல !
மாயவலை
நுணியில் புழு வைத்து மீனுக்கு தூண்டில் போட்டால் முள் இருப்பதை மறந்து புழுவை உண்பதற்கு ஓடி வரும், மாய வலையில் வீழ்ந்து மாளப்போவதை மறந்து ! தனக்கு விரித்த வலையில் வீழ்ந்து சாகப் போகிறோம் என்று அதற்கு தெரியாது ! அதே போல கடவுளின் மாய வலையில் கர்மாக்கள் சிக்கி திணறி தீஞ்சுடர் போல எரிகின்றான்.
இந்த இநன்யா யார் என்று தெரியாமலே நான் விரிக்கும் மாய வலையில் கர்மாக்கள் வீழ்ந்து நொடி நொடியாய் துன்பம் அனுபவிக்கின்றனர்.
இநன்யா விரிக்கும் வலை மாயவலை !
தர்மாக்களை வாழ வைக்கும் காந்த வலை !
கர்மாக்கள் வீழ்ந்து போகும் சாயா நிழல் போன்ற சதிவலை !
புரிந்து கொள்ளடா ! புணிதன் நானடா ! இநன்யா வைக்கும் பரீட்சையில் ஒரே முறையில் தேறிவிடு ! ஒரு முறை தவறவிட்டால் மறுமுறை பரீட்சை கடினமாக இருக்கும். என் பாச வலையில் வீழ்ந்தால் மீண்டும் பிறப்பில்லா உன் சரீரத்திற்கு நோயில்லா வலை கிடைக்கும் !
இரந்த நிலை கொண்டு இறையை தேடு !
இறைவன், ஆண்டவன், கடவுள் உனக்கு இறந்த நிலை அறிய வைப்பார்கள் ! பின் நீ உன் உயிர் நிலை அறிந்து பிறந்த நிலை அறிவாய் ! மாயை என்றால் என்னவென்று கேட்கின்றான். மேலிருந்து வரும் போது என்னை மறக்காமல் இருப்பதாக சொல்லி வந்தாய் ! நீ பாவம் கழித்து உடனே வந்துவிடுவாய் என்றும் சொல்லி வந்தாய் ! ஆனால் இங்கே வந்து, என்னை மறந்து, சம்சார கடலில் விழுந்து தத்தளிக்கின்றான் ! இந்த மாயவனை அறியாது வாழ்கின்றாய். நான் விரித்த வலையில் கர்மாக்கள் சிக்குண்டு சிதறுண்டு பிக்கில்லா போகக் கண்டேன்.
இனி தர்மாக்கள் வாழும் !
தர்மாக்களுக்கு பெருஞ்சோதனைகளும் துயர்களும் வந்தாலும் உடனே நீங்கிவிடும். கர்மாக்கள் அணு அணுவாய் அனுபவித்து உடல் சாகக் கண்டேன். மாயா லோகத்தில் நான் மாயைகளோடு வாழ்கிறேன். நீ மாயையில் சிக்கி தவித்து மனிதம் தொலைத்து அலைகின்றாய்.
கடல் அலை கரை தாண்டி வராதது மாயை ! மெல்லிய திரை ஒன்று உன்னில் மறைந்திருக்க அதை நீக்காமல் நீ வித விதமான சாயத்தில் ஆடை உடுத்தி அலங்கோலமாகத் திரிகின்றாய்.
நான் மாயை ! ஆனால் மனிதன் போல் நான் ! என் ஔடதம் தெரியாது ஆர்ப்பரிக்கின்றாய். எனக்குள்ளே ஆணந்தம் இருப்பதை புரியாது வாழ்கின்றாய். என் நாமம் கல்லையும் கவி பாட வைக்கும். கன இரும்பையும் நடனமாட வைக்கும். உணர்ந்து பார் மனித குலமே ! உணர்ந்து உவகை கொள்ளடா உன் உள்ளொலி உனை உற்று நோக்கும்.
உனக்கு வேண்டிய நிம்மதி, செல்வம், ஆணந்தம் அனைத்தும் தரும் ! பிணி , பீடை இல்லா வாழ்வை தரும் ! பில்லி, சூன்யம், பெரும் பகை அகல வைக்கும். எமபயம் போக்கும் ! ஆராய்ச்சி செய்யடா !
எந்த சனியும், எந்த கோளும் தீண்டாது. எந்த சாத்தானும் உன்னை தீண்டமாட்டான். ஆராய்ச்சி செய் !
என் ஆணந்த நாமத்தை உணர்ந்து சொல் ! உன் உறக்கம் கலைந்து உண்மையாய் தெளிவு வரும் !
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று சொல்வாய். நான் உனை திக்கற்றவனாக விடமாட்டேன். எட்டு திக்கும் வெற்றி முரசு கொட்ட வைப்பேன் ! நீ என் உறவு ! எந்நேரமும் எனை அன்பொழுக அழைத்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் ஓடி வருவேன் ! காலத்தை உன் காலடியில் வசமாக்குவேன்.
நானும், என் சத்திய வார்த்தையும் என்றுமே தோற்பதில்லை. சுக்கல் பழத்திலே நுய்யுருவம் கொண்டு சாப்பிடு ! உன் மாயை தெளியுமடா !
என் நாமம் உன் மாய மயக்கத்தை தெளிவாக்கும். உன் மாய வலையை அறுத்தெரியும். சொல்லிக் கொண்டே இரு ! உன் துயரம் காணாமல் போகும் நீர்க் குமிழி போல !
உன் கண்களை மூடினாலும் உனக்கு எதுவும் தெரியாது. கண்களை திறந்து பார்த்தாலும் எதுவும் தெரியாது. எதுவும் தெரியாமல் என்னை ஏளனிக்கிறாய். எல்லாம் தெரிந்து நான் மனிதன் போல நடமாடுகின்றேன். எப்போது உணர்வாயடா ?
உன் உயிரை நீயே மாய்க்க நினைக்கும் போதும், ஒருவனை அழிக்க நினைக்கும் போதும் அந்த உயிர் 3-3/4 நாழிகை முன்பே மேல் லோகம் வந்துவிடுகிறது. இறந்த உடலை பார்த்து அழுகின்றாய். இறந்த உடலை சுட்டேன் என்கிறாய். கொன்றேன் என்று கூக்குரலிடுகின்றாய். செத்த பாம்பை அடித்துவிட்டு கொக்கரிக்கின்றான் தான் பலவான் என்று !
பாம்பு புற்றுக்கு பாலை ஊற்றி பாவியாக அலைகின்றான். இந்த மாயையை அறியாது வாழும் மானிடனே, என்ன சொல்வேன் உன் அறியாமையை ? அற்ப மனிதன் விரிக்கும் மாய வலையில் சிக்கிவிடாதே ! மதம் என்ற போர்வை போட்டு வேஷம் போட்டு ஏமாற்றும் கயவர்களை பின் தொடராதே !
உன் உழைப்பை மேன்மையாக்கு ! நான் உனை கைப்பிடித்து கரை சேர்ப்பேன். இந்த யுகம் நீர் சூழ்ந்தாலும் உனை நான் கரை சேர்ப்பேன். நீ யார் ? நான் யார் ? உன் உறவுகள் எல்லாம் யார் ? இது தான் மாயை ! புரிந்தவன் அசைவற்று ஆளுமையை தேடுகின்றான் ! புரியாதவன் புத்தி கெட்டு புலம்புகின்றான்.
மனித கூட்டுக்குள்ளே கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்து இந்த பொம்மை கூட்டை இயக்குவதும் மாயை தான் ! மாய லோகத்தை அறியாது மதி மயங்கி அலைகின்றாய். சித்தர்களை தேடி ஜீவசமாதிகளை தேடி, மலையை தேடி, மதி கலங்கி அலைகின்றாய். எப்போது உனை உணர்ந்து, நீயும் சித்த சாயல் பெறுவாயடா ?
உணரடா !
உன் மாயையை விலக்க எப்போதும் இந்த மாயவன் துணை இருப்பேன் !
நான் மாயவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment