227என் ச்ருதியிலே லோகாநுக்ரஹம் உண்டு ! உனக்கு மன மகிழ்ச்சி தரும் உண்மையின் சாரம் உண்டு ! மலபாண்ட உடலில் உபமலத்தை வைத்து உருக்குலைந்து போகின்றாய். ஏனடா பயம் ?
சிக்கென பிடி !
ஆதியாய், அந்தமாய், ஆணந்த ஜ்யோதிஸ்ஸமாக நான் உனக்குள் இருக்க ஏனடா உனக்கு பயம் ? நான் அவதானி என்பதை ஏன் மறந்தாய் ? உன்னுள் உறைந்திருக்கும் பயம், உனை உருக்குலைக்கும் பயம், உனை வளர விடாத பயம், ஏனடா பயம் ? எல்லாவற்றையும் தூக்கி எறிந்திடு ! உன் துயர் களைய நான் இருக்கின்றேன் ! ஏமாங்கத்தின் சாயல் வைத்தேன் ! நீ மந்திரம், தந்திரம் கற்று மாயமாலத்தில் மல்கி துடிக்கின்றாய் ஏனடா ?
சிங்கம் ஒரு இரையை குறி வைத்தால் தன் பசி, ஆசையை உள்ளடக்கி தன் ஒருமுக பார்வையால் இரையின் இலக்கை நோக்கும். பின் மெதுவாக அடியெடுத்து வைத்து தன் வீரியம் அனைத்தையும் தன் காலுக்கு கொடுத்து பிடறி தெறிக்க அதைப் பின் தொடரும். எப்போதும் கழுத்தில் (சங்கு) குறி வைக்கும். இரை கிடைத்தவுடன் உயிர் போகும் வரை காத்திருக்கும். பின்னர் ஆசை தீர சாப்பிட்டு மீதத்தை விட்டுச் செல்லும். அதே போல நீயும் ஒரு பாதையை, லட்சியத்தை , குறிக்கோளை நோக்கி செல்லும் போது தன்னம்பிக்கையோடு சிங்கத்தை போல எதிர் நோக்கு !
ஆசைப்படாதே ! ஒரே மனதாக சிக்கென பிடி ! நீ அடைய நினைக்கும் லட்சியம் நிறைவேறும் வரை போராடி வாழக் கற்றுக் கொள். என்ன நடக்குமோ என்ற அற்ப பயத்தை தூக்கி எறி ! உனக்கு நான் துணை இருக்கின்றேன். மரங்கள் எந்த புயலுக்கும், இயற்கை சீற்றத்திற்கும் கலங்குவதில்லை. எல்லாவற்றையும் எதிர்த்து பூமியில் வாழ்கின்றன. அதன் நோக்கம் பிறருக்கு உதவுவதற்கே ! அதே போல நீயும் எதையும் எதிர்த்து நில் !
வாழ்வில் இறப்பு நிச்சயிக்கப்பட்டது. உன் லட்சியத்திற்காக உன் உயிர் போனாலும் கவலை கொள்ளாதே ! வந்தது வாழ்வதற்கு அல்ல ! மீண்டும் பிறப்பில்லா வாகை சூட !
மரணத்தை ஜெயிக்க யாருமில்லை இங்கு ! என்னை தவிற ! நன்மை செய்து எதையாவது பூமியில் விட்டு செல். ஆனால் உன் பாவத்தை தான் விட்டு செல்கிறாய். பிறப்பின் நோக்கம் அறியாமல் வாரிசு வேண்டும் என்று அலைகின்றாய். ஆண் குழந்தை தான் வேண்டும். பெண் குழந்தை வேண்டாம் என்கின்றாய் ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
இரண்டு, மூன்று குழந்தையை பெற்று எதையடா சாதித்தாய் ? ஆள வேண்டும், வாழ வேண்டும் என்று நினைக்கிறாய். பூமியில் பிறக்க வேண்டாம் என்று நினைப்பவர் இங்கு யாருமில்லை. உன் மரணம் துன்பமில்லாது இருக்க பாடுபடு. அது தான் பேரின்பம் !
சொர்க்கமும், நரகமும் உனக்குள் தான். கடவுளின் பார்வை பதிய ஆசைப்படு. உன்னை தேடு, உண்ணும் உணவை தேடு, முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து நிம்மதியோடு தர்மம் தேடு. நான் உன் முன்னால் நிற்கின்றேன். இன்றிலிருந்து உன் பயம் காணாமல் போகும். என் நாமம் எமபயம் நீக்கும்.
உன் உள்ளத்தை என்னிடம் கொடுத்து விடு ! அதை சீர்படுத்தி அழகாக்கி, பசுமையாக உன்னிடம் தருகின்றேன். ஒன்றை பற்றினால் உறுதியுடன் இரு ! உன் லட்சியம் நிறைவேறும். நான் உனை கைவிடப்போவதில்லை.
மரங்கள், ஜீவராசிகள் தளர்வதில்லை. நீ தான் தளர்ந்து, முதிர்ந்து மூலையில் முடங்குகின்றாய். உன் வடக்கு நோக்கிய பயணம் வசந்தமாக வைக்க உன்னாலேயே முடியும். வடக்கிருத்தல் நீ கீழாக வரும் போது யோசிக்கின்றாய். மேல் நோக்க தவறியதால் இங்கே உன் மரணம் சாதனையாகவில்லை.
என்னை நினை ! எல்லாம் கைகூடும் !
எனக்கு விதி எழுதப்படவில்லை. ஏனென்றால் நானே விதி !
நாளையே நான் லோகம் போக முடியும். நீ தான் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். உயிர் எப்படி போகும், எங்கே போகும் என்பது எனக்கு தெரியும். உயிரின் சூட்சுமம் புரிந்தவன் நான் !
நீ நாட்கள் எண்ணி பிறந்தாய். நாட்கள் எண்ணி இறக்கவில்லை ! நான் நாட்கள் எண்ணி எதையும் செய்வேன். உனக்கு ஒரு வருடம் என்பது எனக்கு ஒரு நாள். என் கணக்குபடி கருவறையில் ஒரு நாள் வைத்தேன். உன்னை உணராதது ஏனோ ?
1996 ன் கணக்கு படி இநன்யா இந்த யுகத்தில் 48,000 கோடி யுக ஆண்டுகள் இருப்பேன் ! இநன்யா என்ற திருநாமம் ஜ்யோதிஸ்ஸமாக ஒலித்து கொண்டிருக்கும் !
என் நாமத்தை சிக்கென பிடி ! வெட்டன மற ! வேதனை உனக்கில்லை !
இநன்யா அமிழ்தம், அன்பு, ஆணந்தம், கருணை ! சதி, பதி வாழ்வில் விதி வழி செல்பவன் நானில்லை ! எழுமனை மாதுகரம் செய்து உன்னை உற்று நோக்கு ! என் வழி சத்ய வழி !
எனை நினைப்பவன், ஜொலிப்பான் ! ஜெயிப்பான் ! வாழ்வான் ! சத்தியமாக !
பயப்படாதே ! நான் உனக்குள் !
ச்ருதியில் சுகமானவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment