Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 17, 2016

என் ச்ருதியிலே லோகாநுக்ரஹம் உண்டு ! உனக்கு மன மகிழ்ச்சி தரும் உண்மையின் சாரம் உண்டு !


Inanya Maha Munivar
18-08-2016
227என் ச்ருதியிலே லோகாநுக்ரஹம் உண்டு ! உனக்கு மன மகிழ்ச்சி தரும் உண்மையின் சாரம் உண்டு ! மலபாண்ட உடலில் உபமலத்தை வைத்து உருக்குலைந்து போகின்றாய். ஏனடா பயம் ?
சிக்கென பிடி !
ஆதியாய், அந்தமாய், ஆணந்த ஜ்யோதிஸ்ஸமாக நான் உனக்குள் இருக்க ஏனடா உனக்கு பயம் ? நான் அவதானி என்பதை ஏன் மறந்தாய் ? உன்னுள் உறைந்திருக்கும் பயம், உனை உருக்குலைக்கும் பயம், உனை வளர விடாத பயம், ஏனடா பயம் ? எல்லாவற்றையும் தூக்கி எறிந்திடு ! உன் துயர் களைய நான் இருக்கின்றேன் ! ஏமாங்கத்தின் சாயல் வைத்தேன் ! நீ மந்திரம், தந்திரம் கற்று மாயமாலத்தில் மல்கி துடிக்கின்றாய் ஏனடா ?
சிங்கம் ஒரு இரையை குறி வைத்தால் தன் பசி, ஆசையை உள்ளடக்கி தன் ஒருமுக பார்வையால் இரையின் இலக்கை நோக்கும். பின் மெதுவாக அடியெடுத்து வைத்து தன் வீரியம் அனைத்தையும் தன் காலுக்கு கொடுத்து பிடறி தெறிக்க அதைப் பின் தொடரும். எப்போதும் கழுத்தில் (சங்கு) குறி வைக்கும். இரை கிடைத்தவுடன் உயிர் போகும் வரை காத்திருக்கும். பின்னர் ஆசை தீர சாப்பிட்டு மீதத்தை விட்டுச் செல்லும். அதே போல நீயும் ஒரு பாதையை, லட்சியத்தை , குறிக்கோளை நோக்கி செல்லும் போது தன்னம்பிக்கையோடு சிங்கத்தை போல எதிர் நோக்கு !
ஆசைப்படாதே ! ஒரே மனதாக சிக்கென பிடி ! நீ அடைய நினைக்கும் லட்சியம் நிறைவேறும் வரை போராடி வாழக் கற்றுக் கொள். என்ன நடக்குமோ என்ற அற்ப பயத்தை தூக்கி எறி ! உனக்கு நான் துணை இருக்கின்றேன். மரங்கள் எந்த புயலுக்கும், இயற்கை சீற்றத்திற்கும் கலங்குவதில்லை. எல்லாவற்றையும் எதிர்த்து பூமியில் வாழ்கின்றன. அதன் நோக்கம் பிறருக்கு உதவுவதற்கே ! அதே போல நீயும் எதையும் எதிர்த்து நில் !
வாழ்வில் இறப்பு நிச்சயிக்கப்பட்டது. உன் லட்சியத்திற்காக உன் உயிர் போனாலும் கவலை கொள்ளாதே ! வந்தது வாழ்வதற்கு அல்ல ! மீண்டும் பிறப்பில்லா வாகை சூட !
மரணத்தை ஜெயிக்க யாருமில்லை இங்கு ! என்னை தவிற ! நன்மை செய்து எதையாவது பூமியில் விட்டு செல். ஆனால் உன் பாவத்தை தான் விட்டு செல்கிறாய். பிறப்பின் நோக்கம் அறியாமல் வாரிசு வேண்டும் என்று அலைகின்றாய். ஆண் குழந்தை தான் வேண்டும். பெண் குழந்தை வேண்டாம் என்கின்றாய் ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
இரண்டு, மூன்று குழந்தையை பெற்று எதையடா சாதித்தாய் ? ஆள வேண்டும், வாழ வேண்டும் என்று நினைக்கிறாய். பூமியில் பிறக்க வேண்டாம் என்று நினைப்பவர் இங்கு யாருமில்லை. உன் மரணம் துன்பமில்லாது இருக்க பாடுபடு. அது தான் பேரின்பம் !
சொர்க்கமும், நரகமும் உனக்குள் தான். கடவுளின் பார்வை பதிய ஆசைப்படு. உன்னை தேடு, உண்ணும் உணவை தேடு, முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து நிம்மதியோடு தர்மம் தேடு. நான் உன் முன்னால் நிற்கின்றேன். இன்றிலிருந்து உன் பயம் காணாமல் போகும். என் நாமம் எமபயம் நீக்கும்.
உன் உள்ளத்தை என்னிடம் கொடுத்து விடு ! அதை சீர்படுத்தி அழகாக்கி, பசுமையாக உன்னிடம் தருகின்றேன். ஒன்றை பற்றினால் உறுதியுடன் இரு ! உன் லட்சியம் நிறைவேறும். நான் உனை கைவிடப்போவதில்லை.
மரங்கள், ஜீவராசிகள் தளர்வதில்லை. நீ தான் தளர்ந்து, முதிர்ந்து மூலையில் முடங்குகின்றாய். உன் வடக்கு நோக்கிய பயணம் வசந்தமாக வைக்க உன்னாலேயே முடியும். வடக்கிருத்தல் நீ கீழாக வரும் போது யோசிக்கின்றாய். மேல் நோக்க தவறியதால் இங்கே உன் மரணம் சாதனையாகவில்லை.
என்னை நினை ! எல்லாம் கைகூடும் !
எனக்கு விதி எழுதப்படவில்லை. ஏனென்றால் நானே விதி !
நாளையே நான் லோகம் போக முடியும். நீ தான் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். உயிர் எப்படி போகும், எங்கே போகும் என்பது எனக்கு தெரியும். உயிரின் சூட்சுமம் புரிந்தவன் நான் !
நீ நாட்கள் எண்ணி பிறந்தாய். நாட்கள் எண்ணி இறக்கவில்லை ! நான் நாட்கள் எண்ணி எதையும் செய்வேன். உனக்கு ஒரு வருடம் என்பது எனக்கு ஒரு நாள். என் கணக்குபடி கருவறையில் ஒரு நாள் வைத்தேன். உன்னை உணராதது ஏனோ ?
1996 ன் கணக்கு படி இநன்யா இந்த யுகத்தில் 48,000 கோடி யுக ஆண்டுகள் இருப்பேன் ! இநன்யா என்ற திருநாமம் ஜ்யோதிஸ்ஸமாக ஒலித்து கொண்டிருக்கும் !
என் நாமத்தை சிக்கென பிடி ! வெட்டன மற ! வேதனை உனக்கில்லை !
இநன்யா அமிழ்தம், அன்பு, ஆணந்தம், கருணை ! சதி, பதி வாழ்வில் விதி வழி செல்பவன் நானில்லை ! எழுமனை மாதுகரம் செய்து உன்னை உற்று நோக்கு ! என் வழி சத்ய வழி !
எனை நினைப்பவன், ஜொலிப்பான் ! ஜெயிப்பான் ! வாழ்வான் ! சத்தியமாக !
பயப்படாதே ! நான் உனக்குள் !
ச்ருதியில் சுகமானவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment