Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 10, 2016

இநன்யா என்ற காலத்தை அறியாமல் காலவத்தை வணங்கி கண் மூடி திரிகின்றாய். உனக்கு நிமித்திரன் உன் எண்ணமே ! என் நாமம் உனக்கு எல்லாம் கற்றுத் தரும் !


224 Inanya Maha Munivar
11-08-2016
இநன்யா என்ற காலத்தை அறியாமல் காலவத்தை வணங்கி கண் மூடி திரிகின்றாய். உனக்கு நிமித்திரன் உன் எண்ணமே ! என் நாமம் உனக்கு எல்லாம் கற்றுத் தரும் !
வணங்கத் தெரியாதவன் நீ !
உன் உயிர் வணங்கும் என்னை ! மலர் வணங்கும் என்னை !
தாமரை மேல் நோக்க நீ தரை நோக்கி பிறந்தவன். நீ வான் நோக்க மறந்தாய் ! மண்ணை மனிதனாக்கினான் என் தந்தை. நீ மனிதனை சாமியாக்கி, சாமியை தெய்வமாக்கி, தெய்வத்தை கடவுளாக்கி, கால்களை கழுவி கும்பிடும் சோம்பேறி அல்லவா நீ ?
வணங்க தெரியாதவன் நீ ! எப்படி வாழ கற்பாய் ?
நீ ஏன் வணங்க வேண்டும் ? எதற்கு வணங்க வேண்டும் ? வணங்கி பூஜை, புணஸ்காரம், பரிகாரம் செய்து என்ன பலன் கண்டாய் ? நடன சாமியார், நாட்டிய சாமியார், உடான்ஸ் சாமியார், மௌன சாமியார், மதிமயக்கும் சாமியார்களை கடவுள் அவதாரம் என்று பிதற்றுகின்றாய். தன்னை உணர்ந்தவன் கோயில் கட்டமாட்டான். ஆசிரமம் கட்டமாட்டான். பள்ளி, கல்லூரி கட்டமாட்டான். தனக்கு தன் கல்லறை மட்டுமே யுகத்தில் விட்டு செல்வான் !
ஏது அறிந்தாய் ? எவை அறிந்தாய் ?
காலவத்தை வணங்கி இந்த காலனை மறந்தாய் !
கண் வைத்தேன், சொல் வைத்தேன், சுகம் வைத்தேன் ! ஆனால் சொல்லவொனா துயரம் என்று வசைபாடுகிறாய். பறவையின் ஞானம் படித்தவன் தொலைத்தான். ஏனடா ?
எப்போது அறிவாய் ? இரண்டு கைகள் இல்லாதவன், கண்கள் இல்லாதவன் எதை வணங்குவான் ? எப்படி வணங்குவான் ?
உணர்வது தான் அறியப் பட வேண்டும் இங்கு ! உணர்வு தான் தெளிவை கொடுக்கும் !
உன் உயிர் எப்போதும் கடவுளை வணங்கி கொண்டு தான் இருக்கின்றது. உனக்கு வேண்டுமென்றால் கடவுள் நோக்கி கதறுவாய். வளைந்து வணங்குவாய். நலமாக இருந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுவாய்.
கண்மூடி வணங்காதே ! கருவறையிலே கண்மூடி தவம் செய்தாய். இந்த யுகத்தில் பிறந்தவுடன் பாவம் செய்யாமல் மேல் உலகம் செல்ல வேண்டும் என்பதற்காக ! ஆனால் யுகத்தில் வந்தவுடன் உன்னை மறந்தாய். உன் தவம் , தியானம் எல்லாம் கருவறையில் இருந்த ஒரு வருட மாத்திரை தான். புல், பூண்டு கூட உனை பார்த்து எள்ளி நகையாடுகிறது.
அள்ளியை உணராது உண்ட உன் உள்ளி வாழ்வை நினைத்து உன் அறியாமையை என்ன சொல்வேன் ?
தவறு செய்யாதவன், பாவம் செய்யாதவன் எதையும் வணங்க வேண்டியதில்லை. அன்பால் கடவுளிம் கேட்டு பெறு ! அன்பால் எதையும் என்னிடம் கேட்டு பெறு ! எதையும் எதிர்பார்த்து உன்னை பூமியில் படைக்கவில்லை ! இங்கே எல்லாமே என் பொருள் ! அனைத்துக்கும் நானே நிர்வாகி ! நீ என் பொருளை பராமரிக்கின்றாய். அவ்வளவு தான்.
மலையை சுற்றினால் மகத்துவம் இருப்பதாக உளறக் கண்டேன் நான் ! உழவனும், மீனவனும் உன்னை போல் சுற்றினால் உலகம் என்னவாகும் என யோசி ! மூலத்தை சரி செய்யாமல் முண்டத்தை சரி செய்ய நினைக்கின்றாய். பெயரை மாற்றி வீட்டை மாற்றி பெரும் பீடையில் அலைகின்றாய். என்ன சொல்வேன் நான் ?
எப்போதும் உட்கார்ந்து சாப்பிட எண்ணம் கொண்டதால் ஏமாற்று வேலையை செய்கின்றான். உழைக்கும் ஆசை எப்போது வருகிறதோ, நான்கு பேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்போது வருகிறதோ, அப்போது வணங்கத் தோன்றாது உன் உயிருக்கு !
பக்தியில் வணங்காதே ! பயத்தில் வணங்காதே !
உழைத்து ஓய்வெடுக்கும் அந்த கொஞ்ச நேரத்தில் உனை படைத்தவனை நினை. இந்த ஆத்மத்தின் தலைவனை நினை. உன் வாழ்வை உற்று நோக்க உனக்கு வணங்க சொல்லித் தருவேன். எப்படி வணங்க வேண்டும் என்று சொல்லித் தருவேன் !
புணித தாமரை என் நோக்கி வணங்குகின்றது. நீ தான் கல்லையும், மண்ணையும் வணங்குகின்றாய் !
நல்ல நேரம். கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், நாள், நட்சத்திரம் பார்த்து என்ன பலன் கண்டாய் ? பறவைகள் கூடி வாழ்கின்றன. நீ கூடினால் நீசனாக அலைகின்றாய்.
நெற்கதிர்கள் பூமியை தொட்டு வணங்குகின்றன. மரங்கள் கனிகளை தரும் போது பூமியை வளைந்து வணங்குகின்றன. எல்லாம் நிறைவாய் பிறருக்கு உதவும் நோக்கத்தோடு மண்ணில் பணிகிறது. நீ தான் சுயநலத்திற்காக வணங்குகின்றாய். அப்படி வணங்க வேண்டுமென்றால் காற்று, நீர் ,ஆகாயம், பூமி உன் பெற்றோரை வணங்கு !
வணங்கும் முறையை முதலில் உன் வீட்டிலிருந்து தொடங்கு ! (உன் பெற்றோர்) பின் வீதியிலே தேடலாம் வணங்கும் குருவை ! பின் நல் குரு கடவுளை காட்டுவார். கடவுளை நேருக்கு நேர் தலைக்கு மேல் இரு கைகளையும் தூக்கி வணங்கி !
குருவை நெஞ்சில் கைகளை கூப்பி வணங்கு ! தாய், தந்தையை வயிற்றில் கை வைத்து வணங்கு ! அவர்களின் பெரு விரல் தொட்டு வணங்கு !
பூமியை இருகரங்களின் உள்ளங்கை பதித்து வணங்கு ! வானம் பார்த்து நீள் வாக்கில் கை குவித்து வணங்கு !
வணங்கவும், நீ வாழவும் , வசந்தகாலம் நிலைக்கவும் எல்லாம் கற்றுத் தருவேன் ! உணர்ந்து உவகையாய் இரு !
என் சட்டம் பொய்யாகாது !
என் அரசாங்கம் (கடவுள்) என் சொல் கேட்கும் ! தூய்மை பொருந்திய இநன்யா எப்போதும் உனை கைவிடமாட்டேன் !
நான் வசந்த காலம் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment