இநன்யா என்ற காலத்தை அறியாமல் காலவத்தை வணங்கி கண் மூடி திரிகின்றாய். உனக்கு நிமித்திரன் உன் எண்ணமே ! என் நாமம் உனக்கு எல்லாம் கற்றுத் தரும் !
வணங்கத் தெரியாதவன் நீ !
உன் உயிர் வணங்கும் என்னை ! மலர் வணங்கும் என்னை !
தாமரை மேல் நோக்க நீ தரை நோக்கி பிறந்தவன். நீ வான் நோக்க மறந்தாய் ! மண்ணை மனிதனாக்கினான் என் தந்தை. நீ மனிதனை சாமியாக்கி, சாமியை தெய்வமாக்கி, தெய்வத்தை கடவுளாக்கி, கால்களை கழுவி கும்பிடும் சோம்பேறி அல்லவா நீ ?
வணங்க தெரியாதவன் நீ ! எப்படி வாழ கற்பாய் ?
நீ ஏன் வணங்க வேண்டும் ? எதற்கு வணங்க வேண்டும் ? வணங்கி பூஜை, புணஸ்காரம், பரிகாரம் செய்து என்ன பலன் கண்டாய் ? நடன சாமியார், நாட்டிய சாமியார், உடான்ஸ் சாமியார், மௌன சாமியார், மதிமயக்கும் சாமியார்களை கடவுள் அவதாரம் என்று பிதற்றுகின்றாய். தன்னை உணர்ந்தவன் கோயில் கட்டமாட்டான். ஆசிரமம் கட்டமாட்டான். பள்ளி, கல்லூரி கட்டமாட்டான். தனக்கு தன் கல்லறை மட்டுமே யுகத்தில் விட்டு செல்வான் !
ஏது அறிந்தாய் ? எவை அறிந்தாய் ?
காலவத்தை வணங்கி இந்த காலனை மறந்தாய் !
கண் வைத்தேன், சொல் வைத்தேன், சுகம் வைத்தேன் ! ஆனால் சொல்லவொனா துயரம் என்று வசைபாடுகிறாய். பறவையின் ஞானம் படித்தவன் தொலைத்தான். ஏனடா ?
எப்போது அறிவாய் ? இரண்டு கைகள் இல்லாதவன், கண்கள் இல்லாதவன் எதை வணங்குவான் ? எப்படி வணங்குவான் ?
உணர்வது தான் அறியப் பட வேண்டும் இங்கு ! உணர்வு தான் தெளிவை கொடுக்கும் !
உன் உயிர் எப்போதும் கடவுளை வணங்கி கொண்டு தான் இருக்கின்றது. உனக்கு வேண்டுமென்றால் கடவுள் நோக்கி கதறுவாய். வளைந்து வணங்குவாய். நலமாக இருந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுவாய்.
கண்மூடி வணங்காதே ! கருவறையிலே கண்மூடி தவம் செய்தாய். இந்த யுகத்தில் பிறந்தவுடன் பாவம் செய்யாமல் மேல் உலகம் செல்ல வேண்டும் என்பதற்காக ! ஆனால் யுகத்தில் வந்தவுடன் உன்னை மறந்தாய். உன் தவம் , தியானம் எல்லாம் கருவறையில் இருந்த ஒரு வருட மாத்திரை தான். புல், பூண்டு கூட உனை பார்த்து எள்ளி நகையாடுகிறது.
அள்ளியை உணராது உண்ட உன் உள்ளி வாழ்வை நினைத்து உன் அறியாமையை என்ன சொல்வேன் ?
தவறு செய்யாதவன், பாவம் செய்யாதவன் எதையும் வணங்க வேண்டியதில்லை. அன்பால் கடவுளிம் கேட்டு பெறு ! அன்பால் எதையும் என்னிடம் கேட்டு பெறு ! எதையும் எதிர்பார்த்து உன்னை பூமியில் படைக்கவில்லை ! இங்கே எல்லாமே என் பொருள் ! அனைத்துக்கும் நானே நிர்வாகி ! நீ என் பொருளை பராமரிக்கின்றாய். அவ்வளவு தான்.
மலையை சுற்றினால் மகத்துவம் இருப்பதாக உளறக் கண்டேன் நான் ! உழவனும், மீனவனும் உன்னை போல் சுற்றினால் உலகம் என்னவாகும் என யோசி ! மூலத்தை சரி செய்யாமல் முண்டத்தை சரி செய்ய நினைக்கின்றாய். பெயரை மாற்றி வீட்டை மாற்றி பெரும் பீடையில் அலைகின்றாய். என்ன சொல்வேன் நான் ?
எப்போதும் உட்கார்ந்து சாப்பிட எண்ணம் கொண்டதால் ஏமாற்று வேலையை செய்கின்றான். உழைக்கும் ஆசை எப்போது வருகிறதோ, நான்கு பேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்போது வருகிறதோ, அப்போது வணங்கத் தோன்றாது உன் உயிருக்கு !
பக்தியில் வணங்காதே ! பயத்தில் வணங்காதே !
உழைத்து ஓய்வெடுக்கும் அந்த கொஞ்ச நேரத்தில் உனை படைத்தவனை நினை. இந்த ஆத்மத்தின் தலைவனை நினை. உன் வாழ்வை உற்று நோக்க உனக்கு வணங்க சொல்லித் தருவேன். எப்படி வணங்க வேண்டும் என்று சொல்லித் தருவேன் !
புணித தாமரை என் நோக்கி வணங்குகின்றது. நீ தான் கல்லையும், மண்ணையும் வணங்குகின்றாய் !
நல்ல நேரம். கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், நாள், நட்சத்திரம் பார்த்து என்ன பலன் கண்டாய் ? பறவைகள் கூடி வாழ்கின்றன. நீ கூடினால் நீசனாக அலைகின்றாய்.
நெற்கதிர்கள் பூமியை தொட்டு வணங்குகின்றன. மரங்கள் கனிகளை தரும் போது பூமியை வளைந்து வணங்குகின்றன. எல்லாம் நிறைவாய் பிறருக்கு உதவும் நோக்கத்தோடு மண்ணில் பணிகிறது. நீ தான் சுயநலத்திற்காக வணங்குகின்றாய். அப்படி வணங்க வேண்டுமென்றால் காற்று, நீர் ,ஆகாயம், பூமி உன் பெற்றோரை வணங்கு !
வணங்கும் முறையை முதலில் உன் வீட்டிலிருந்து தொடங்கு ! (உன் பெற்றோர்) பின் வீதியிலே தேடலாம் வணங்கும் குருவை ! பின் நல் குரு கடவுளை காட்டுவார். கடவுளை நேருக்கு நேர் தலைக்கு மேல் இரு கைகளையும் தூக்கி வணங்கி !
குருவை நெஞ்சில் கைகளை கூப்பி வணங்கு ! தாய், தந்தையை வயிற்றில் கை வைத்து வணங்கு ! அவர்களின் பெரு விரல் தொட்டு வணங்கு !
பூமியை இருகரங்களின் உள்ளங்கை பதித்து வணங்கு ! வானம் பார்த்து நீள் வாக்கில் கை குவித்து வணங்கு !
வணங்கவும், நீ வாழவும் , வசந்தகாலம் நிலைக்கவும் எல்லாம் கற்றுத் தருவேன் ! உணர்ந்து உவகையாய் இரு !
வணங்கவும், நீ வாழவும் , வசந்தகாலம் நிலைக்கவும் எல்லாம் கற்றுத் தருவேன் ! உணர்ந்து உவகையாய் இரு !
என் சட்டம் பொய்யாகாது !
என் அரசாங்கம் (கடவுள்) என் சொல் கேட்கும் ! தூய்மை பொருந்திய இநன்யா எப்போதும் உனை கைவிடமாட்டேன் !
நான் வசந்த காலம் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment