உங்களுக்குள் இருக்கும் "பிரபஞ்ச சக்தியை" உணர வேண்டுமா !!!
முக்காலமும் அறிய வேண்டுமா !!!
பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி (ஆண்மா). அதை அறிய ஒர் செம்பில் நீர் எடுத்து கிழக்கு முகமாக நீங்கள் அமர்ந்து அச்செம்பு நீரை உங்கள் முன் வைத்து அந்நீரை "இநன்யா நமோ நம" என்று 9 தடவை சொல்லி வணங்கி மேலே வானை நோக்கி இரு கைகளையும் கூப்பி "இநன்யா நமோ நம" என்று மனதினுள் உச்சரித்த படியே கண்களை மூடாமல் வானை நோக்கி சொல்லி கொண்டே இருங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் போது ஆழ்மண உலகத்திற்கு பயணம் செய்து எதையும் தெளிவாக பார்க்க முடியும். அப்பொழுது உயர் உணர்வுக்கு செல்லும் போது பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்வீர்கள். அதன் பிறகே பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன. காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகின்றன. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது. அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. இதயே "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் சாத்தியமில்லை. அந்த ஆனந்தத்தை நீங்கள் அனுபவித்தே தெறிந்து கொள்ள வேண்டும். சொல்லி முடித்த பிறகு அந்த புணித நீரை அருந்தி விடுங்கள்.
தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை. பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும்.
காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான். ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவர் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் "அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும்". ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.
காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான். ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவர் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் "அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும்". ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.
என்ன இது சுத்த பைத்தியகார தனமாக உள்ளது. அறிவியல் படி இது சாத்தியமற்றது என கூறும் எனது அன்பு அறிவியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு குட்டி கேள்வி மட்டும் கேட்கிறேன் அதற்கு பதில் சொல்லுங்கள். "அறிவியல் என்றால் என்ன ? அறிவியல் வளர்ச்சி என்றால் என்ன ? "
என்ன எங்களை பார்த்தால் நக்கலாக தெறிகின்றதா ? எங்களை கின்டல் செய்கின்றிறா என்று மட்டும் கோபப்படாதீர்கள் எனது அன்பு சகாகளே. ஏனேனில் நாம் அனைவரும் முதல் வகுப்பு படிக்கும் போதே இதை படித்து விட்டு தான் வளர்ந்து இருப்போம். ஒரு முதல் வகுப்பு மாணவனை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை ஒர் விஞ்ஞானியை பார்த்து கேட்பதா என்று கோபம் வருவது நியாயம் தான். ஆனால் இது உங்கள் கோபத்தை தூண்டுவதற்கான கேள்வி அல்ல. உங்களை விழிப்புற செய்வதற்கான கேள்வி மட்டுமே.
சரி விடையை சொல்கிறேன் ஆராய்ந்து பாருங்கள் ஏனேனில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று ஆராய்வது அல்லவா ! ஒர் கேள்வியை கேட்டு அதற்கான சரியான விடையை சொல்வதே "அறிவியல்". சொல்லிய விடையில் இருந்து பல பல கேள்விகளை உருவாக்கி அதற்கு விடையை அறிதலே "அறிவியல் வளர்ச்சி".
இப்படி எந்த ஆரம்பமே தெறியாமல் பாடம் படிகின்றோம், பல பல மத சடங்குகள், சம்பரதாயங்கள் செய்கின்றோம். இதற்கு காரணம் நம் முன்னோர்கள் பின்பற்றினர் என்பது மட்டுமே. இதை யார் ஆரம்பித்தனர் ? அதன் நோக்கம் என்ன ? அதன் வளர்சியின் பயன் மற்றும் பாதிப்பு என்ன? அதன் முடிவு என்னவாய் இருக்கும் என்று ஏதும் தெறியாமல் காலம் காலமாக பின்பற்றியதன் விளைவே இவ்வளவு கொடிய நோய்களும், வறுமையும், ஏற்ற தாழ்வும், இவ்வளவு கலாச்சார சீர்கேடுகளும். இனிமேலாவது விழிப்புறுங்கள் !!!
இப்பதிவானது ஜாதி, மத, குழந்தை, பெரியோர், ஆண், பெண் என எந்த வித பேதமின்றி அனைவரும் பின்பற்றி தங்களுக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து வெளி கொணர்வதாகும். முயற்சித்து பாருங்கள் ஒருமுறை. எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும் அது இம்முறையை பின்பற்றினால் வானிலும் உங்கள் வாழ்விலும் பல பல அதிசயங்கள் காண்பீர் தினம் தினம் சத்தியமாக !!!
இநன்யா நமோ நம!!!
இநன்யா நமோ நம!!!
No comments:
Post a Comment