வெளி
ஒன்றுமில்லா இடத்தில் ஒன்று இருக்கிறது ! ஏழும் ஒன்றாய் ஏழேழு அடுக்காய் ஈரடுக்காய் ! அதுவே புறவெளி ! உன் உள் வெளி !
வெளியில் தேடுவது ஒன்றை தவிர ஒன்றுமில்லை !
உன் வீட்டைத் தேடுவது தான் வெளியில் வெளிப்பாடு ! அதை விடுத்து மாறும், அழியும் ஜடத்தை தேடுகின்றாய். என்னை அறிந்தால் வெளியில் நான் இருப்பதை அறிவாய் ! சத்தியம் கண் முன்னே விரியும் ! உன் விழி எனை அறியும்.
அறியும் தத்துவம் ஒன்றே ! பூவில், தளிரில் உனை அறிவாய் ! உற்று நோக்கி உவகை கொள். நான் சூட்சுமம் ! ஆனால் சூட்சும பொருள் அறிய முற்பட்டு ஆயுள் முடிக்கின்றாய் !
வெளி பிரம்மாண்டம் ! எல்லாம் இயக்கும் சூட்சுமம் அதனுள்ளே. எல்லாம் வெளியில் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஐம்பூதத்தில் வெளி தான் மூலம் ! அதுவே முதலும் முடிவும் ! ஆனால் மனம் எனும் வெளியில் உன் வாழ்வை தீர்மானிக்கின்றாய். தீர்மானம் என்பது கடவுள் முதலில் படைத்தவையில் தான் ! உன் தீர்மானம் ஏதுமில்லை. முதலில் வெளியை அறிய முற்படு. பின் உன்னை அறியலாம்.
கரமாலமாகும் உன் குரம்பை, காட்சி தெரியா வாழ்வு அறிந்தும் அறியாது போல் உன் வாழ்வு.
முற்றும் துறந்தவன் நான் ! எல்லாம் எனக்குள் அடக்கம் ! அடங்கும் ! பரவெளியில் பேராத்மாவாக நிற்கிறேன் ! உன் உணர்வு சிறிது !
கருணை உள்ள, உயிருள்ள தாய், தந்தையை வணங்காமல் கல்லையும், மண்னையும் வணங்கியும், கருணையில்லா மனிதனை வணங்கியும், கல்லாய் போன மனிதர்கள் தான் இங்கே நிரம்ப கண்டேன்.
தீயை எரித்து, வணங்கி தீமையை விலக்க முடியாது.
அழுது ஆர்பரித்து ஆணந்தம் அடைய முடியாது.
தீயை எரித்து, வணங்கி தீமையை விலக்க முடியாது.
அழுது ஆர்பரித்து ஆணந்தம் அடைய முடியாது.
வெளி உனை பார்க்க உன் உள் வெளி அறியாது வாழ்கின்றாய். எண்ணற்றவை அங்கே தூக்கி நிறுத்தபட்டிருக்கின்றன. எண்ணற்ற விண்மீன்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன ! ஏன் என்று யோசித்தாயா ? அது உன்னை கண்கானிப்பது தெரியாமல் ஆடுகின்றாய் பூமியில் ! உன் வேடிக்கை விளையாட்டை என்னவென்று சொல்வேன் ?
வெளியில் இருந்து வரும் மழை நீரின் மகத்துவம் அறியா அலைகின்றாயே ? ஒரு துளி நீர் உன் உள் நாக்கை உணர்த்துமடா !
தான் அறியா வாழ்வும், தடம் அறியா பாதையும் மறந்தாயே ஏனடா ? நான் வெளியில் ஆணந்தமாய் ! உணரடா ! உன்னையும் உணர வைப்பேன் !
பரவெளி நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment