விக்கிரமம் நிறைந்தவன் நீ ! ஏன் விப்பிரம்மாக இருக்கின்றாய் ? ஆரிடை தெரியாது ஏன் ஆனந்தம் தொலைத்து வாழ்கின்றாய் ?
ஓர் நிலை கொள் !
ஆதியில் ஆன்மீக அறிவற்று இருந்தான். ஆளுமை தனக்குள் இருப்பதை உணர்ந்தான். ஆனந்தமாய் வாழ்ந்தான். எல்லாவற்றுக்கும் பயந்து இயற்கையை வணங்கி நேசித்தான். இருள், மிருகம், நாமம் எல்லாவற்றுக்கும் பயந்தான் ஓர் நிலை கொண்டவன்.
ஒரு வழியை பின்பற்றியவன் மதத்தை உருவாக்கினான். தன் கடவுள் தான் பெரிது, தன் வழிபாடு தான் பெரிது என்று மனிதனை குழப்பினான் ! வழி தெரியாது தடுமாறி மனிதன் வீழ்ந்தான் துன்ப கடலில் !
கடவுள்கள், முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், சித்தர்கள், ஞானிகள், பித்ருக்கள் முதலிய இந்த ஏழு நிலைகளும் மேலே உண்டு ! மனிதர்கள் வாழும் இடம் காண்டங்கள். இப்படி ஏழு உலகத்தில் எங்கே செல்ல வேண்டும் என தெரியாமல் மனிதன் விழி பிதுங்கினான். அதை மதம் என்ற போர்வை போற்றி குழம்பி திரிய வைத்தான்.
இங்கே வழிமுறைகள் மறந்தாய் ! வழிபாடு என்று கடவுளை நெருங்கமுடியாமல் தவிக்கிறாய் ! மீண்டும், மீண்டும் இங்கே பிறப்பதாலே உன் உலகம் செல்ல முடியவில்லை. நீ உன் உலகம் செல்ல வழிமுறைகளை பின்பற்று.
இங்கே யாரும் குரு அல்ல. பசுத்தோல் போர்த்திய புலி. இந்த கர்ம பூமியில் கர்மங்கள் நிரம்பி வழிய காரணம் உன் வழிபாடு தான்.
நீயே யோசி ! எது இங்கே நிம்மதி தரும் என்று ! தேவ ஜனங்கள் யார் ? கடவுளின் பிள்ளைகள் யார் ? ஒழுக்கம், அன்பு, கடமை, உள்ளவர்கள் யாவரும் கடவுளின் பிள்ளைகள் தான் என்பதை புரிந்து கொள்.
“மதம் மாறி, மனம் மாறி துன்புறுகின்றாயே உன் ஆண்மா இன்புறுவது எப்போதடா ?” என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வதுண்டு !
மனித மனத்தை மாற்ற மனிதனுக்கு தெளிவில்லை. மதம் மாறினால் கடவுள் அருள்வான் என்று சொல்கிறான். மதம் என்பது அன்பற்ற சொல். அறிவற்ற செயல் ! எல்லோருக்கும் பொதுவான தரை காத்திருப்பதை மறந்து அலைகின்றான். உலகம் அழியும் சூழலில் இருக்கிறது.
கடவுள் மதத்தை பார்ப்பதில்லை. மனித மனத்தை தான் பார்க்கின்றான். உலகில் எங்கெல்லாம் மத வழிபாடுகள் நிரம்பி வழிகின்றதோ அங்கேயே மிக கோர நிகழ்வுகள் நடக்க போகிறது இனி ! மதம் அழிந்து மனித நேயம் மலரும்.
கடவுள் ஆயத்தமாகிவிட்டான் !
அரசியல் நாடகமும், மத சூழ்ச்சியும் சாயம் வெளுத்துவிட்டது. எல்லாம் இங்கே நாடகம் என்பதை புரிந்து கொள்வான். இனி கடவுள் நடத்தும் நாடகத்தை பொறுத்திருந்து பார். மனிதன் இனி வழிமுறைகளை தேடி அலைவான்.
தன் குடும்பம், தன் இனம், தன் மதம் வளர்ச்சியாக வேண்டும் என்று ஏமாற்றும் நாடகங்களை மனிதன் அறிவான். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி கூட்டம் கூட்டுகின்றான். யாராவது உழைப்பதற்கு வழி சொல்கின்றானா ? மதம் என்ற போர்வை போர்த்தி மனிதன் போடும் வேஷம் இனி கலையும்.
ஆயிரம் கடவுளை வணங்கினாலும், ஆயிரம் வழிபாடுகள் செய்தாலும் ஏன் அதிகமாக நோய்களும், துன்பங்களும் நாளுக்கு நாள் கூடுகின்றது என்பதை யோசி ! புத்தி உள்ளவன் இதை அறிவான்.
படைத்தவன் பாசமாக பக்குவமாக படைத்தான். அவன் அன்புக்கு நிகர் ஏதுமில்லை. இங்கே மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு மனிதன் அமைத்த சட்டமே காரணம் ! இனி கடவுளின் சட்டம் பொய்க்காது. இந்த இநன்யாவின் சொல்லும் ஓர் நாளும் பொய்க்காது.
ஓர் நிலை கொள்.
உயர்ந்த வாழ்வும், மீண்டும் பிறவி இல்லா வாழ்வும் உன் காலடியில் !
ஓர் நிலை நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment