Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, July 6, 2017

விக்கிரமம் நிறைந்தவன் நீ ! ஏன் விப்பிரம்மாக இருக்கின்றாய் ? ஆரிடை தெரியாது ஏன் ஆனந்தம் தொலைத்து வாழ்கின்றாய் ? ஓர் நிலை கொள் !


விக்கிரமம் நிறைந்தவன் நீ ! ஏன் விப்பிரம்மாக இருக்கின்றாய் ? ஆரிடை தெரியாது ஏன் ஆனந்தம் தொலைத்து வாழ்கின்றாய் ?
ஓர் நிலை கொள் !
ஆதியில் ஆன்மீக அறிவற்று இருந்தான். ஆளுமை தனக்குள் இருப்பதை உணர்ந்தான். ஆனந்தமாய் வாழ்ந்தான். எல்லாவற்றுக்கும் பயந்து இயற்கையை வணங்கி நேசித்தான். இருள், மிருகம், நாமம் எல்லாவற்றுக்கும் பயந்தான் ஓர் நிலை கொண்டவன்.
ஒரு வழியை பின்பற்றியவன் மதத்தை உருவாக்கினான். தன் கடவுள் தான் பெரிது, தன் வழிபாடு தான் பெரிது என்று மனிதனை குழப்பினான் ! வழி தெரியாது தடுமாறி மனிதன் வீழ்ந்தான் துன்ப கடலில் !
கடவுள்கள், முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், சித்தர்கள், ஞானிகள், பித்ருக்கள் முதலிய இந்த ஏழு நிலைகளும் மேலே உண்டு ! மனிதர்கள் வாழும் இடம் காண்டங்கள். இப்படி ஏழு உலகத்தில் எங்கே செல்ல வேண்டும் என தெரியாமல் மனிதன் விழி பிதுங்கினான். அதை மதம் என்ற போர்வை போற்றி குழம்பி திரிய வைத்தான்.
இங்கே வழிமுறைகள் மறந்தாய் ! வழிபாடு என்று கடவுளை நெருங்கமுடியாமல் தவிக்கிறாய் ! மீண்டும், மீண்டும் இங்கே பிறப்பதாலே உன் உலகம் செல்ல முடியவில்லை. நீ உன் உலகம் செல்ல வழிமுறைகளை பின்பற்று.
இங்கே யாரும் குரு அல்ல. பசுத்தோல் போர்த்திய புலி. இந்த கர்ம பூமியில் கர்மங்கள் நிரம்பி வழிய காரணம் உன் வழிபாடு தான்.
நீயே யோசி ! எது இங்கே நிம்மதி தரும் என்று ! தேவ ஜனங்கள் யார் ? கடவுளின் பிள்ளைகள் யார் ? ஒழுக்கம், அன்பு, கடமை, உள்ளவர்கள் யாவரும் கடவுளின் பிள்ளைகள் தான் என்பதை புரிந்து கொள்.
“மதம் மாறி, மனம் மாறி துன்புறுகின்றாயே உன் ஆண்மா இன்புறுவது எப்போதடா ?” என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வதுண்டு !
மனித மனத்தை மாற்ற மனிதனுக்கு தெளிவில்லை. மதம் மாறினால் கடவுள் அருள்வான் என்று சொல்கிறான். மதம் என்பது அன்பற்ற சொல். அறிவற்ற செயல் ! எல்லோருக்கும் பொதுவான தரை காத்திருப்பதை மறந்து அலைகின்றான். உலகம் அழியும் சூழலில் இருக்கிறது.
கடவுள் மதத்தை பார்ப்பதில்லை. மனித மனத்தை தான் பார்க்கின்றான். உலகில் எங்கெல்லாம் மத வழிபாடுகள் நிரம்பி வழிகின்றதோ அங்கேயே மிக கோர நிகழ்வுகள் நடக்க போகிறது இனி ! மதம் அழிந்து மனித நேயம் மலரும்.
கடவுள் ஆயத்தமாகிவிட்டான் !
அரசியல் நாடகமும், மத சூழ்ச்சியும் சாயம் வெளுத்துவிட்டது. எல்லாம் இங்கே நாடகம் என்பதை புரிந்து கொள்வான். இனி கடவுள் நடத்தும் நாடகத்தை பொறுத்திருந்து பார். மனிதன் இனி வழிமுறைகளை தேடி அலைவான்.
தன் குடும்பம், தன் இனம், தன் மதம் வளர்ச்சியாக வேண்டும் என்று ஏமாற்றும் நாடகங்களை மனிதன் அறிவான். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி கூட்டம் கூட்டுகின்றான். யாராவது உழைப்பதற்கு வழி சொல்கின்றானா ? மதம் என்ற போர்வை போர்த்தி மனிதன் போடும் வேஷம் இனி கலையும்.
ஆயிரம் கடவுளை வணங்கினாலும், ஆயிரம் வழிபாடுகள் செய்தாலும் ஏன் அதிகமாக நோய்களும், துன்பங்களும் நாளுக்கு நாள் கூடுகின்றது என்பதை யோசி ! புத்தி உள்ளவன் இதை அறிவான்.
படைத்தவன் பாசமாக பக்குவமாக படைத்தான். அவன் அன்புக்கு நிகர் ஏதுமில்லை. இங்கே மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு மனிதன் அமைத்த சட்டமே காரணம் ! இனி கடவுளின் சட்டம் பொய்க்காது. இந்த இநன்யாவின் சொல்லும் ஓர் நாளும் பொய்க்காது.
ஓர் நிலை கொள்.
உயர்ந்த வாழ்வும், மீண்டும் பிறவி இல்லா வாழ்வும் உன் காலடியில் !
ஓர் நிலை நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment