20-07-2017
அள்ளூறும் நீர் உனக்குள் ! அறிந்து உணராமல் அலைகின்றாய் !
வல்லூறு போல் வாழ்வில்லா வசந்த காலம் தொலைத்தாய்.
சொல்லூறும் தூய செயல் எங்கே உன் நிறுத்தை மறந்தாயடா ?
வல்லூறு போல் வாழ்வில்லா வசந்த காலம் தொலைத்தாய்.
சொல்லூறும் தூய செயல் எங்கே உன் நிறுத்தை மறந்தாயடா ?
கருவறை சாவி கடவுளின் கைகளில் !
முரண்பாடான எண்ணங்கள் எத்துணை வந்து சென்றாலும் இவ்வுலகில் உன்னால் கடவுளை கண்டு கொள்ள இயலும் ! அதற்கு நீ முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் ! நான்கு சுவருக்குள் இருந்து தவறு செய்தால் நாயகன் அறியாதான் என பொருளாகுமோ ? பார்க்க கண்களும், செயல்புரிய கை கால்களும் உணர்வதற்கு அறிவையும் தந்தானே ? அந்த ஆளவந்தான் ஆநிரையோனை ஏன் அறியா உணரா அலைகின்றாய் ?
தித்திக்கும் அவன் பதம் !
அன் சொல்லாய், வின் சொல்லாய், பன் சொல்லாய் பாடிடு பரமபதன் பதங்களை ! அமிழ்தினிலும் இனிதான நாமத்தை உன் பற்றும் சிரிக்குமடா ! ப்ரம்ம லோகத்தில் இருக்கும் என் தந்தையின் பேராத்மா சிலிர்க்குமடா !
அன் சொல்லாய், வின் சொல்லாய், பன் சொல்லாய் பாடிடு பரமபதன் பதங்களை ! அமிழ்தினிலும் இனிதான நாமத்தை உன் பற்றும் சிரிக்குமடா ! ப்ரம்ம லோகத்தில் இருக்கும் என் தந்தையின் பேராத்மா சிலிர்க்குமடா !
படைப்பில் காற்றே மிக வலிமைமிக்கது ! நீர் இல்லாமலும், உணவில்லாமலும் உன்னால் சில நாட்கள் வாழ முடியும். ஆனால் காற்றில்லாமல் உன்னால் வாழ முடியுமா ? கருணை கடவுளை மறந்தாயே. வெட்டி பேச்சு பேசி கடவுள் இல்லை என்று பிதற்றுகின்றாய். ஏன் ?
காற்று, நீர், நட்சத்திரம் கணிந்த முகம் என் விந்தை யாகவா ! என் அன்பிற்கினிய தந்தை ! எந்தை நிகர் எவரடா ? என் சொல் நிகர் எதுவுமில்லையடா !
மேலிருந்து நேரடியாக வந்த மலர் தாமரை பாரிஜாதம் !
புணிதம் ஐந்தும் , என் அன்னை அமரும் ஆமலகமும் அறிவாயோ நீ ? அருகும் , தர்ப்பையும் அப்படியே கீழே இறக்கப்பட்டது. சுவியும் சுகமாய் கொண்டுவரப்பட்டது. நான் சுமந்து வந்தேன். சுகமான சுகத்தை (ஆறு பேராத்மா). ஆனால் நீ சுமந்து வந்தாய் பாவ மூட்டைகளை !
உன்னில் உள்ள எல்லா பாவமூட்டைகளையும் கடலில் தூக்கி எறி ! கடவுளின் பாதத்தை பற்று ! கடவுளிடம் அழுது ஆர்பரிக்காதே ! நீ செய்த பாவத்திற்காக அழு ! மீண்டும் செய்ய மாட்டேன் என்று சத்திய முழக்கமிடு ! குளிரிலும், நீரிலும், கொளுத்தும் நெருப்பிலும் அவன் குளிர் பார்வை உன் மேல் விழும் ! குதூகலம் வாழ்வில் நிறைவாயடா !
உஷிதமான நேரம் கடவுளை நினைக்கும் நேரமே ! நீ நினைத்து ஏதும் நடவாது ! நான் நினைத்து யாவும் நடக்குமடா !
புணிதமான கருவறையின் சாவி, படைத்தவனின் கைகளில் ! அவன் நினைத்தால் மட்டுமே கருவறையை திறக்க முடியும். நீ உருவாக்கும் எந்த உபகரணங்களாலும் கருவறையை திறக்க முடியாது. எழுதிய விதி கருவறை செல்லும் ஒரு துளி நீரிலே எழுதப்பட்டது !
எழுதிய விதி அழுதால் தீராது. விரதம், உபவாசம் இருந்தாலும் தீராது. உன் தர்மம், ஒழுக்கமே அனைத்தையும் மாற்றும். அதற்கு நல் குருவின் ஸ்பரிஷம் இருக்க வேண்டும். கருவறை பூட்டி சாவி வைத்தவன் என் நெஞ்சினிலே ! நிறைவாய் நான் இருக்கின்றேன். உன் தலைவிதி சாவியும் என் கையிலே ! விதி மாறுமடா !
என் நாமம் சொன்னால் உன் வினை அழியுமடா ! உணர்வாய் ! உனக்குள் இருந்து உஷிதமான நேரம் தருவேன்.
ஒழுக்கமாய் இரு ! சத்திய தர்மமாய் இரு ! நீ நினைத்தபடி வாழலாம் ! நினைத்த நேரம் யாகபிரஷ்தம் அடையலாம் !
கருவறையை காப்பவன் நான் ! உனை கவலை இல்லாது வைப்பேனடா ! என்னில் வந்து நிறைமதியானாய் !
உன் மதி என்னில், உன் விதி சொன்னில் ! வல்வில் மண்ணில், வாழ்வாய் விண்மின்னில் ! மண்ணில் உன் கண்ணில் எல்லாம் என்னில் !
கவலை உனக்கேதடா ? வாழ்வாயடா !
தூயவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment