Inanya Maha Munivar
29-06-2017
என்னில் மீசரன் யாருமில்லை ! நீ முழவம் கொட்டடா ! முழவிதான ஒசு செய்யடா ! நான் உன் முன்னால் ! என்னை புரிந்து உணரடா !
நன்றி சொன்னாயா ?
படைப்பில் எதுவும் மாறவில்லை ! பாழ்பட்ட மனிதன் தான் மாறிவிட்டான் ! என்றாவது நீ பிறந்த வயிற்றுக்கு நன்றி சொன்னயா ? உனை தோளில் சுமந்த தந்தைக்கு, உனக்கு சுகம் கொடுத்த மனைவிக்கு நன்றி சொன்னாயா ?
ஒரு வேளை உணவு கொடுத்தால் நீ எங்கே போனாலும், எந்த கூட்டத்தில் நின்றாலும் உனை பார்த்து வாலாட்டி நன்றி சொல்லும் நாயிடமிருந்து நன்றியை கற்றுக் கொள்ள மறந்துவிட்டாய்.
அதற்கும் மேலாக உண்ண உணவு, உடுக்க உடை , படுக்க இடம் தந்த பரமாத்மாவுக்கு நன்றி சொன்னாயா ?
நீ செய்யும் எல்லா கர்மாக்களையும், பாவங்களையும் சுமக்கும் தாய் பூமிக்கு நன்றி சொன்னாயா ?
எதற்கும் நன்றி சொல்ல தெரியாதவன் நீ ! எப்படி நலமாக வாழ்வாய் ?
கஷ்டத்தில், நஷ்டத்தில் கடவுளை நோக்கி கூக்குரல் போடும் குஷ்ட மனிதனையே கண்டேன். மரத்திற்கு நீர் ஊற்றுகிறாய். அதன் நன்றியை காய்கனியாக உனக்கு தந்து பெருமிதத்தோடு வாழ்கிறது. நீயோ உண்டவன் வீட்டுக்கு கெண்டி தூக்க பார்க்கிறாய்.
இங்கே மழைக்கும், மண்ணுக்கும், தண்ணீர்க்கும், தாவரத்திற்கும் நன்றி சொல்ல மறந்தாய். பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும் புறம் தள்ளும் வேடிக்கை மனிதர்களை பார்க்கின்றேன். பின் சக்தியும், சத்தும் இல்லாமல் நாதி இல்லா சாகக் கண்டேன்.
நன்றியை மறந்துவிட்டாய். பின் எப்படிடா உனக்கு பூரிப்பு வரும் ?
நன்றி, நன்றி இந்த சொல் எப்போதும் நாவில் வரட்டும் ! நாயகன் நான் உனை ஓடோடி வந்து அரவணைப்பேன் !
தன் உயிரையும் மெய்யையும் பிசைந்து பெற்றாள் உன்னை உயிர்மெய்யாக ! நீ பெற்றவளை மறந்து பேடியாக திரிகின்றாய். புலன் அனைத்தும் உனக்கு தந்து பொறி எல்லாம் உனில் கலந்து மெய் சுவைத்து உள் இனித்து பாவையின் ஒழுகு மாடத்தை முகர்ந்தாயடா. சுவைத்தாயடா. மனைவியாய் உனக்கு மார்விலக்கி மடிபிச்சை தந்தாளடா ! மாயை எனும் மனைவிக்கு ஏன் நன்றி சொல்ல மறந்தாயடா ?
உத்தமி என்றும் பத்தினி என்றும் பறைசாற்றும் உன் வாய் உருமறைந்து ஊருக்குள் அலைய கண்டேன். சத்தியம் நீ மறந்தாய். சடுதியில் துன்பம் கண்டாய். உண்டாய் ஊன் துன்பம். உலகின் ஆளுமையை நிந்தித்து வாழ்கின்றாய்.
திருமணமான புதிதில் ஆல் போல் தளைத்து சருகு போல் வேரூன்றி இருக்க கண்டேன். ஆனால் பக்கத்தில் நெருங்க நெருங்க காணல் நீர் போல் உறவு காணாமல் போக கண்டேன் ! அதே போல் தான் என்னில் வருகின்றான். என்னை மிக நெருங்குகிறான். நான் நெருங்கி பாசமாக வரும் பொழுது விலகிக் போகின்றான் !
இங்கே வீரமும், விவேகமும் இரண்டு மூன்று பிள்ளை பெருவதற்கே உபயோகபடுத்துகிறான் ! வந்த கடமை, வாழும் கடமை தெரியாது அன்பை தொலைத்து உறவை தொலைத்து வெளியே எங்கோ தேடுகின்றான். மீண்டும் பிறக்காத கடமை புரியாது மாண்டு போகின்றான்.
நன்றி சொல்லடா ! நாயகன் நான் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். சுகமான சுகம் தருவேன்.
அணுவுக்குள் அணுவானவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment