பரப்பாழில் வான் விளக்கம் ! பெருவனத்தில் அகழி நிறை ! ஆழம் தெரியாது அறியாது வாழும் மானிடா, ஏதுரைப்பேன் நானடா ?
பணிவாய் இரு !
மரம் ஏறினால் மேல் நோக்கி பார்த்து ஏறுகின்றாய். எப்போதும் மேல் நோக்கியே வேண்டு என்று அர்த்தம். மனிதனும், மரமும் தான் மேல் நோக்கி வளர்கிறது. ஆழ்ந்த சூட்சுமம் அறிவாயடா ! மரங்கள் இல்லையென்றால் நீ இல்லை. மரத்தை பயன்பாடுக்கு கொண்டு வா ! மலையில் ஏறும் போது குணிந்து தான் ஏறுகிறாய். இறங்கும் போதும் குணிந்து தான் இறங்குகிறாய். ஏன் என்று யோசி !
எப்போதும் பெரியோர்களை மதிக்க கற்றுக் கொள். பெற்றோரை வணங்க கற்றுக் கொள் ! பணிவு இருந்தால் தான் நீ வெல்வாய் ! நீ உயர உயர உனக்கு பணிவு வேண்டும். அதற்கு பெரியோர்களை துணை கொள். நல்குருவை நாடி வாழ வழி செய்து கொள் !
சித்தர்கள் மலையில் கோயில் கட்டியது நீ உணர்வதற்காகத்தான் ! உள்ளத்தில் பணிவு வர வேண்டும் என்பதற்காக தான். அதை விடுத்து மலையை சுற்றினால் மகத்துவம் உண்டு என்றெல்லாம் சொல்வது பொய்.
கடவுள் உருவாக்கிய உலகத்தை மனிதன் பங்கிட்டு பிரிக்கின்றான். எல்லை வகுத்து நான் என்று இறுமாந்து அலைகின்றான். அகழி தெரியா கடலை பிரித்து ஆணவத்தோடு வாழ்கின்றான். பாதுகாக்க பூமிக்கு அனுப்பினால் நான் என்று பிதற்றுகின்றான். ஆண்டவன் எல்லாம் மாண்டுவிட்டதை அறிவாயோ நீ ?
கடவுள் ஆண், பெண் என்று பார்ப்பதில்லை. ஆண்மாவை பார்க்கின்றான். நாயிடம் உள்ள விசுவாசத்தை எதிர்பார்க்கின்றான். இங்கே எல்லோருக்கும் கடமைகள் வேறு. ஆளுக்கு ஒரு கடமை உண்டு ! ஆணுக்கு ஒரு கடமை, பெண்ணுக்கு ஒரு கடமை. இங்கே கடமை மறப்பதால் தான் கழகம் வருகிறது. யாருக்கும் யாரையும் அடிமையாக படைத்ததில்லை இங்கு !
படைத்தவன் கை பாகுபாடு பார்ப்பதில்லை. படைப்பை பார்த்தவன் தான் பாகுபாடு பார்க்கின்றான். இந்த புண்ணிய பூமியின் அழகை பாரடா ! யுக யுகங்களாக வந்த உயிர்கள் அனைத்திற்கும் வாரி வாரி கொடுத்த சுயநலமில்லாத எதிர்பார்ப்பு இல்லாத இந்த வலிமைமிக்க பூமிக்கு என்றாவது முத்தமிட்டு மகிழ்ந்தாயா ?
எத்தனை எத்தனை தானியங்கள், பழங்கள், கனிகள் ? நீ அழகு பார்க்க நவராத்தினங்கள் ! பருக நீர் தந்த பக்குவ பூமிக்கி என்றாவது நன்றி சொன்னாயா ? நிணநீரும். நிலநீரும் நிம்மதி தந்ததே ! நீ தான் யாருக்கும் நிம்மதி தராமல் நீசனாய் வாழ்கின்றாய். கடவுள், மகான்கள், சித்தர்களை தூக்கி சுமந்த இந்த பூமிக்கு நன்றி சொல் ! நீ புணிதனாவாய் !
கடவுளின் பாதமே உன் உயிருக்கு விடுதலை தரும் !
பற்றிடு பற்றில்லாமல் !
பற்றிடு பற்றில்லாமல் !
பற்றா தான் பற்றும், பற்றும் எற்றி செல்லாமல் நன்றி சொல்ல மறந்ததினாலே நிம்மதி இல்லாமல் மனிதன் அலைகின்றான். பணிவு இல்லா வாழ்வு உனை பாசமில்லாக்கும். நானலைப் போல பணிந்திரு ! எதற்கும் தளராத மரத்தை போல உயர்ந்திரு !
காற்று, மழை, புயல், பனி, கடும் வெயிலுக்கு தாக்குபிடித்து இறுமாந்து நிற்கும் மரத்தை போல கர்வமில்லா வாழ்ந்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். வாழ்வு பெருஞ்சுவர் உன் சந்ததியை வாழ வைக்கும். கடவுள் இல்லை என்று பிதற்றாதே ! நெஞ்சம் முழுவதும் கவலையை சுமந்து திரிகின்றாய். அதை தீர்க்க பணிவு கொள். துணிவு கொள். துயரமேதடா ?
துண்மார்க்கன் கடவுளை இகழ்வான். தூய நெஞ்சன் கடவுளை அறிந்து மகிழ்வான் !
அறிவாய் இரு ! பக்குவம் உனக்குள் வரும் !
மேருவின் உயரம் நான் ! மேதகு நிறையோன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment