நான் பயக்ருத்தன் அல்ல. பயநாசனன் என்பதை மறவாதே ! வதுகையால் தான் உன் வாழ்வு. உன் தீர்மானம் ஏதுமில்லை !
தீர்மானம்
உன்னிடம் இருப்பது ஒன்று ! நீ அறியாத ஒன்று வெளியேயும் இருக்கிறது. அதை தான் கடவுள், இயற்கை என்று சொல்கின்றாய். அதை தான் ஞானம் என்று சொல்கின்றாய். இதை அறிந்து கொள்ள யாரும் முயலவில்லை.
நான் உனக்கு செல்வத்தை கொடுத்து சோம்பேறியாக்க நினைக்கவில்லை. நீ அறிந்து தேடும் செல்வமே உன்னை ஆணந்தமாக்கும் என்பதற்காக ! அதனால் தான் உன்னை உணர்ந்து அறிய முற்படு ! வெற்றியை நோக்கி போராடு ! தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை. உன் முயற்சி கல்லறை வரை இருக்கட்டும். நிச்சயம் வெல்வாய் !
அறிந்து நிலைக்கும் செல்வம், ஞானம் உனை மீண்டும் பிறவி இல்லா நிலமையை தரும். அதனாலே ஒழுக்கத்தை பிரதானமாக நிறுத்துகின்றேன் ! செய் துணிவென்ற மந்திரம் உன் முயற்சி தான். முயற்சி செய் ! நான் உனக்கு உதவியாக இருப்பேன். உன் பாவத்தை கரைப்பது என் வேலை. என் அறிவுக்கு தெரியாமல் எந்த உயிரும் மாண்டுபோவதில்லை.
பிறரை குறை கூறி திரிபவன் மடையன். தன் குறை நிவர்த்தி செய்கின்றவன் மனிதன். மேலே தீர்மானிக்கபட்டு தான் கீழே வருகின்றாய். இங்கே நீ எதுவும் தீர்மானிக்க முடியாது. உன் செயலினால் வரும் இன்ப துன்பங்களை மனதில் வைக்காதே ! வெற்றியோ, தோல்வியோ அதை பற்றி சிந்திக்காதே ! முயற்சி செய்து முன்னேறும் வழியில் சென்று கொண்டே இரு ! வெற்றி, தோல்வி உன் செயல் தான் நிர்ணயிக்கின்றது. ஆதலால் எதையும் சரிவர ஆசையாய் , அன்பாய் செய் !
சுய நலத்தோடும், தன் ஆசை நிறைவேறவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்பவன் எதையும் பெறுவதில்லை. நீ கேட்காமலே கடவுள் தருவார்.
உன்னிடமே எல்லாம் இருக்கின்றது. முதலில் உன்னை தேடு ! நான் உபதேசம் பண்ண வரவில்லை. என் முகத்தை உனக்கு காண்பித்து, ஆசிரமம் கட்டி, விளம்பர பலகை வைத்து உன்னை வரவேற்க தயாராக இல்லை. உணர முயல்பவன் எங்கிருந்தாலும் என்னை தேடி வருவான் ! என்னை முழுமையாக உணர்ந்தவன், தன்னை வென்று பிறருக்கும் நல்வழி காட்டுவான் !
என் கடையில் ஞானம் உண்டு. அதை தர காத்திருக்கின்றேன். இங்கே உழைக்காமல் ஓசுக்காக அலைகின்றான். உபாயியாக திரிகின்றான் !
நீயே செய்தாய் , நீயே திண்றாய். நீ தான் அனுபவிக்க வேண்டும். சீற்றம் தாளாமல் திக்கு தெரியாமல் விழப்போகின்றன கர்மாக்கள் ! கர்மாக்கள் ஒருவரையும் விடப்போவதில்லை நாங்கள் !
யுகத்தை சரி செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம் !
வீட்டை சரி செய்யாதவன் வீதியை சரி செய்ய தீர்மானிக்கின்றான். முடிவில் கரமாலமாக போகின்றது. சத்தியம், நிச்சயமாக தர்மாக்களை இலகுவாய் வாழ வழி செய்தாகிவிட்டது. இனி தர்மாக்கள் வாழும் !
உன் எண்ணம் , உன் சொல் உன்னை தீர்மானிப்பதில்லை. உன் செயல் தான் உன்னை தீர்மானிக்கிறது . இப்படி தான் வாழ வேண்டும் என்று மனிதன் தீர்மானிக்கின்றான். ஆனால் விதி வேறொரு பாதையில் பயனிக்கின்றது.
துன்பங்கள் நிறைந்த வாழ்வில் கடவுளை தேடு ! உன்னைக் கடவுளிடம் ஒப்புவித்து வாழ கற்றுக் கொள் ! கடவுள் தீர்மானிக்கும் வாழ்வு பேரின்பமாக இருக்கும் ! பெரு வாழ்வாக இருக்கும் !
புத்தி இல்லாதவன் தான் கடவுளை மறுப்பான். புத்தி உள்ளவன் பேதலிக்க மாட்டான். எல்லோருக்கும் வாழ்வும், சாவும் சமமாக தீர்மானிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கோணம் தான் ! ஒவ்வொருவர் வாழ்வும், தாழ்வும், சாவும் தீர்மானிப்பது கடவுளே ! பிறரின் வாழ்வை பார்த்து சிந்திக்காமல், உணராமல் பொறாமையோடு மனிதன் வாழ்கின்றான்.
தன் நிலை அறிந்தால் இங்கே கடவுள் இல்லை என்று பிதற்றமாட்டான். விதை நெல்லை தூவி மகசூலை தீர்மானிப்பது நீயல்ல. உனக்கு இட்ட கட்டளை விதையை விதைத்து அதை பக்குவமாக பாதுகாப்பது தான். முடிவை தீர்மானிப்பது கடவுளே.
பிறருக்கு துன்பம் கொடுக்க தீர்மானிக்காதே ! அதுவே உனக்கு திரும்ப வரும். சுகாசி, வால் உரைப்பு ஒரு விரல் நுணி அளவு சாப்பிட கற்று கொள். உன் உடல் நோயில்லாமல் திர்மானிக்கப்படும் !
உன் வாழ்வை அழகாக்க நான் தீர்மானித்துவிட்டேன். தர்மாக்கள் நலமுடன் வளமுடன் வாழ தீர்மானித்துவிட்டேன் ! உணரடா ! உண்மையில் நன்மை நானடா !
உன் வாழ்வை தீர்மானிக்கும் வல்லமை உள்ளவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment