சுத்த சன்மார்க்கிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையைக் கடைபிடிப்பவர்கள.மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
எவ்வகையிலாவது சாதி சமய மத வாதிகள் நம்மை இழுத்து மாற்றப் பார்ப்பார்கள்.
தவம்.யோகம்.தியான்ம்.காயகல்பம்.குண்டலினி யோகம்.ஈஷாயோகம்.காயத்திரியோகம்.கர்மயோகம்.ராஜயோகம்..போன்ற தேவை அற்ற பயிர்ச்சிகளை சொல்லித் தருகிறோம் என்று ஏமாற்றுவார்கள்.அவற்றில் சிக்கிவிடக்கூடாது.
மேலும் சாகாக்கல்வித் சொல்லித்தருகிறோம்.என்றும் ஏமாற்றுவார்கள்.
தீட்ஷைத் தருகிறோம் என்றும் ஏமாற்றுவார்கள்.
சாகாமல் இருக்க காயகல்பம் தருகிறேன் என்று ஏமாற்றுவார்கள்.
என்றும் இளமையோடு இருக்க மருந்து தருகிறேன் என்று ஏமாற்றுவார்கள்.
குரு உபதேசம் வேண்டும் என்பார்கள்.குரு இல்லா வித்தை குருட்டு வித்தை என்பார்கள். குரு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பார்கள். இப்படி பல வகையில் நம்மை ஏமாற்றுவார்கள்.
எதையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது.
நமக்கு வேண்டியது :-
வள்ளலார் சொன்ன உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடித்தால் போதும் எல்லா நன்மைகளும் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்வார்.
உண்மை ஒழுக்கம் உண்மை தயவு.உண்மை இரக்கம்.உண்மை அன்பு.உண்மை கருணை. அவசியம் வேண்டும்.
மேலும் நம்மால் முடிந்த அளவு ஜீவ காருண்யம்.செய்ய வேண்டும். இடைவிடாது சிற்சபை இடத்தில் மனதை செலுத்தி வர வேண்டும்.சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடம்.
அதாவது உச்சிக்கும் கீழே.உள் நாக்கிற்கும் மேலே.மூலையின் மத்தியில்.அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியில் ஆன்மா என்னும் உள் ஒளி உள்ளது.அவற்றில் மனதை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும். அதுதான் சுத்த சன்மார்க்க வழிபாடு.அதுதான் சுத்த சன்மார்க்க தியானம் என்பதாகும்.
இதைத்தான் வள்ளலார் உண்மை மார்க்கம் என்கின்றார்.
உபாய மார்க்கத்தை நம்பாதீர்கள்.உண்மை மார்க்கத்தை நம்பி கடைபிடித்து வாருங்கள்.ஆண்டவர் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார்.என்கின்றார்.
எனவே சமய மத வாதிகள் சொல்லுவதை எதையும் நம்பாதீர்கள்.எச்சரிக்கையுடன் இருங்கள்.
நமக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் குரு...திருஅருட்பா தான் வழிகாட்டும் கருவி....
திருஅருட்பா என்னும் கதவை திறந்து .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப பெருவாழ்வு வாழ்வோம்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
No comments:
Post a Comment