நான் அளவம் அல்ல ! நான் கணவம் ! சகுடத்தை போல் இரு ! தறி கெட்டு போகும் உன் மனதை நிர்மூலமாக்கு !
பற்று
என்னில் எச்சிலன் ஏமாறமாட்டான் ! என்னை மதிப்பவன் தன்னில் மலர்வான் ! மிதிக்க பார்க்க நினைத்தால் வளைக்க பார்க்கும் விதி ! எதில் பற்று வைத்தாலும் உனக்கு துபம் தான் ! உன் பற்று (உயிர்) எற்றத்தான் போகிறது. எற்றி பிழைக்கும் மானிடன் இறுமாந்து கிடக்கும் மனம். இடையில் சதிராட்டம் போடும் விதி.
எதை அடக்கி எதை அடைந்தாய் ? இங்கே நிகரற்றவன், தன் நிலை மறந்தவன், எனைத் தவிற எவருமில்லை !
வக்கற்ற பேச்சில் வசைபாடும் மனிதம் தான் இங்கு கர்ம கூட்டமாக அலைகின்றது. துன்பம் தாள முடியாமல் இங்கே துயர்படுகின்ற உயிரே மிக அதிகமாக போகிறது.
கடவுளே இல்லை என்று இங்கே பிதற்றி காடுமேடாய் அலைவான். துன்பத்தை போக்க திராணி இல்லாமல் துயர்படுவான். ஆணும், பெண்ணும் பேசி அன்றே மணமுடிப்பான். கணவம் இருக்கும் ஊரில் இருக்க ஆசைப்படுவான். பெண் உயர்வாள். ஆண் அடிமையாகி ஆணந்தம் தொலைப்பான். ஆளும் அரசாட்சி எல்லாம் பெண்ணே ஆள்வாள் !
இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா பெருநாடுகளை ஞானப் பெண்கள் ஆள்வார்கள். ஆதிக்கம் நிறைந்த யுகத்தில் ஆளும் வல்லமையையும் வாழும் வல்லமையையும் கடவுள் தருவான் ! காட்டில் உள்ள மிருகங்கள் ஊருக்குள் வந்து உருக்குலைக்கும். பெருங்காற்றில் பெரு மரங்கள் வீதியை ஆக்கிரமிக்கும். மனிதன் கட்டிய உயர் கோபுரங்கள் சீட்டு கட்டு போல சரிந்து போகும். மதம் பிடித்து யானை கூட்டம் மனிதனை மண்ணோடு மண்ணாக புதைக்கும்.
யுகத்தில் இருக்கும் மனிதர் எல்லாம் இன்முகம் இல்லா இல்லத்தில் இல்லாமல் தெருவில் நிற்பான். பற்றை அறியாதவன், பற்றில்லா வாழ தெரியாதவன் பரிதவிக்க நான் கண்டேன் ! நான் இறுமாந்து அலைவேன் ! ஆணந்த கதியில் ஆயுள் நோக்குவேன் !
உன் முகம் பார்க்க ஒரு கண்ணாடி தேவைப்படுகிறது. உன் உயிர் நிலை அறிய ஒரு நல் குரு எனும் கண்ணாடி தேவை. அதை தேடி அடைய முயன்று முடிவை உணர் ! உன் முன்னால் பார்க்க குருவும், உன் பின்னால் பார்க்க கடவுள் என்ற காலக் கண்ணாடியும் தேவை. அதை அடைய பற்றை துற ! பற்றை (உயிரை ) எற்றவிடாதே !
உன் பார்வை எல்லாம் நல் குருவை நோக்கி இருக்கட்டும். கடவுளை, குருவை நீ நினைத்தவுடன் உன் கண்ணில் நீர் வருகிறதோ அப்போதே நீ உணர்ந்துவிட்டாய் என்ற அர்த்தம் ! இது தான் பற்றில்லா உணர்தலின் வெளிப்பாடு !
நீ தேடும் நிம்மதி வெளியில் இல்லை ! கோயிலெல்லாம் அரவமும், ஆமையும் புக கண்டேன். எருக்கும், செறுக்கும் அங்கே முளைக்க கண்டேன்.
என் உயிர் எப்போதும் ஆணந்த நிலையிலே இருப்பதை அறிவாயோ நீ ?
எத்தனெல்லாம் சித்தனாகி மூடர் பின்னால் செல்வான். மூச்சுக் காற்றில் நிம்மதி தொலைக்க கண்டேன். பொய்யான உலகில் பொய் உடலை வைத்து பொய்யனைப் போல் வாழ்கின்றாய், பெய்யென மழை போல் அல்லாமல் !
அறியாமை எனும் பற்றை அரி ! அரி என்றால் உணர் என்று அர்த்தம் !
நல்ல ஆலோசனைகளை புரிந்து கொள்ள முடியாத முட்டாளுக்கு சொன்னால் துன்பம் தான் கொடுப்பான். எப்போதும் கடவுளை துணை கொள் ! உனக்கு நல்லது செய்ய நினைக்கும் குருவை நாடு ! பற்றில்லா, பாசமில்லா வாழும் குருவை தேர்ந்தெடு ! உனக்கு வாழ்வின் வெளிச்சம் எப்போதும் உண்டு !
நான் பற்றாய் உன்னுள் இருக்கிறேன். நீ புற உலகில் பற்றில்லாமல் வாழ பழகு ! பற்றை நல்விதமாக எற்ற வைக்கலாம் !
உன்னை தாங்கி பிடிப்பவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment