திடாரி உள்ளவன் சீரோடு வாழ்வான். உனக்கு ஒரு அடையாளம் வேண்டும் பூமியிலே ! பூமியில் உன் அடையாளத்தை விட்டுச் செல் !
அடையாளம்
காலம் காலமாக உனக்குரிய அடையாளம் யுகத்தில் பேசப்பட வேண்டும் ! வந்தது வாழ்வதற்கு அல்ல ! உன் பாவம் தீர்பதற்காக !
முழுமையாக உனை அறிந்திட நினை ! நல்வழி நடந்து உன் காலடி தடங்களை இங்கு விட்டுச் செல் ! இங்கு நீ கற்றது பெரியது அல்ல. நீ செய்யும் கடமை தான் பெரியது.
உணர் ! உனக்குரிய பொருள் ஏதுமில்லை பூமியில், நீ செய்யும் தர்மத்தை தவிற ! உன் உயிர் உனக்கு சொந்தமல்ல ! உன் உடலும் உனக்கு சொந்தமல்ல !
கடவுளை பற்றி பேசுவதற்கு நீ யார் ? அவர் எப்படி இருப்பார் ? அவரின் நிறம் , வடிவம் என்ன ? எதையும் அறியாதவன் நீ ! எதையும் அறியாமல் கடவுளை பற்றி பேசுகிறாய். நீ தூங்கும் போது உன் ஆண்மா கடவுளிடம் சென்று வருவதை உணர்ந்தாயோ நீ ? உணர்ந்தால் கடவுளைப் பற்றி பேசமாட்டாய் !
என் கருணைமிக்க தந்தை எதையும் அறிந்து செய்யும் எண்ணிலடங்கா ஆற்றல் உள்ளவர் ! அவருக்கு தெரியும் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்று !
உன் ஆணவம், அதிகாரம், உனை அழித்து கொண்டிருகின்றது ! உன் கடிவாளம் கடவுளின் கையில் ! நீ ஒரு தலையாட்டும் பொம்மை. மேலிருந்து ஆட்டுவிக்கின்றோம், நீ ஆடுகின்றாய் ! உன் செயல் இங்கு ஏதுமில்லை. கடவுள் கொடுத்து தான் நீ ! உன் கடனை அடைத்து விட்டு பின் ஊரை பற்றி பேசு !
என் நிலை நானறிவேன். உன் நிலை அறிய முற்படு ! உன் விதியை மாற்றி கொடுக்கும் விதி எனக்குண்டு !
இந்த ஆத்மத்தின் தலைவன் இநன்யாவால் உன் விதியை கூட மாற்ற முடியும் ! முதலில் உன் பாதையை தெளிவானதாக்கு. பாதை சரியானால் உன் ஊர் (பிரபஞ்சம்) எளிதாக சென்று சேரலாம். உன் காலடி தடங்கள் பூமியில் அழியாதிருக்க தர்மம் செய் !
உன்னை அறிய அறிவாக யூகி ! அன்பாக பழகி, உள்ளம் மகிழ யூகி ! நான் உனக்கு எல்லையில்லா நிம்மதி, சந்தோஷம் தருவேன். உனக்கு கோடி செல்வம் தர காத்திருக்கின்றேன். உன்னை உணர்ந்து என் நாமம் சொன்னாலே போதும் ! நீ கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் சத்யமாக ! நல்லவன் ஒருவன் ஏழு முறை என் நாமம் சொன்னால் எல்லாம் கிடைக்கும் ! நீ வேண்டுமென்றால் எனை சோதித்து பார் !
கோயிலுக்கு சென்றால் விபூதி தருவான். சாமியாரிடம் சென்றால் ஏதாவது மந்திரம், கலை கற்று தருவான். ஆனால் நான் உனக்கு கொடுக்கும் பரிசு மீண்டும் பிறவி பிறவா நிலை கொள்ளும் பரிசு தருவேன் !
நான் உனை திக்கற்றவனாக விடமாட்டேன் ! உன் நெஞ்சில் எப்போதும் இருக்க வை என்னை ! என் வலிமை மிகு ஆசிகள் உனை கருவறையில் இருக்கும் சிசு போல காக்கும் !
உன்னை அடையாளப்படுத்த பூமிக்கு வந்தவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment