Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, September 14, 2016

அவணன் தெரியா நீ, நான் உவணன் என்பதை மறந்தாய் ! என் பார்வை கூர்மை என்பதை பாவி நீ மறந்தாய். சிறார் போல் உன் அன்பில் இருப்பேன் ! ஏனடா நீ மறந்தாய் ?

Inanya Maha Munivar
15-09-2016
233அவணன் தெரியா நீ, நான் உவணன் என்பதை மறந்தாய் ! என் பார்வை கூர்மை என்பதை பாவி நீ மறந்தாய். சிறார் போல் உன் அன்பில் இருப்பேன் ! ஏனடா நீ மறந்தாய் ?
 குழந்தைக்கு கற்றுக் கொடு !
நான் கற்று உன்னிடம் பேசவில்லை ! கற்பினை அற்று பேசுகிறேன் !
அஃறினை தெரியாது அடிசுவட்டை பற்றி விளம்புகின்றேன். நீ விதைத்த விதை (குழந்தை) வீரியமாக இருப்பதும், வீணாய்ப் போவதும் உன் கையில் மட்டும் தான் ! உன் குழந்தைக்கு வணங்குவதற்கும், வாழ்வதற்கும், பெரியோரை துணை கொள்வதற்கும் கற்றுக் கொடு ! சக மனிதனை நேசிக்க குடும்ப உறவுகளை அன்பில் அரசாள கற்றுக் கொடு.
பயிரை பக்குவமாக வளர்க்கும் உழவனை போல உழைக்க, ஞானத்தை அறிய, கற்றுக் கொடு ! வைராக்கியத்தையும், லட்சிய பாதையை அமைத்து கொள்ளவும் வீரியமாய் சொல்லிக் கொடு. நன்மை, தீமை எதுவென்று சொல்லிக் கொடு ! வாழக் கற்றுக் கொடு !
மனதை உற்று நோக்கவும், நல் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்ளவும், அன்பையும் பாசத்தையும் கற்றுக் கொடு.
பக்தியையும், பயத்தையும் கற்றுக் கொடுக்காதே !
உன்னால் எதுவும் முடியுமடா என்று அறியும் வயதிலே ஆசையாய் கற்று கொடு ! வீரியமாய் இருப்பதற்கும், விவேகமாய் வாழ்வதற்கும் நீ வீம்போடு கற்றுக் கொடு. உண்மை பேச, உரக்க பேச, நெஞ்சுரமாக பேச, நிஜ உணர்வை சொல்லிக் கொடு !
வீழ்ந்தால் எழுவதற்கும், வீரியமாக இருப்பதற்கும், சத்திய வழியை அடைவதற்கும் நல் குருவை தேடி நலம் வாழ சொல்லிக் கொடு. இன்பம், துன்பம் தான் வாழ்க்கை. அந்த துன்பத்தை துவஷம் செய்ய கற்றுக் கொடு !
சான்றோன் ஆக்குவது தந்தை கடனே !
ஊர் மெச்ச வாழ வைப்பது தாயின் கடனே !
பிறந்த குழந்தை தாய், தந்தை அரவணைப்பு இல்லாமலே பாவியாக திரிகின்றது. தாய் பாலை நுகராத குழந்தை தறிகெட்டு போகின்றது. பெரியோர் துணை இல்லாத குழந்தை சக மனிதனை தேடிச் சென்று படுகுழியில் வீழ்ந்து பாழ்பட்டு நிற்கின்றது.
கோழி தன் குஞ்சை இறக்கைக்குள் வைத்து வளார்ப்பது போல நீயும் வளர்த்து வாசமுள்ள மலராக்கு ! எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படித் தான் வாழ்க்கை வரைமுறை என்பதை சொல்லிக் கொடு !
உன்னில் இருக்கும் கெட்ட பழக்கத்தை முதலில் மாற்று ! உன்னை பார்த்து தான் உன் பிள்ளை முதலில் ஆரம்பிக்கின்றது. முதலில் உன் குழந்தைக்கு ஒரு குருவாய் இரு ! பின் அவன் திருவாய் மலர்வான் நல் குருவால் !
பிறப்பும், இறப்பும் நிர்ணயிக்கப்பட்டது. அது கடவுளின் கையில் ! இடையில் வாழ்வு உன் கையில். நீ எதை மனதில் நினைத்து உன் குழந்தையை விதைக்கின்றாயோ, அதன் தாக்கம் தான் முளையில் வளரும்.
இங்கே இந்த யுகத்தில் எப்படி இருக்க போகிறாய் என்பது உன்னோட விருப்பம். மகானாக மாறுவதும், மனிதனாக வாழ்வதும் உன் கையிலே ! இயற்கையை நேசிக்க, அதன் சிறப்பை, அறிவை புரிந்து கொள்ளும் முயற்சியை ஆசானிடம் கற்றுக் கொள்ளும். தாலாட்டும் போதே தன்னம்பிக்கையை தாய்ப்பாலோடு ஊட்டி கற்றுக் கொடு !
படைத்தவன் கை பாகுபாடு பார்ப்பதில்லை. பார்த்தவன் நீ தான் பாகுபாடு பார்க்கின்றாய். பகுத்தறிந்து பார்த்து புரிந்து கொள்ள முயற்சி செய். அரிதாரம் நோக்காதே. அதிகாரம் கொண்டு உன்னை ரணப்படுத்தும் உன் ஆண்மா. மறந்தும் தீவினையை நினைக்காதே.
பிறக்கும் குழந்தை இரண்டு வயது வரை கடவுளை பார்த்து சிரிக்கின்றது. பின் தலையில் அடித்து அழுகிறது. சிற்றறிவு வளர வளர மனிதம் இல்லாமல் மலர்கின்றது வாசமில்லாமல் ! குழந்தையின் தலையில் பாண்டீத்யம் எனும் குப்பையை சேர்க்காதே ! குழந்தைக்கு நல் தாயாய், நல் தந்தையாய், குருவாய் இரு ! உன்னை தெய்வம் என்று வணங்கும் !
இனி அதிசய குழந்தைகள் பிறக்கும். வயிற்றில் உள்ள சிசு பேசும். அது உனக்கு போதனை செய்யும். இது நடக்கும் சத்தியமாக !
உழைப்பும், உதவியும் தான் கடவுளை அடைய வைக்கும் என்று குழந்தைக்கு சொல்லிக் கொடு ! ஒழுக்கமாகவும், சுத்தமாகவும் இருக்க கற்றுக் கொடு ! கடவுள் ஒழுக்கம், சுத்தத்தில் தான் இருக்கின்றான்.
பெற்றோரை மதிக்கும் பிள்ளை, பெரியோரை துணை கொள்ளும் பிள்ளை, பெறு வாழ்வு வாழும் இங்கே ! சத்தியத்தின் பாதையில் நடக்கும் குழந்தை தரணியிலே போற்றப்படும் ! இந்த ராஜராஜன் பிரபஞ்ச இளவரசன் இநன்யாவின் தர்மத்திலே ஞான குழந்தைகள் நிறைய ஜணிக்கும் !
உன் பெயர் யுகம் இருக்கும் வரை வரலாற்றில் நிலைக்க தர்மம் செய்யக் கற்றுக் கொடு. குடும்பம், கூடி வாழ்ந்தால் தான் இங்கே பேரின்பம். இந்த புண்ணிய பூமியில் வாழாமல் எங்கெல்லாமோ ஓடுகின்றான். ஓடி ஓடாய் தேய்ந்து அன்பில்லாமல் கரைகின்றான்.
கல்யாணத்தில் கூடுகின்றவன் பின் இடுகாட்டில் கூடுகின்றான். மதத்தை விட மனித நேயம் தான் ஜெயிக்கும். மிருகங்கள் பிறந்தவுடன் எழுகிறது. இந்த மனிதனுக்கு தான் நடக்க ஓராண்டு, பேச ஓராண்டு, தன்னை புரிய பல ஆண்டுகள் ஆகின்றன. அன்பை தொலைத்தவன், அதிகாரம் தான் கொண்டு அம்மனமாய் திரிகின்றான் ! உழவனும், மீனவனும் ஏமாற்றவில்லை. படித்தவன் தான் ஏமாற்றுகிறான்.
நன்மையையும், தீமையையும் உன் செயலை பார்த்து தான் உன் குழந்தை கற்றுக் கொள்ளும் ! உன் குழந்தைக்கு நீ ஒரு பாடமாக இரு ! நீ முயன்று வெற்றி பெற கடவுளை துணை கொள் !
கடவுள் அன்பானவன் ! கருணைமிக்கவன் ! தியாக உணர்வுள்ளவன் ! தேடு ! அந்த காலத்தின் நாயகன் என் போல ஆத்மத்தை உணர்ந்தவனை உனக்கு அனுப்பி நல் வழிப்படுத்துவான்.
கற்றுக் கொடு நல்லவற்றை ! காலம் உனை வணங்கும் !
இந்த காளவன் எப்போதும் உனக்கும் உன் குடும்பத்திற்கும் துணை நிற்பேன்.
ச்ருதி இழுமு நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment