236 என் வேலத்தில் பசுமை உண்டு ! நல் விதை உண்டு ! விருட்சம் உண்டு ! நல் கனிகளும் உண்டு ! உணரடா !
மரங்கள் உயர்ந்தது !
என் நயனத்தில் கோடி நியர் பார்வை உண்டு ! இந்த பொன்னாட்சியின் புணிதன் பார்வை உனக்கும் உண்டு !
யுக வாழ்வில் விருட்சத்தின் சாயல் உணராமல் ஊமை கூட்டமாய் வாழ்கின்றாய் ! அரசத்தில் ஆண்மையை வைத்து ஆலில் ஆளுமையை வைத்தேன் ! விசித்தியின் சாயலில் விதை படைத்து வீதியை ஆக்கிரமித்து விடங்கனாய் நிற்கும் வின்வித்தை மறந்தாய். அத்தியில் உருக்கும் வைத்தேன். நீ ஆணந்தம் தொலைத்து அலைகின்றாய்.
பூக்காமல் காய் காய்க்கும் புணித மரங்கள் ஐந்தில் ஞானத் தெளிவை வைத்தான் என் நாயகன், என் தலைவன் , என் தந்தை, பிரபஞ்ச நாயகன் ! ஏன் மறந்தாய் நீ ?
வளர் கொம்பில் வான் மகன் நானிருக்க வையத்தில் உனை மறந்து அலைகின்றாய். யுகத்தில் பறவைகள், மரங்கள் உயர்ந்தது ! பூமியில் நிறைவை தருவது !
மரங்கள் இல்லையென்றால் ஒரு துளி காற்று உன்னை இயக்க யோசிக்கும். புணித வேதங்கள் பிரபஞ்சத்திலிருந்து கீழே மரங்கள் மீது பட்டே காற்றின் துணை கொண்டு யுகத்தில் பரவுகின்றது.
கடலில் அலை வருவதும் வேதங்களால் தான். ஆனால் அது கர்மத்தை அழிப்பதால் கடற்கரை செல்லாதே என்று கூறினேன். அதற்காக மீனவன் மட்டும் வாழ்கின்றான் என்று யோசிக்காதே ! உழவனும், மீனவனும் கடவுளின் அருட்பார்வையில் வாழ்பவர்கள்.
கும்பி மரத்தில் குறை இல்லா வாழ்வும், சோசத்தில் சுகமும் இருப்பதை மறந்தாய். மரத்தடியில் அமர்ந்தால் ஞானம் கிடைக்கும். இந்த அற்ப மனிதன் மலை ஏறி ஆணந்தம் தொலைக்கின்றான். ஆகமலத்தில் ஸ்வேதத்தை வைத்து அமலாக்கியில் புணிதமும், கோரங்கத்தில் குறை இல்லா வாழ்வும் வைத்தான் என் தந்தை பிரபஞ்ச நாயகன் ! உணரா அலைகின்றாய் ?
என் தந்தையின் உமிழ் நீரில் உதித்ததே ஆகமலம் என்பதை மறவாதே ! இதை அறிந்து உணர உன் ஆயுள் போதாது ! ஆகமலத்தின் அடியில் அமர்ந்து யோசி ! ஆளுமையும், ஞானத் தெளிவும் வரும் !
மனிதனுக்கும், மிருகத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். மனிதன் தன்னை உணர இரை தேடுவதோடு இறையையும் தேடுகின்றான். ஆதலால் மனிதன் உயர்ந்தவன் ! மிருகங்கள் இரையை மட்டும் தேடுகின்றன. ஆனால் இப்பொழுது, இந்த அற்ப மனிதன் எதை எதையோ தேடுகின்றான்.
நகழி மரத்தில் உன் குண்டலினி சக்தி உயிர்பிக்கும் சூட்சுமம் உண்டு ! பன்னீர் மரத்தின் பூக்களில் பாச மிகு உணர்ச்சி உண்டு ! கண்டு பிடி !
கடவுளிடம் வேண்டாதவன் தான் இங்கே பெரியவன் ! அவனைத் தான் சித்தன், ஞானி, மகான், நாயன்மார், ஆழ்வார் என்று வணங்குகின்றாய். அவர்கள் யாவரும் கடவுளிடம் வேண்டியதில்லை. தன்னை பற்றி நினைத்ததில்லை. அதனால் தான் அவர்களை நீ போற்றுகின்றாய். நீயும் கடவுளிடம் வேண்டாதே ! நீயும், ஞானியாய், மகானாய், சித்தனாய் ஆவாய்.
தலவிருட்சம் இல்லா கோயில் இல்லை. ஏன் விருட்சத்திற்கு முக்கியத்துவம் தந்தான் என்று உணர்ந்தாயோ நீ ?
கோயிலில் விருட்சமே உயர்ந்தது. விருட்சத்தை வணங்காமல் ஊமைச் சிலையை வணங்கி உண்மை புரியாமல் அலைகின்றாய். மகத்துவம் நிறைந்தது விருட்சம் !மாயா லோகத்தில் உன் மதி மயக்கத்தை போக்கும் வலிமை மரத்திற்கே உண்டு !
மா விருட்சத்தின் விதையில் உதயமானாய் நீ ! இலை அழுகா விருட்சத்தை ஏன் மறந்தாய் ?
புளியம் பிஞ்சுக்கும் உன் ஆண்மாவுக்கும் தொடர்பு இருப்பதை ஏன் மறந்தாய் ?
பத்ரியும், சுத்தியும், சுவியும் ஞானம் தரும் என்பதை ஏன் உணரவில்லை நீ ? மகிழத்தில் மகிழ்ச்சியும் மருதத்தில் உணர்ச்சியும் வைத்தேன் ! நீ உணராமல் இருப்பது ஏனோ ?
ஊமை சிலையை வணங்கி உண்மையை மறந்து போனாய். வைகறை பொழுதெல்லாம் மகிழத்தின் அடியில் அமர்ந்து மடிப் பிச்சை ஏந்து ! சுகமான குழந்தை ஜனிக்கும் ! சுரக்கு மரத்தின் அடியில் அமர்ந்து சுகமான குழந்தை ஜணிக்கும் சூட்சுமத்தையும் உணராமல் அலைகின்றாய். வாத மடக்கியும், வாம்பியும் உன் வாதம் போக்கும் சூட்சுமம் மறந்தாய் !
நீ மனிதனிடம் யாசிக்கின்றாய். மரத்திடம் யாசி ! உனக்கு ஞானமும் , நிம்மதியும் கிடைக்கும். நல்ல குழந்தை பிறக்கும்.
ஒன்பது நாள் பலா இலையில் உணவருந்து ! வன்னி மலர்களை பனை வெல்லம் கலந்து சாப்பிடு ! உன் கர்ப்பத் தடை விலகும். காலம் கணிந்து கண்மணி குழந்தை ஜணிக்கும் ! இந்த சூட்சுமம் எவனும் சொல்லிப் போனானோ ? துதி பாடியே போனான். நீயும் துதி பாடுகின்றாய்.
புன்னையில் உன் சரீரத் தோல் சுகமாக்கும் சூட்சுமம் உண்டு ! பூவரசு மரத்தின் பெண் காயில் பெருமை மிகு சுகம் ஒன்றும் இருக்க நீ உணராதது ஏனோ ? கர்மத்தால் வரும் தொழு நோயும், வெண் நோயும் குணமாகும் சூட்சுமம் நீ உணராதது ஏனோ ?
வன்னி மரத்தடியில் கொஞ்சம் பச்சரிசி கொண்டு போடு ! அதை எறும்புகள் சாப்பிட்டு உன் கர்மாவை சிதிலமடைய வைக்கும் !
வாழை வான் அமிர்தம் ! உயர்ந்த விருட்சம் ! கற்பகதரு ! கடவுளின் படைப்பில் உச்சமடா !
எத்தனையோ சூட்சுமம் விருட்சத்திலே ! விருட்சம் இல்லா வீடும், விருட்சம் இல்லா வீதியும் வீணாய் போகும். நோயும் துன்பமும் ஆளும்.
உணர் உண்மையை !
என் நாமம் சொல் ! எல்லாம் கற்பாய் ! அறிவாய் !
உன்னை யாசிக்கும் நிலையில் நான் வைக்கமாட்டேன். உயர்த்துவேன் !
ஆகமலத்தின் அரசாட்சி நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment