Inanya Maha Munivar
232 நான் சாயா நிழல் அல்ல ! என்னை நோக்கு ! நீ சாரூப்ய சொரூபத்தின் நிஜத்தில் உண்மை காண்பாய் ! கவி, புலமை, தத்துவம் என்றால் என்ன ?
கவி – நட்சத்திரம் !
புலமை – காற்று !
தத்துவம் – தரை, தானியத் தன்மை !
இந்த மூன்றையும் அறிந்தவன் ஞானியாகின்றான். கவியை அறிந்தவன் காலத்தை அறிவான். ஒரு கவி நூற்றிப் பதினொன்று மனிதர்களை கண்கானிக்கின்றது. காற்றும், நீரும், உனை இயக்க உன் அசைவுகளை நட்சத்திரமே கண்கானிக்கின்றது. நட்சத்திரத்தின் அடிபாகத்தை மட்டும் தான் நீ பார்க்கின்றாய் ! ஆறு காலம் தூண்களாக எண் கோனத்தில் இருக்கின்றது. மேல் பாகம் கூம்பு வடிவில் (பிரமிடு வடிவில்) இருக்கும்.
நட்சத்திர காண்ட முனிவர்கள் உன்னை கண்கானிப்பதை மறந்தாய். ஒலியில் விதை உருவாகி வண்டு மூலமாக யுகம் வந்தாய் ! படைப்பின் சூட்சுமம் தெரியாதவனே, எல்லாம் அறிந்ததாக உளர்கிறாய்.
மாம்பழம் தத்துவம் அறியாது விளம்புகின்றாய் !
பதினென் தத்துவம் அறியாது பாழ்பட்டு நிற்கின்றாய் !
குயில் கவியாகவும், காக்கை புலமையாகவும், மனிதன் தத்துவமாகவும் இருக்கின்றான்.
குயில், எருமை அசுர குலங்கள் வாழும் இடம். எருமை வெண்ணெய் கொண்டு சிலைக்கு அடியில் தடவி அதை வணங்கி அசுர எண்ணம் கொண்டு அலைகின்றாய். குங்கிலியத்தில் குறை ஒன்று இருப்பதை மறந்து கும்பிட்டு திரிகின்றாய். இந்த யுகம் போல் மேலே மூன்று காண்டங்கள் உண்டு. அங்கே உன் போல் மனிதர்கள் உண்டு. அங்கேயும் கர்மா தர்மாக்கள் உண்டு ! மீறிய பாவம், மீறிய தண்டனைக்காக இங்கே இந்த யுக நரகத்தில் பிறக்கின்றாய். நீ உணராதது ஏனோ ? இந்த கவி, புலமை, தத்துவம் மூன்றும் உப்பிற்குள் அடங்கிவிடும்.
அசுர, அரக்கர்களை என் தந்தை வதம் செய்தார்கள். கொடிய ராட்ஷச தடாயவனை என் அன்னை, என் தந்தையின் துணை கொண்டு அழித்தார்கள். மாய லோகத்தில் மாயையை அறியாது வாழ்கின்றாய்.
ஒரு சூரியன் ! ஒரு நிலா ! கோடான கோடி நட்சத்திரங்கள் !
படைப்பின் ரகசியம் அறியாதவன் நீ ! ஏன் இந்த விகிதசாரம் ?
உணர்ந்தாயோ நீ ?
உணர்ந்தாயோ நீ ?
பதினெண் தத்துவத்தில் சரணாகதி தத்துவம் தேவை இல்லை.
நாம தத்துவம் நான் உரைக்கின்றேன் ! சொல், செயல் தத்துவமே உயர்ந்தது. இங்கு கர்ம குணங்கள் ஒன்பது உள்ளன ! தர்ம குணங்கள் பதினெட்டு உள்ளன !
என் பலம் முழு பலம் ! மாயைகளுக்கு ¾ பலம் ! சித்தர்கள், ஞானிகளுக்கு பாதி பலம் ! அசுரன், தடாயவனுக்கு ¾ பலம் !
என் பலம் பெரிது ! என் படையும் பெரிது !
உப்பு, தண்ணீரில் கரைந்து பிறருக்கு உதவக் கண்டேன். தன்னை கரைத்து பிறருக்கு உதவும் உப்பை போல இரு !
குணம் கொண்ட ஆத்மாவுக்கு குறை ஒன்றும் தான் தெரியாது ! உன் குணம் நீசனாக ஆனது. உன் உடலில் நூற்றிப்பதினொன்று துவாரங்கள் உள்ளன. அதில் நூறு மறைக்கப்பட்டுள்ளன ! அதில் பதினொன்று துவாரங்கள் இயங்கும் சூட்சுமம் ! அதில் ஆறு ஞான துவாரங்கள் உள்ளன ! அவைகளை அறிய முற்படு ! உன்னை யாரென்று உணர வைக்கும் !
ஆறையும் இயக்கும் தத்துவம் எனக்குள்ளே ! ஆறு பேராத்மா என்னை இயக்கும் சூட்சுமம் ! இதை உணர்ந்து அறிந்தால் உனக்கு நன்மை !
கர்மா என்ற மதி கெட்ட மனித குலத்திற்குள், மனமறிந்த ஞான குலம் ஒன்று தோன்றும் ! அதை இநன்யாவின் சதுரங்க சேனா படை இயக்கி துணை நிற்கும் !
அழிவற்றது வேதம் ! அழிவற்றது சப்தம் ! அழிவற்றது விதை ! அழியும் மனிதன் எதையும் அறியா வாழ்கின்றான் !
வெற்று உடலுக்கு வேஷம் போடுகின்றவனை நம்பாதே ! வெற்று சிலைக்கு நீ புகழாரமும் சூடாதே ! தேவதைகளுக்கு யாகம் வளர்க்கின்றாய். பித்ருக்களுக்கு தர்ப்பணமும், தெய்வத்திற்கு பூஜையும் செய்கின்றாய்.
கடவுளுக்கு என்ன செய்தாய் ? நீ என்ன செய்தால் கடவுள் உன் பக்கத்தில் வருவான் என்று என்றாவது யோசித்தாயா ?
நான் கவிபாட வரவில்லை. புலமை பாட வரவில்லை. கவி பாடி, புலமை பாடி, உன்னிடம் கையேந்தி அற்ப பரிசும் பெற வரவில்லை. என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் கட்டளைப்படி தர்மத்தை காத்து அதர்மத்தை வேரோடு பிடுங்கி எறிய வந்தேன் !
நான் வென்றவன் !
இந்த ராஜராஜன் இநன்யா எப்போதும் தோற்பதில்லை. சத்தியத்தின் வாசல் நான் ! அதன் திறவுகோள் என் வலகரத்திலே ! வாழ்வும், வசந்தமும் நானடா ! வைகறை துயில் எழுந்து பறவைகளின் கண் விழிப்பில் என்னை நோக்கடா ! வாழ்வாயடா !
உன் வழிபாடுகள் என்ன ? உபஸ்கரம் கொண்டு இல் அழுக்கை போக்கினாய். உன் உள் கரம் உதவாது இருப்பது ஏனோ ? என் அபயகரம் காணாமல் இருப்பதும் சரி தானா ? கடவுளுக்கு ஒரு துளி தோயம் போதும். அவன் நெஞ்சத்தில் உனை வைப்பான்.
உன் துன்பம் போக மரத்தடியில் அமர்ந்து பார் ! இரவில் நட்சத்திரங்களை ஆசை தீர பார் ! உன் மனம் அடங்கும் ! மதி கெட்ட எண்ணங்கள் மாயம் போல மறையும். இந்த மாயவன் இநன்யா எப்போதும் துணை இருப்பேன், பயப்படாதே !
உருவாக்கும் உன்னதம் நான் !
நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment