Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, September 21, 2016

சகத்தின் அசிந்தியத்தில் உயர்ந்த துமானம் நான் !


Inanya Maha Munivar
234- 22-09-2016
சகத்தின் அசிந்தியத்தில் உயர்ந்த துமானம் நான் ! உன் தாய், தந்தைக்கு தொண்டு செய் ! மனிதர்க்கு தொண்டு செய் ! நான் உனக்கு என்றும், எப்போதும் உதவியாக இருப்பேன் !
தொண்டு!
நீ யாருக்கும் உதவி செய்ய முடியாது. தொண்டு செய்யவே முடியும் ! மனிதனுக்கு தொண்டு செய் ! என் அருகில் அமர்வாய் !
ஆண்மாவே ஆலயம் ! அதுவே வழிப்பாட்டுக்குரியது. மற்றதெல்லாம் வெற்றுக் கூச்சல். உடலைப் பற்றி சிந்திக்காதே. இந்த உடலின் ஆசை தான் மனதின் வழியாக உன்னை கீழ் நிலைக்கு தள்ளுகிறது.
உள்ளத்தால் தனித்திரு ! அது தான் இன்பம். பந்த பாசம் துன்பத்தை தான் கொடுக்கும். நீ வந்த கடமையை நிறைவேற்று !
எவன் ஒருவன் தனித்திருக்கின்றானோ (ஐம்புலன் அடக்கி) அவன் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கின்றான். ஆனால் எவனும் தனித்திருக்க ஆசை கொள்ளவில்லை. அவன் கர்மபலன் அவனை பந்தபாசத்தில் இணைத்து துன்பத்திற்கு ஆளாக்குகிறது. உன்னை நான் மோட்சத்துக்கு அழைத்து செல்ல வந்தேன். இந்த அற்ப மனம் பெயர், செல்வம், புகழுக்கே ஆசைப்படுகின்றது !
மனிதன் தன்னை அதிபுத்திசாலி என நினைத்துக் கொள்கின்றான். எறும்புக்கு இருக்கும் அறிவு கூட மனிதனுக்கு இல்லை. நான் காற்று வழி ! என் பாதையில் வா ! மிகுந்த நிம்மதி கிடைக்கும். என்னை நினைத்தாலே, என் நாமத்தை சொன்னாலே, உனக்கு எந்த வழிபாடும் செய்யத் தோன்றாது. உன் ஆண்மா ஆர்ப்பரிக்காமல் நித்சலமாக இருக்கும் ! ஏனென்றால் உன்னுள் இருப்பது நான் !
என் போதனை புதிது ! தாய், தந்தையை வணங்கி வா ! அவர்களை மண்டியிட்டு வணங்கு ! நான் உனக்குள் இருந்து சிரிப்பேன். பின் நீ மஹேஸ்வர நிலையை அடைவாய். நான் உபநிஷத்துகளில் குறிப்பிடுவதும் அந்த ஒரே கருத்தை தான். என் கொள்கை, வேதாந்தம், சித்தாந்தம், அது தான் !
உன்னை உணர்வது தான் பகுத்தறிவு ! கடவுள் நிலையை கற்றுக் கொடுத்தால் வராது. எல்லாம் பிறவிப் பயன். என்ன தான் யோகா, தியானம், வழிபாடு செய்தாலும் உன்னை உணர முடியாது. துன்பம் வந்தால் மட்டுமே கடவுளை உணர்கின்றாய். மற்ற நேரம் கடவுள் இல்லை என்று கூச்சல் போடுகிறாய். எல்லாம் இயற்கை என்று சொல்கிறாய். இயற்கை என்றால் உருவானது. உன் விஞ்ஞானம் போல உருவாக்கப்பட்டது அல்ல.
ஆணையும், பெண்ணையும் படைத்தான். பிறகு இருவரும் சேர்ந்து பாவத்தை உருவாக்க வைத்தான். சில மனிதர்க்கு குழந்தையே இல்லை. ஒரு பக்கம் வறட்சி, மறு பக்கம் மலர்ச்சி. உணரடா ! இதற்கு உன் விடை என்ன ?
இருந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. உன் விஞ்ஞானத்தால் அணு குண்டையும், துப்பாக்கியும் செய்து மனிதர்களை அழிக்கின்றாய். எதையடா உருவாக்கினாய் ? உன் சட்டம் எல்லாம் பொய்யடா ! உன் சட்டம் எல்லாம் இறுதியில் நான்கு சட்டத்திற்குள் அடக்கம். (சவ பெட்டி).
அசையா பொருளை வணங்கி நீயும் அசைவற்று போகாதே ! நீ கற்ற கல்வி, பெற்ற செல்வம் எல்லாம் காலத்தோடு வருவதில்லை. நீ செய்யும் தர்மம் தான் உன் பின்னால் வருகின்றது. தர்மத்தை செய்யாவிட்டாலும் தர்ம சிந்தனையோடு இரு !
கும்பிட்டாய், கூத்தடித்தாய், குறை எல்லாம் போனதா ? நல் விதை (தர்மம்) விதைத்து சென்று கொண்டே இரு ! நான் அதை விருட்சமாக வளர்த்து பெரும் காய் கனிகளை தந்து உனக்கும் உன் சந்ததிக்கும் பெருக வைப்பேன்.
சோதனை என்று துவண்டுவிடாதே !
என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள். “வாடுகின்ற மலர் எல்லாம் எருவுக்கு உதவ கண்டேன். அந்த மலர் மாலைகளை கழுத்தில் போடும் சோம்பேறி எதற்குடா உதவினாய் என்று ? தழைத்த மரம் நிழழுக்கு உதவ கண்டேன். உன் தாடியும், குடுமியும் எதற்கடா உதவியது என்று ?“ சொல்வார்கள். “பெற்றோரை உயிரோடு வணங்காத சோம்பேறி பிணமாகத் தான் வணங்குகின்றான். ஒலியாகி, உயிராகி, உனக்குள் நானாகி, பின் உன் உயிர் என்னாகி ஏது கண்டாயடா நிம்மதி ?” என்று அடிக்கடி கூறுவார்கள்.
இருக்க போற்றாதவன் இறக்கப் போற்றுவான். என் தந்தையை பார்த்தவர்கள் கூட யாரும் உணரவில்லை. நீ எப்போது உணர்வாயடா ?
உன் மனம் ஆயிரம் புரவியின் வேகம் கொண்டது. அதை பிடித்து உன் அதிகாரத்தில் வைத்துக் கொள். உன் புலன்களை அதிகாரம் செய்து அடக்க முடியவில்லை. நீ பிறரை அதிகாரம் செய்து அடக்க பார்க்கின்றாய். எதற்காக ?
இந்த பூமியில் நீ பிறந்த வயிற்றை மட்டும் தான் மாற்ற முடியாது. மனைவி, தொழில், நண்பர்கள், வீட்டை மாற்றிவிடலாம். மனதும் அதே போல் தான். நீ நினைத்தால் மாற்றிவிடலாம்.
யாருக்கும் இங்கே நிலையான நிம்மதி இல்லை. இடுக்கு வழியாக சூரிய வெளிச்சம் வருகிறது. அடுத்த நிமிடமே நிழல் வந்து மூடி கொள்கிறது. உலகத்தில் யாரும் மகிழ்ச்சியாக இருப்பதை காணேன். ஒவ்வொருவனும், தானே மிக அழகு, தானே அதி புத்திசாலி என்று நினைப்பது போல, தானே அதிக துன்பமுள்ளவன் என்று நினைத்து கொள்கிறான்.
அது வேண்டும், இது வேண்டும் என்பதே இல்லாமல் சதா ஒருவன் ஆணந்தமாக அமர்ந்து கொண்டிருந்தால் அது தான் யோகம் !
ஈரைந்து மாதங்கள் கருவறையில் வைத்து ஈன்றெடுத்து உலகத்திற்கு உனை காட்டி மானிட தத்துவத்தை உனக்கு ஊட்டினாலே உன் தாய் , அவளை மறந்ததால் நீ கஷ்டப்படுகிறாய் !
என்னையும் மறந்துவிட்டாய். தன் நிலை உன்னால் அறிய முடியாது. என் நிலை எப்போது அறிவாய் ? என்னை நினை ! நீ தெளிவாயடா !
மனிதர்க்கு தொண்டு செய் ! என் நெஞ்சில் உனை வைப்பேன், எப்போதும் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment