சகத்தின் அசிந்தியத்தில் உயர்ந்த துமானம் நான் ! உன் தாய், தந்தைக்கு தொண்டு செய் ! மனிதர்க்கு தொண்டு செய் ! நான் உனக்கு என்றும், எப்போதும் உதவியாக இருப்பேன் !
தொண்டு!
நீ யாருக்கும் உதவி செய்ய முடியாது. தொண்டு செய்யவே முடியும் ! மனிதனுக்கு தொண்டு செய் ! என் அருகில் அமர்வாய் !
ஆண்மாவே ஆலயம் ! அதுவே வழிப்பாட்டுக்குரியது. மற்றதெல்லாம் வெற்றுக் கூச்சல். உடலைப் பற்றி சிந்திக்காதே. இந்த உடலின் ஆசை தான் மனதின் வழியாக உன்னை கீழ் நிலைக்கு தள்ளுகிறது.
உள்ளத்தால் தனித்திரு ! அது தான் இன்பம். பந்த பாசம் துன்பத்தை தான் கொடுக்கும். நீ வந்த கடமையை நிறைவேற்று !
எவன் ஒருவன் தனித்திருக்கின்றானோ (ஐம்புலன் அடக்கி) அவன் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கின்றான். ஆனால் எவனும் தனித்திருக்க ஆசை கொள்ளவில்லை. அவன் கர்மபலன் அவனை பந்தபாசத்தில் இணைத்து துன்பத்திற்கு ஆளாக்குகிறது. உன்னை நான் மோட்சத்துக்கு அழைத்து செல்ல வந்தேன். இந்த அற்ப மனம் பெயர், செல்வம், புகழுக்கே ஆசைப்படுகின்றது !
மனிதன் தன்னை அதிபுத்திசாலி என நினைத்துக் கொள்கின்றான். எறும்புக்கு இருக்கும் அறிவு கூட மனிதனுக்கு இல்லை. நான் காற்று வழி ! என் பாதையில் வா ! மிகுந்த நிம்மதி கிடைக்கும். என்னை நினைத்தாலே, என் நாமத்தை சொன்னாலே, உனக்கு எந்த வழிபாடும் செய்யத் தோன்றாது. உன் ஆண்மா ஆர்ப்பரிக்காமல் நித்சலமாக இருக்கும் ! ஏனென்றால் உன்னுள் இருப்பது நான் !
என் போதனை புதிது ! தாய், தந்தையை வணங்கி வா ! அவர்களை மண்டியிட்டு வணங்கு ! நான் உனக்குள் இருந்து சிரிப்பேன். பின் நீ மஹேஸ்வர நிலையை அடைவாய். நான் உபநிஷத்துகளில் குறிப்பிடுவதும் அந்த ஒரே கருத்தை தான். என் கொள்கை, வேதாந்தம், சித்தாந்தம், அது தான் !
உன்னை உணர்வது தான் பகுத்தறிவு ! கடவுள் நிலையை கற்றுக் கொடுத்தால் வராது. எல்லாம் பிறவிப் பயன். என்ன தான் யோகா, தியானம், வழிபாடு செய்தாலும் உன்னை உணர முடியாது. துன்பம் வந்தால் மட்டுமே கடவுளை உணர்கின்றாய். மற்ற நேரம் கடவுள் இல்லை என்று கூச்சல் போடுகிறாய். எல்லாம் இயற்கை என்று சொல்கிறாய். இயற்கை என்றால் உருவானது. உன் விஞ்ஞானம் போல உருவாக்கப்பட்டது அல்ல.
ஆணையும், பெண்ணையும் படைத்தான். பிறகு இருவரும் சேர்ந்து பாவத்தை உருவாக்க வைத்தான். சில மனிதர்க்கு குழந்தையே இல்லை. ஒரு பக்கம் வறட்சி, மறு பக்கம் மலர்ச்சி. உணரடா ! இதற்கு உன் விடை என்ன ?
இருந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. உன் விஞ்ஞானத்தால் அணு குண்டையும், துப்பாக்கியும் செய்து மனிதர்களை அழிக்கின்றாய். எதையடா உருவாக்கினாய் ? உன் சட்டம் எல்லாம் பொய்யடா ! உன் சட்டம் எல்லாம் இறுதியில் நான்கு சட்டத்திற்குள் அடக்கம். (சவ பெட்டி).
அசையா பொருளை வணங்கி நீயும் அசைவற்று போகாதே ! நீ கற்ற கல்வி, பெற்ற செல்வம் எல்லாம் காலத்தோடு வருவதில்லை. நீ செய்யும் தர்மம் தான் உன் பின்னால் வருகின்றது. தர்மத்தை செய்யாவிட்டாலும் தர்ம சிந்தனையோடு இரு !
அசையா பொருளை வணங்கி நீயும் அசைவற்று போகாதே ! நீ கற்ற கல்வி, பெற்ற செல்வம் எல்லாம் காலத்தோடு வருவதில்லை. நீ செய்யும் தர்மம் தான் உன் பின்னால் வருகின்றது. தர்மத்தை செய்யாவிட்டாலும் தர்ம சிந்தனையோடு இரு !
கும்பிட்டாய், கூத்தடித்தாய், குறை எல்லாம் போனதா ? நல் விதை (தர்மம்) விதைத்து சென்று கொண்டே இரு ! நான் அதை விருட்சமாக வளர்த்து பெரும் காய் கனிகளை தந்து உனக்கும் உன் சந்ததிக்கும் பெருக வைப்பேன்.
சோதனை என்று துவண்டுவிடாதே !
என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள். “வாடுகின்ற மலர் எல்லாம் எருவுக்கு உதவ கண்டேன். அந்த மலர் மாலைகளை கழுத்தில் போடும் சோம்பேறி எதற்குடா உதவினாய் என்று ? தழைத்த மரம் நிழழுக்கு உதவ கண்டேன். உன் தாடியும், குடுமியும் எதற்கடா உதவியது என்று ?“ சொல்வார்கள். “பெற்றோரை உயிரோடு வணங்காத சோம்பேறி பிணமாகத் தான் வணங்குகின்றான். ஒலியாகி, உயிராகி, உனக்குள் நானாகி, பின் உன் உயிர் என்னாகி ஏது கண்டாயடா நிம்மதி ?” என்று அடிக்கடி கூறுவார்கள்.
இருக்க போற்றாதவன் இறக்கப் போற்றுவான். என் தந்தையை பார்த்தவர்கள் கூட யாரும் உணரவில்லை. நீ எப்போது உணர்வாயடா ?
உன் மனம் ஆயிரம் புரவியின் வேகம் கொண்டது. அதை பிடித்து உன் அதிகாரத்தில் வைத்துக் கொள். உன் புலன்களை அதிகாரம் செய்து அடக்க முடியவில்லை. நீ பிறரை அதிகாரம் செய்து அடக்க பார்க்கின்றாய். எதற்காக ?
இந்த பூமியில் நீ பிறந்த வயிற்றை மட்டும் தான் மாற்ற முடியாது. மனைவி, தொழில், நண்பர்கள், வீட்டை மாற்றிவிடலாம். மனதும் அதே போல் தான். நீ நினைத்தால் மாற்றிவிடலாம்.
இந்த பூமியில் நீ பிறந்த வயிற்றை மட்டும் தான் மாற்ற முடியாது. மனைவி, தொழில், நண்பர்கள், வீட்டை மாற்றிவிடலாம். மனதும் அதே போல் தான். நீ நினைத்தால் மாற்றிவிடலாம்.
யாருக்கும் இங்கே நிலையான நிம்மதி இல்லை. இடுக்கு வழியாக சூரிய வெளிச்சம் வருகிறது. அடுத்த நிமிடமே நிழல் வந்து மூடி கொள்கிறது. உலகத்தில் யாரும் மகிழ்ச்சியாக இருப்பதை காணேன். ஒவ்வொருவனும், தானே மிக அழகு, தானே அதி புத்திசாலி என்று நினைப்பது போல, தானே அதிக துன்பமுள்ளவன் என்று நினைத்து கொள்கிறான்.
அது வேண்டும், இது வேண்டும் என்பதே இல்லாமல் சதா ஒருவன் ஆணந்தமாக அமர்ந்து கொண்டிருந்தால் அது தான் யோகம் !
ஈரைந்து மாதங்கள் கருவறையில் வைத்து ஈன்றெடுத்து உலகத்திற்கு உனை காட்டி மானிட தத்துவத்தை உனக்கு ஊட்டினாலே உன் தாய் , அவளை மறந்ததால் நீ கஷ்டப்படுகிறாய் !
என்னையும் மறந்துவிட்டாய். தன் நிலை உன்னால் அறிய முடியாது. என் நிலை எப்போது அறிவாய் ? என்னை நினை ! நீ தெளிவாயடா !
மனிதர்க்கு தொண்டு செய் ! என் நெஞ்சில் உனை வைப்பேன், எப்போதும் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment