to INANYA MAHA MUNIVAR
08-06-2017
என் ஆளுமை தெரியாமல் ஆர்பரிக்கின்றாய் ! உன் ஆளுமை உனக்குள் இருப்பதை மறந்து அலைகின்றாய் ! ஏனடா ?
என் ஆறின் ஆளுமை
நெகிழ்வு, மணம், மகிழ்ச்சி, இனிமை, இளமை, அழகு இந்த ஆறு தன்மைகளும் தான் ஆறின் சூட்சுமம் ! ஆறு தலையோடு தெய்வம் இருக்கின்றது என சொல்லக் கண்டேன். இந்த ஆறு தன்மைகளையும் கபாலத்தின் ஆறு நரம்புகளில் உள்ளடக்கி சூட்சுமத்தை அறிந்தான். அதனாலே ஆறு தலைகள் இருப்பதாக சொல்கின்றாய் !
படைப்பில் ஆறு தலைகள், பத்து தலைகள் என்று படைக்கவில்லை. அசுர படைப்பான அரவத்திற்கு மட்டுமே ஐந்து தலைகள் உண்டு.
ஈசா இயேசு ஆனதும், கிருஷ்ணன் கிருஷ்து ஆனதும் மறைக்கப்பட்ட உண்மைகள். இடையில் வந்த மதம் இடையிலே போக போகின்றது.
திருசீரலவாய் உலகின் சூட்சும இடம் ! என் தந்தையும், நானும் ஓடிபிடித்து விளையாடிய இடம் ! ஆதி சங்கரரும், ஐயாவும், இயேசுவும், சிரவன் என்ற முருகனும் கால் பதித்த இடம். இந்த சூட்சுமத்தை ஆராய்ச்சி செய்யாமல் எதையோ ஆராய்ச்சி செய்கின்றான். படைப்பின் முதல் உருவாக்கம் குமரி கண்டத்தில் திருசீரலவாய் அருகே உருவானது ! தமிழும், சுவையும் உருவான இடம் ! எல்லாம் மறைக்கப்பட்ட உண்மைகள் ! புண்ணிய இடத்தை எல்லாம் கோவில் கட்டி கும்பிட வைத்தான் சித்தன். அதை அறியாமல் இவன் எத்த சித்தனாகிவிட்டான்.
நீ இருக்கும் ரகசியம் அந்த மூன்று விநாடிகள் மூச்சை உள்ளிழுக்கும் சூட்சுமம் தான் ! அது தான் உண்மையானது ! அதை தவிர உன் எதிர்காலம், நிகழ்காலம் என்பது பொய்யே. நான் உன்னிடம் அன்பு காட்டுகின்றேன். நீ ஏன் பிறரிடம் அன்பு காட்டவில்லை ?
அன்பை விதை ஆழமாக ! சுகமோ சுகம் தான்டா ! நாளைய நிகழ்வு இன்பமோ, துன்பமோ உனக்கு தெரியாது. இந்த நிகழ்வும், இந்த இருப்பும் தான் ஆணந்தம் ! நான் ஆணந்தம் ! என்னுள் நீ இருந்தால் எப்போதும் ஆணந்தம் தான் !
கோபம் அமைதியை கற்று தருகிறது !
தனிமை சேர்ந்து வாழ கற்று தருகிறது !
வெறுப்பு அன்பை கற்று தருகிறது !
தோல்வி விவேகத்தை கற்று தருகிறது !
தனிமை சேர்ந்து வாழ கற்று தருகிறது !
வெறுப்பு அன்பை கற்று தருகிறது !
தோல்வி விவேகத்தை கற்று தருகிறது !
எல்லாவற்றையும் விட மௌனம் தான் அனைத்தையும் கற்றுத் தருகிறது. ஆனால் நீ எதையும் உற்று நோக்காமல் உருந்து போகின்றாய். பழவினைகள் சேர்ந்து தான் ஊழ்வினை ஆனது. உன் ஊழ்வினைகளை தீர்ப்பதற்கு ஏன் நல்வினை செய்யாமல் அலைகின்றாய் ?
நல் குருவின் மூச்சுபட்டால் உன் கர்மா அணு அணுவாக குறையும். இங்கே நல்குருவை தேடடா !
எனக்கு குரு யாருமில்லை. நான் சுயம்பு ! இப்போது இருக்கும் மாத்திரையே உண்மை ! ஆணந்தம் ! பின் ஏன் நாளையை பற்றி யோசிக்கின்றாய் ? அடுத்த விநாடி நீ எப்படி இருப்பாய் என்று தெரியாது. ஆதலால் எப்போதும் கடவுளின் பாதத்தை பற்றி வாழ். நீ மோட்சத்துக்கு அழைத்து செல்லப்படுவாய் !
சிரவன் என்ற முருகனுக்கு ஆறு தலைகள் என்று சொன்னான். ஆறு பேராத்மாக்களின் ஆசிகள் அவனுக்கு இருந்தது என்று அர்த்தம். நெகிழ்வு, மனம், மகிழ்ச்சி, இனிமை, இளமை, அழகு ! இதில் ஆறு பேராத்மாக்களும் அடக்கம் !
இங்கு எல்லாம் நாடகம் ! சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உன்னை ஏமாற்றவில்லை ! அதை எழுதி, கவியாக்கி, காவியமாக்கியவன் தான் உன்னை ஏமாற்றினான்.
தலையில் ஆறு சூட்சுமம். நான் ஆறு பேராத்மாக்களோடு ஏழாய் நிற்பவன் ! நான் வலிமையானவன் தானே ?
தீர்க்க தரிசனம், அமானுஸ்யம், அருள்வாக்கு என்று பித்தலாட்டம் செய்யும் பொம்மைகளே இங்கே அதிகம். உனக்கு நீயே ஒளியாக இருக்க யாரும் சொல்லி கொடுக்கவில்லை. இனியாவது உணரடா !
நான் நாஸ்தீகன் அல்ல. உன் மூச்சாய் இருப்பவன் !
நான் சரித்திரத்தை எழுதினால் அனைத்து காவியங்களும் பொய்யாகிப் போகும் ! நீயாவது சரித்திரத்தை அறிய முற்படு ! நான் உனக்கு குருவாய் இருந்து கற்றுத் தருகிறேன் !
ஆறின் ஆளுமை நான் ! ஆணந்தமானவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment