புராவிருத்தம் எல்லாம் பொய்யடா ! நான் மெய்யடா ! எந்தை முழு விந்தை கந்தை உன் சூத்திரம் !
வீதி உலா
வீதராகம் உள்ளவன் நான் ! வீதி உலா வருவதை அறிவேன் ! செயற்கை தேர் சக்கரம் உருவாக்கி, சிதிலமான உயிரற்ற சிலை ஒன்றை நிறுவி வீதி உலா வருவதை அறிந்தேன், உன் கஷ்ட நஷ்டம் பார்ப்பதற்காக. பவித்ரம் இல்லா சிலை, பாவி உனை அறியுமோ ? வீதியில் உலா வரும் இந்த விடங்கனை நீ மறந்தது ஏனோ ?
வீதராகம் உள்ளவன் நான் ! வீதி உலா வருவதை அறிவேன் ! செயற்கை தேர் சக்கரம் உருவாக்கி, சிதிலமான உயிரற்ற சிலை ஒன்றை நிறுவி வீதி உலா வருவதை அறிந்தேன், உன் கஷ்ட நஷ்டம் பார்ப்பதற்காக. பவித்ரம் இல்லா சிலை, பாவி உனை அறியுமோ ? வீதியில் உலா வரும் இந்த விடங்கனை நீ மறந்தது ஏனோ ?
கோழை போல வாழ்கின்றாயே, வீரனாய் எப்போது மலர்வாயடா ? வீரம் என்பது சரீர பலம் அல்ல. வீரம் என்றால் துன்பப்படுகின்றவனுக்கு தொண்டு செய்வது தான் ! தர்மம் செய்வது தான் ! எதற்கும் ரத்தம் சிந்த தயாராக இரு. உன் லட்சியம் அடையும் வரை ஓய்ந்திருக்க எண்ணாதே !
நான் காற்றாய் உனதருகில் வருகிறேன் ! என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் செல்வ செழிப்பு நிரம்ப கண்டேன் ! நானும் செவி குளிர கேட்டு மெய் மறந்து போகின்றேன். ஆனாலும் என் கடமையைச் சிறிதளவு தடை வராமல் சிந்தை சீர்தூக்கி நிற்கின்றேன்.
நான் இல்லற தர்மத்தில் வாழ்கின்றேன். இல்லறத்தை ஆட்சி செய்பவனே ஞானி. எந்த துன்பம் வந்தாலும் மனைவி பிள்ளைகளுக்கு கடமை செய்து விலகாமல் காத்து நிற்பவனே மிக பெரிய ஞானி ! ஆகாயத்தில் உலவுகின்றேன், பாசப் பறவைகளாய் !
பக்குவம் உள்ளவன் எனை அறிவான் ! தூய்மையாய் இருக்கும் பெண்ணை தூய்மை இல்லை என்று விலக்கினான். தூமகேது என்று நினைப்பவன். துயர்படும் சூத்ரம் தெரியாது வாழ்கின்றான். ஏனடா ? எப்போது அறிவாயடா ? ஞான பெண்ணை மறந்தான், நாயினும் கீழான எண்ணம் உள்ளவன்.
பெண்ணை போற்றி பாடடா ! போற்றும் உனை உலகமடா !
பரணியில் நான் பட்சிகளோடு உலா வருவதை மறந்தாய். தரணி முழுவதும் என் முகம் உண்டு ! என் கண் உண்டு ! பார்த்தவன் அறியவில்லை. நான் பாசத்தால் சொன்னாலும் புரியவில்லை. பாசமில்லா பாவியடா நீ ! பக்தி எதற்கடா ? இதோ வருகிறான், இதோ வருகிறான் என்று கூவி அழைக்கின்றான். நான் வந்து அலைகின்றேன் ! கண்டு கொள்ளாமல் திரிகின்றான். என்ன வேடிக்கையடா ?
நெஞ்சில் மதம் (திமிர்) கொண்ட மனிதன் மதத்தில் மயங்கினான். வந்து அலைகின்றேன். கண்டான் எவருமில்லை இங்கு.
யாருக்கேனும், எதற்கேனும் ஒரு சிறிதளவு தொண்டு செய். தர்மம் செய்ய மறவாதே ! தர்மமும் புண்ணியமும் தான் உனை மீண்டும் பிறக்க வைக்காத சூத்ரம் ! ஒழுக்கம் இங்கே பிராதனம். எதையும் வைராக்கியத்தோடு அடைய நினை. உன்னை இழந்தால் தான் ஜெயிக்க முடியும் !
அன்பை கொண்டு உன் வீட்டை அழகுபடுத்து ! உலகம் அன்பாய் தெரியும். அன்பின் இலக்கணம் (உனை) அரவணைத்து மகிழும். என் நாமம் திதியம் தரும் ! சிக்கன பிடி. தேவலோகம் உனை அள்ளி அரவணைக்கும் !
111 கோடி முனிவர்களோடு, நான் வீதி உலா வருவதை பார் ! காலகணக்கு என்றும் பொய்ப்பதில்லை ! இந்த காலன் சொல்லும் சரித்திரம் பொய்த்து போனது இல்லை.
சாஸ்திரத்தில் மயங்காதே ! சரித்திரம் மறவாதே ! இந்த வீதி உலா வரும் (காற்று) இந்த விடங்கனையும் மறவாதே !
தஞ்சன் எனை அறிவான் !
வீதி உலா வருபவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment