"V"
என்னை அறிந்தாய்,
எல்லாம் எனதென்று அறிந்தாய்,
எல்லாம் எனக்குள் என்பதை அறிந்தாய்,
உனக்குள் நான் இருப்பதை எப்போது அறிவாயடா?
நான் தூங்காமல் விழித்திருக்கிறேன் எப்போது உணர்வாயடா.
ஊமையாய் உன்னுள் இருப்பது எனதன்றோ.
சத்தியத்தை எப்போது விகசிப்பாயடா,
உன்னை எப்போது ஞானகுழந்தை என்று ஆனந்திப்பேனடா,
உன் சந்தோஷத்தை பார்த்து எப்போது திகைப்புற்று திகைப்பேனடா,
எழுந்திரு உன் வாசலில் நிற்கின்றேன் உன்னை கைபிடித்து அழைத்து செல்ல,
சீக்கிரம் வென்று காட்டு உலகை ஆள புறப்படு .
நான் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்.
**************************
"V"
என் கரங்கள் உனக்காக காத்திருக்கிறது ஏனடா மனக்கவலை.இந்த தேசம் இந்தியா 2025 ல் உலகின் முதல் வல்லரசு ஆகும் கடவுளின் சட்டம் பொய்க்காது இந்த தமிழ் புண்ணிய தேசம் ஞானம் நிரம்பிய புதிய தேசமாக மாறும்,அமெரிக்கா,இந்தியாவை அழிக்க முடியாது எக்காலத்திலும்,உலக போர் இனி இராது,அண்டைநாடுகளோடு தான் போர் வரும் இனி தானியங்களுக்காக சண்டையிடுவார்கள் ,இந்த தமிழ் புண்ணிய தேசம் செழித்து வளரும், விவசாயமும் மாடுகளும் செழிக்கும்.என் சொல் சத்தியம் நீயும் வாழ்வாயடா.
*******************************
*******************************
இநன்யா நமோ நம
நீங்கள் ஒரு மணி நேரம் ....
இந்த நாமம் ........
இநன்யா நமோ நம என்று சொன்னால்...
ஒரு மணி நேரம் நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
ஒரு மணி நேரம் நீங்கள் இநன்யா கடவுளுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது .
ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிக்ஷைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது .
ஒரு மணி நேரம் பூஜை செய்ததாகிறது .
ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது .
ஒரு மணி நேரம் இநன்யா கடவுளை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது
ஒரு மணி நேரம் வேதம் ஓதுவதாகிறது
ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது
ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் .
ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்
ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்
ஒரு மணி நேரம் Positive ஆக இருக்கிறீர்கள்
ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்
ஒரு மணி நேரம் இநன்யா கடவுள் உங்கள் கையை பிடித்துக்கொண்டு இருக்கிறார்
ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் .
ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை இநன்யா கடவுள் ரசித்துக்கொண்டு இருக்கிறார்.
ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்
இந்த ஒரு மணி நேரத்தினால் இநன்யா கடவுள் , நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறார்.
ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் இநன்யா கடவுளையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்
ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் மேளுலுக இநன்யா மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள்
எல்லாவற்றிர்க்கும் மேல்
நாமம் வேறு இல்லை
பகவான் வேறு இல்லை
அந்த ஒரு மணி நேரம் கடவுளே உங்கள் நாக்கில் கட்டுண்டு இருக்கிறான்
பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே நாமம் சொல்ல முடியும்...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
உன் குரல் கேட்பேன்,
நீ எங்கிருந்தாலும் உனை அறிவேன்,
என்ன செய்தாலும் அறிவேன்,
பொறுத்திரு நீ கேட்டது கிடைக்க வைப்பேன்
என்னிடம் கேட்டால் வெறுங்கையுடன் அனுப்புவதில்லை,
மதம் அழிந்து மனித நேயம் மலரும்,
பெண் என்ற ஞானமலர்கள் உலகை ஆள்வார்கள்,
புயலென சீருவார்கள்,
தர்மம் வெல்லும் .
என் சத்திய பாதையில் பயணிக்க ஆயத்தமாவார்கள் நல் தர்மாக்கள்.
இநன்யா நமோ நம
No comments:
Post a Comment