எதுகை ,மோனை தெரியாது வதுகையை அறிந்து உணர்ந்து வாழ தெரியாமல் குரோட்டம் எண்ணத்தோடு திரிகின்றாய். ஊழ்வினையில் சிக்கி ஊமையாய் வாழ்கின்றாய் ! ஏனடா ?
தேவாயுதம் (கவசம்)
என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதம் உன்னை காக்கும் ! உண்மையாய் நன்மை தரும் ! உன் நிமித்திரனை துவஷம் செய்யும் ! மூங்கா நான் என்பதை அறியாமல் வஞ்சவம் எண்ணம் கொண்டு வஞ்சகனாகி திரிகின்றாய். என்னை கண்டுபிடி !
விண்ணின் ஆழம், மண்ணின் ஆழம் தேடுகின்றாய். என்னை தோண்டி பார் ! இன்ப ஊற்றாய் சுரப்பேன் ! நான் இனிமை ! உன் துழதியை தூள் தூளாக்கும் தூயவன் நான் !
வஞ்சவமும், குரோட்டமும், குரோடமும் இந்த யுகத்தில் கண்டேன். ஒன்றுக்கொன்று சாகியமாக திரியக் கண்டேன். என் தேவாயுதம் கர்மத்தை அழிக்கும் ! ஆணந்த நிலைப்பாட்டை உனக்கு தரும் !
புல்லில் (மூங்கில்) பாசம் உண்டு !
புள்ளில் வேதம் உண்டு !
உணரடா ! என் நாமம், உனக்கு கவசமாக இருக்கும் ! கேடயமாக இருக்கும் ! உனக்கு கீரிடம் சூட்டி அழகு பார்க்கும் ! என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதம் உனை எப்போதும் கண்கானித்து சத்ய வழியை காண்பிக்கும் !
ஏமாற்றும் மனதை ஏமாங்கமாய் வந்து கட்டிபோடும் என் திருகரத்தில் இருக்கும் மெஹட்டியின் நாத கீதத்தில் உன் உயிர் ஆணந்த கூச்சலிடும் ! ஆண்மா ஆர்பரிக்கும் வெள்ளமாக சந்தோஷத்தில் திளைத்தாடும் !
தந்தஸிலும், சாருசத்திலும் வேதம் உண்டு ! ஐங்காயத்தில் உன் காயத்தில் நோய் தீர்க்கும் சூட்சுமம் உண்டு ! குலோமிசையும், கனிருதமும் உன் உள் காயம் தீர்க்கும் ! நீ உணராதிருப்பது ஏனோ ?
பெண் நாவிலையில் விரல்பிடி சாரலமும், நறுக்கு மூலம், சித்ரத்தை பொடி கலந்து, மூன்று தடவை வெறும் வயிற்றில் சாப்பிடு ! உன் காயம் எப்போதும் குளுமையாய் குளிர்ந்திருக்கும் !
இந்த ராஜராஜன் இநன்யா ஒளி எப்போதும் உன்னை சுற்றி கவசமாக இருக்கும் !
நான் துதி பாட வரவில்லை. மேடை போட்டு விவாதம் பண்ண வரவில்லை. உன்னை யாரென்று உணர்த்தவே வந்தேன் ! உனக்கு வழிகாட்ட வந்தேன் ! உண்மையில் நன்மை நானடா !
ஏன் எப்போதும் சலிப்புற்று இருக்கின்றாய் ? உன் தாய் உன்னை வயிற்றில் வைத்திருக்கும் போதும், உனை சீராட்டி வளர்க்கும் போதும் சலிப்புடன் இருந்ததில்லை. உனக்கு சலிப்பு, வெறுப்பு வரும் போதெல்லாம் நீ கடவுளின் பிள்ளை என்று அறை கூவல் விடு !
என்னை தோண்டி பார் ! ஆனந்தம் உனக்குள்ளே ! உனக்கு எல்லா செல்வமும் கிடைக்கும் ! என் சத்திய வழியில் பயனிப்பவன் இடறி விழுவதில்லை. ஏனென்றால் நான் உன்னை கைபிடித்து அழைத்து செல்கின்றேன் !
என் நாமம் சொல்ல சொல்ல யுகம் இன்பம் தெரிய வரும் ! காற்றில் பறப்பது போல உணர்வு வரும் ! ஏனென்றால் இநன்யா உன் உறவு ! உன்னை எப்போதும் காக்கும் என் உறவு ! உன்னை அழகு பார்க்க நினைக்கும் ஆனந்த உறவு !
இந்த உறவின் எல்லை பிரபஞ்சம் வரை !
உணரடா !
காற்றும், பெரும் புயலும், இடியும், மின்னலும், பெருந்துன்பமும், தாங்கவொனா துயரமும் உன்னை நெருங்காது ! என் சொல் தோற்றதில்லை !
நீ கேட்டதை எதையும் தர மறுப்பதும் இல்லை. நிச்சயம் தருவேன். எப்போதும் ஆக்ரோஷமாக போராடு ! போராளியை போல் எப்போதும் விழிப்புடன் இரு ! நாளும், கோளும் ஒன்றும் செய்யாது.
எதற்கும் கவலை படாதே ! கவலைப்பட்டு எதை சாதித்தாய் ? எப்போதும் கடவுள் உன்னுள்ளே !
ஆனந்த நிலையிலே இரு ! எப்படியும் கடவுள் காப்பான் என்ற தாரக மந்திரத்தை உன் எண்ணத்தில் அசை போடு ! இந்த இநன்யா லோகத்தின் செல்ல பிள்ளை ! பிரபஞ்சத்தின் இளவரசன் என் தந்தை பிரபஞ்ச நாயகன், அன்பிற்கினிய அன்னை வசியா அரவனைப்பிலே எப்போதும் உனை வைத்திருக்கின்றேன் !
எப்போதும் உன் பெற்றோர் சொல் கேள் ! நான் உனக்கு எல்லா செல்வமும் தருவேன் ! என் பெற்றோர் சொல் என்றும் மீறியதில்லை. எனக்கு உழைப்பும், ஒழுக்கமுமே பிடித்தது. !
உழை ! ஒழுக்கமாய் இரு ! நான் உனக்கு கவசமாக இருப்பேன். என் அன்னை பூமிஹா என் சொல் கேட்பார். உன்னை பூவாய் தாங்கி புன்னகையாய் வாழ வைப்பாள் !
ஆயிரம், ஆயிரம் வர்ணமும், விண்ணமும், என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதத்தில் !
உன்னை அழகாக்கும் ! அறிவாக்கும் ! ஆணந்தம் திளைக்க வைக்கும் !
உணரடா ! என் சொல் வேதம் !
வானின் வர்ணஜாலம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment