240 என் சவுதத்தில் உனக்கும் இடம் உண்டு ! உன் நாசியம் என் வலக்கரத்திலே. வேதமும், உன் வினை அழிக்கும் சூட்சுமமும் நானடா !
தேடல்
தேடு ! தேடல் சுகமானது !
ஊடலை தேடாதே ! உன்னை தேடு ! ஊன் உடம்பு ஒரு நாள் கரையானுக்கு சொந்தமாக போகின்றது. உனக்காக தேவர்கள் காத்திருக்கவில்லை. உன் உடலுக்காக ஐந்து பேர் காத்திருக்கின்றார்கள் (மண், எறும்பு, புழு, கரையான், நீர்) என்பதனை மறந்து விடாதே !
உன் உடல் தங்கத்தில் வைரத்தில் செய்யப்படவில்லை. மண்ணில் உருவாகினாய். மண்ணுக்கே நீ சொந்தம். உயிர் ஊதப்பட்டு படைக்கபட்டவன் நீ. பாவம் செய்யாதே ! பக்குவப்படு !
மரத்தை மட்டுமே உன்னால் வெட்ட முடியும். விதையை அழிக்க முடியாது. உடலை மட்டும் தான் அழிக்க முடியும். உயிரை அழிக்க முடியாது. ஆனால் நீ ஒன்றே ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். இரண்டு, மூன்று பிள்ளைகளை பெற முடியும். நீ வீரன் என்று பிதற்றுகிறாய்.
எறும்புகள் மழை வரும் முன்னே தேடுகின்றன. தன் இனத்திற்காக சேமிக்கின்றன ! சுயநலம் அதற்கில்லை. எறும்புகளின் தானிய கிடங்கில் இரண்டரை வருடம் சாப்பிட தானியம் இருக்கும். நீயும் தேடு ! தேடியதை தர்மம் செய்வதிலும், கொடுப்பதில் வீரனாகவும் இரு !
கற்ற வித்தையை நான்கு பேருக்கு சொல்லிக் கொடு ! இல்லையேல் தெருவில் கிடக்கும் கல்லையும், முள்ளையும் எடுத்து போடு !
பிறருக்கு வழி காட்டுவது, தொண்டு செய்வது, பசித்தவனுக்கு உணவு கொடுப்பது தர்மம் ! புண்ணியம், உண்ணதங்களை வெளியில் தேடாதே ! உனக்குள் தான் ! நீ தேடிய செல்வம் உனக்கு பயன்பட போவதில்லை. நீ எங்கு சென்றாலும் உனக்கு கிடைக்க வேண்டிய பலன் தான் கிடைக்கும். ஆதலால் நீ இருக்கும் இடத்தில் தேடு !
இயலாது, முடியாது எதுவுமே இங்கு சாத்தியமில்லாத வார்த்தைகள். முடியும் என நம்பு. முதல்வனை துணைக்கு கூப்பிடு ! நல்வழி கிடைத்து நலம் வாழ வழி கிடைக்கும்.
பதுக்கி வைத்து பாவி ஆகாதே. பாசத்தோடு பகிர்ந்து கொடு ! இல்லை என்று யாருக்கும் சொல்லாதே ! இயலாமை என்று எண்ண வைக்காதே ! போகம் தேடி, பின் விதி தேடி வீணணாய் அலையாதே ! உன்னை எப்போதும் தேடிக் கொண்டிரு ! நான் உன்னை தேடிக் கொண்டிருக்கின்றேன். நீ வேறு எதையோ தேடுகின்றாய்.
நான் என்னை தேடினேன். நான் இருக்கும் இடம் அறிந்தேன். எங்கிருந்து வந்தேன், எங்கே செல்கிறேன் என்பது எனக்கு தெரியும்.
என்னை அறிவாய், தெளிவாய், புரிவாய், தெரிவாய் ! நான் துன்புற்று இன்புற்றவன், அதனாலே உன்னை பற்றி நானறிவேன், நான் உனக்கு கேட்டதை தருவேன். நினைத்ததை நடக்க வைப்பேன். என் ஆண்ம தேடல் அனைத்தும் நிறைவு பெற்றது !
நீ வந்த கடமை எதற்கென்று உணர் ! வாசலில் நிற்கிறேன். எனை எப்போது வேண்டுமென்றாலும் கூப்பிடு ! உன் உயிருக்கு வழி காட்டுவேன். உனக்கு யாருமில்லை என்று நினைக்காதே ! இந்த ஆத்மத்தின் தலைவன் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். உன் துயர் துடைப்பேன். தும்பை பூவை போல உன் வாழ்வை சுகமாக்குவேன்.
தேடியதை தேவை உள்ளவனுக்கு கொடு ! உன் உள்ளம், குடும்பம் சுகமோ சுகமானது.
ஒரு நாள் விதைத்து ஒரு நாளில் கனி தேடாதே ! பொறுத்திருந்து பெற்ற அன்னையை போல வெறுத்திருக்காமல் இரு ! வேதன் என் நாமம் எல்லாம் தரும்.
என் சொல் சத்தியமடா !
தேடு ! தேடல் சுகமானது !
சுகமானவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment