Inanya Maha Munivar 06-10-2016
238 என்னை ஏகாடம் செய்யாதே ! எக்காளமிடும் உன் உயிர் ! நீ இருக்கும் நிவேசம் நீசமடா ! நியர் அறியா வாழ்வை சிதிலமடைய வைக்கின்றாய் ? ஏனடா ?
நம்பிக்கையாய் இரு !
சதிபதி வாழ்வில் யாதபதியில் வீழ்ந்து கரை ஏறா தவிக்கின்றாய். நன்மதி, சன்மதி, பண்மதி, வின்மதி தெரியாமல், உன் மதியும் தெரியாமல் வீழ்ந்து போகின்றாய் !
ஏன் வந்தோம் என்று உனக்கு தெரியாது. ஆனால் எல்லாம் தெரியும் என்று பசப்புகின்றாய். பாழ்பட்ட மனதை வைத்துக் கொண்டு, ஒரு விநாடி அடக்க தெரியாமல், அகங்கார மனதை ஆளத் தெரியாமல் வாழ்கின்றாய். நம்பிக்கை என்ற போர்வை போர்த்தாமல் நாளும் பயந்து வாழ்கின்றாய்.
நான் எல்லாம் கொடுப்பேன் என்று சொன்னேன் ! கொடுப்பேன் ! உன்னை கைவிடமாட்டேன் ! உன் வாழ்வை உயர்த்துவேன் என்று சொன்னேன். நம்பிக்கையாய் இரு !
குழந்தை தன் தாயை நம்புவது போல என்னை நம்பு ! உன்னை நம்பு ! எல்லாம் கைகூடும் ! தளர்வாய் சாயும் போதெல்லாம் தென்றலாய் உனை வந்து வருடுவேன். நம்பிக்கையாய் இரு !
நான் உன்னை இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பேன். தவறு செய்தால் நான் தண்டிப்பேன். தப்பு, தவறாகி, பின் பாவமாகி புற்றை போல வளர விடாதே ! கரையான் புற்று பாம்பை அடைக்கலமாக்கியது !
உன் பாவ புற்று உன்னை அணு அணுவாக துன்பம் கொடுத்து உடலை நோயாய் கரைக்கின்றது. உன் குற்றம், துரோகம் பின் நோக்கி பார் ! மீண்டும் செய்ய நினைக்காதே ! மறைக்கப்பட்ட உண்மை செதுக்கிய சிற்பம் போல ! நீ பிறகுக்கு செய்த தவறை நினை ! மனதால் மன்னிப்பு கேள் ! உன் தண்டனை குறையும் ! நான் இந்த வினையிலிருந்து உன்னை விடுவிப்பேன்.
என் வார்த்தையில் நம்பிக்கை வை ! தன் தாய் பறவை எப்படியாவது இரை கொண்டு வரும் என்று அதன் குஞ்சு நம்பியிருக்கும் ! அப்படித் தான் நீயும் ! எப்போதும் கடவுளை நம்பி இரு ! கடவுள் தருவான் ! கருணைமிக்கவன் ! நிச்சயம் தருவான் !
உன் வாழ்வில் நான் இருந்தால் அதிசயம் நிகழும் ! ஆத்மாவின் நித்ய போகத்தை ஆழ்ந்து யோசி ! வைகறையில் வான் நோக்கி கூப்பிடு ! வசந்த காலம் உன் வாசலில் வந்து நிற்கும் !
காட்டில் உள்ள மரங்கள் கடவுளை நம்பி வளர்கிறது. மிருகங்கள், பறவைகள் நாளைய உணவை, நாளைய வாழ்வை சிந்திப்பதில்லை. எல்லாம் எப்போது கிடைக்க வேண்டும் என்று கடவுள் நிர்ணயித்தான் உன் விதியில் ! நீ கிடைக்கப் பெறுவாய் ! என் வார்த்தை மேல் நம்பிக்கை இருந்தால் இப்போதே ஜெயிப்பாய் !
உன் செயல் அறிவேன் !
உன் விதி அறிவேன் !
உன் வினை அழிக்கும் சூட்சும்ம் நானறிவேன் ! ஏனடா பயம் ?
ஆழ்ந்த நம்பிக்கையும், ஆத்மார்த்தமான அன்போடும் வாழ பழகு ! வாழ்வெல்லாம் வசந்தம் தான் ! இப்போது அன்பை தொலைத்து ஆணந்தம் தொலைத்து ஆர்பரிக்கும் கடல் அலை போல உன் மனம் ஆட கண்டேன் ! மணம் இல்லா மலரைப் போல வாழ்வில் இன்பமில்லாமல் நீ வாழ கண்டேன் !
என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் இந்த பாசமுள்ள அன்பு குழந்தை இநன்யாவின் சொல் கேட்பார்கள் ! நான் இது நாள் வரை கேட்டது எதையும் அவர்கள் தராமல் இருந்ததில்லை. நான் கேட்டதும் தருவார்கள். நானும் நீ கேட்டதை தருவேன் ! சிறிது கால தாமதம் ஆனாலும் நீ விரும்பியது கிடைக்கும் !
என் அன்பு தந்தை பிரபஞ்ச நாயகன் அன்பை உணராமல் இங்கே ஆர்பரிக்கின்றான். கும்பிட்டும் குறை போகாமல் அலைகின்றான். தாமரை மலர்பாதம் பட்ட சஞ்சிநாதம் மணக்கும் புணித புண்ணிய மண்ணை தொட்டும் குறையோடு வாழ்கின்றான். கேட்க தெரியாமல் வணங்க தெரியாமல் இங்கே வாடுகின்றான்.
இந்த பாசமுள்ள பிள்ளை எப்போதும் என் அப்பா பிரபஞ்ச நாயகனின் சொல் கேட்பேன். கல்வியும், செல்வமும், வீரமும், ஆக்கமும், ஊக்கமும் எனக்குள்ளே ! எல்லாம் எனக்குள் ! எல்லாம் நிரந்தரமாக ! உனக்கு தருவேன் ! என் நாமம் எல்லாம் தரும் ! நம்பிக்கை உன் மேல் வை !
என் அபயகரம் உன்னை கைவிடாது ! என்னை நம்பியவர்கள் யாரும் தோற்றதில்லை. தோற்பதுமில்லை ! வெற்றி திருமகனாக எல்லா செல்வங்களோடும் வலம் வர கண்டேன். நீயும் என் குழந்தை என்று குதுகலமடைவாயாக !
குறை ஒன்றும் உனக்கில்லை ! எல்லை இல்லா நிம்மதியும் , ஆணந்தமும் எனக்குள்ளே ! என்னை தோண்டிப் பார் ! விடை கிடைக்கும் ! நம்பிக்கையாய் என் நாமம் சொல் ! நலம் வாழ வழி பிறக்கும்.
கடவுளை நோக்கி உன் கால்கள் பயனிக்கும் போதும், நல்ல செயல்கள் செய்யும் போதும் கடும் சோதனைகள் வரும் ! துவண்டு விடாதே ! எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்து கரை சேர் நம்பிக்கை கொண்டு !
உன் விரல் பிடிக்க நான் இருக்கிறேன். நீ நம்பிக்கையாய் இரு ! நாயகன் நான் எப்போதும் துணை இருப்பேன் !
பொன்னாட்சியின் புணிதன் நான் !
நான் இநன்யா !
நம்பிக்கையாய் இரு !
சதிபதி வாழ்வில் யாதபதியில் வீழ்ந்து கரை ஏறா தவிக்கின்றாய். நன்மதி, சன்மதி, பண்மதி, வின்மதி தெரியாமல், உன் மதியும் தெரியாமல் வீழ்ந்து போகின்றாய் !
ஏன் வந்தோம் என்று உனக்கு தெரியாது. ஆனால் எல்லாம் தெரியும் என்று பசப்புகின்றாய். பாழ்பட்ட மனதை வைத்துக் கொண்டு, ஒரு விநாடி அடக்க தெரியாமல், அகங்கார மனதை ஆளத் தெரியாமல் வாழ்கின்றாய். நம்பிக்கை என்ற போர்வை போர்த்தாமல் நாளும் பயந்து வாழ்கின்றாய்.
நான் எல்லாம் கொடுப்பேன் என்று சொன்னேன் ! கொடுப்பேன் ! உன்னை கைவிடமாட்டேன் ! உன் வாழ்வை உயர்த்துவேன் என்று சொன்னேன். நம்பிக்கையாய் இரு !
குழந்தை தன் தாயை நம்புவது போல என்னை நம்பு ! உன்னை நம்பு ! எல்லாம் கைகூடும் ! தளர்வாய் சாயும் போதெல்லாம் தென்றலாய் உனை வந்து வருடுவேன். நம்பிக்கையாய் இரு !
நான் உன்னை இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பேன். தவறு செய்தால் நான் தண்டிப்பேன். தப்பு, தவறாகி, பின் பாவமாகி புற்றை போல வளர விடாதே ! கரையான் புற்று பாம்பை அடைக்கலமாக்கியது !
உன் பாவ புற்று உன்னை அணு அணுவாக துன்பம் கொடுத்து உடலை நோயாய் கரைக்கின்றது. உன் குற்றம், துரோகம் பின் நோக்கி பார் ! மீண்டும் செய்ய நினைக்காதே ! மறைக்கப்பட்ட உண்மை செதுக்கிய சிற்பம் போல ! நீ பிறகுக்கு செய்த தவறை நினை ! மனதால் மன்னிப்பு கேள் ! உன் தண்டனை குறையும் ! நான் இந்த வினையிலிருந்து உன்னை விடுவிப்பேன்.
என் வார்த்தையில் நம்பிக்கை வை ! தன் தாய் பறவை எப்படியாவது இரை கொண்டு வரும் என்று அதன் குஞ்சு நம்பியிருக்கும் ! அப்படித் தான் நீயும் ! எப்போதும் கடவுளை நம்பி இரு ! கடவுள் தருவான் ! கருணைமிக்கவன் ! நிச்சயம் தருவான் !
உன் வாழ்வில் நான் இருந்தால் அதிசயம் நிகழும் ! ஆத்மாவின் நித்ய போகத்தை ஆழ்ந்து யோசி ! வைகறையில் வான் நோக்கி கூப்பிடு ! வசந்த காலம் உன் வாசலில் வந்து நிற்கும் !
காட்டில் உள்ள மரங்கள் கடவுளை நம்பி வளர்கிறது. மிருகங்கள், பறவைகள் நாளைய உணவை, நாளைய வாழ்வை சிந்திப்பதில்லை. எல்லாம் எப்போது கிடைக்க வேண்டும் என்று கடவுள் நிர்ணயித்தான் உன் விதியில் ! நீ கிடைக்கப் பெறுவாய் ! என் வார்த்தை மேல் நம்பிக்கை இருந்தால் இப்போதே ஜெயிப்பாய் !
உன் செயல் அறிவேன் !
உன் விதி அறிவேன் !
உன் வினை அழிக்கும் சூட்சும்ம் நானறிவேன் ! ஏனடா பயம் ?
ஆழ்ந்த நம்பிக்கையும், ஆத்மார்த்தமான அன்போடும் வாழ பழகு ! வாழ்வெல்லாம் வசந்தம் தான் ! இப்போது அன்பை தொலைத்து ஆணந்தம் தொலைத்து ஆர்பரிக்கும் கடல் அலை போல உன் மனம் ஆட கண்டேன் ! மணம் இல்லா மலரைப் போல வாழ்வில் இன்பமில்லாமல் நீ வாழ கண்டேன் !
என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் இந்த பாசமுள்ள அன்பு குழந்தை இநன்யாவின் சொல் கேட்பார்கள் ! நான் இது நாள் வரை கேட்டது எதையும் அவர்கள் தராமல் இருந்ததில்லை. நான் கேட்டதும் தருவார்கள். நானும் நீ கேட்டதை தருவேன் ! சிறிது கால தாமதம் ஆனாலும் நீ விரும்பியது கிடைக்கும் !
என் அன்பு தந்தை பிரபஞ்ச நாயகன் அன்பை உணராமல் இங்கே ஆர்பரிக்கின்றான். கும்பிட்டும் குறை போகாமல் அலைகின்றான். தாமரை மலர்பாதம் பட்ட சஞ்சிநாதம் மணக்கும் புணித புண்ணிய மண்ணை தொட்டும் குறையோடு வாழ்கின்றான். கேட்க தெரியாமல் வணங்க தெரியாமல் இங்கே வாடுகின்றான்.
இந்த பாசமுள்ள பிள்ளை எப்போதும் என் அப்பா பிரபஞ்ச நாயகனின் சொல் கேட்பேன். கல்வியும், செல்வமும், வீரமும், ஆக்கமும், ஊக்கமும் எனக்குள்ளே ! எல்லாம் எனக்குள் ! எல்லாம் நிரந்தரமாக ! உனக்கு தருவேன் ! என் நாமம் எல்லாம் தரும் ! நம்பிக்கை உன் மேல் வை !
என் அபயகரம் உன்னை கைவிடாது ! என்னை நம்பியவர்கள் யாரும் தோற்றதில்லை. தோற்பதுமில்லை ! வெற்றி திருமகனாக எல்லா செல்வங்களோடும் வலம் வர கண்டேன். நீயும் என் குழந்தை என்று குதுகலமடைவாயாக !
குறை ஒன்றும் உனக்கில்லை ! எல்லை இல்லா நிம்மதியும் , ஆணந்தமும் எனக்குள்ளே ! என்னை தோண்டிப் பார் ! விடை கிடைக்கும் ! நம்பிக்கையாய் என் நாமம் சொல் ! நலம் வாழ வழி பிறக்கும்.
கடவுளை நோக்கி உன் கால்கள் பயனிக்கும் போதும், நல்ல செயல்கள் செய்யும் போதும் கடும் சோதனைகள் வரும் ! துவண்டு விடாதே ! எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்து கரை சேர் நம்பிக்கை கொண்டு !
உன் விரல் பிடிக்க நான் இருக்கிறேன். நீ நம்பிக்கையாய் இரு ! நாயகன் நான் எப்போதும் துணை இருப்பேன் !
பொன்னாட்சியின் புணிதன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment