Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, October 6, 2016

என்னை ஏகாடம் செய்யாதே ! எக்காளமிடும் உன் உயிர் ! நீ இருக்கும் நிவேசம் நீசமடா ! நியர் அறியா வாழ்வை சிதிலமடைய வைக்கின்றாய் ? ஏனடா ?

Inanya Maha Munivar 06-10-2016
238 என்னை ஏகாடம் செய்யாதே ! எக்காளமிடும் உன் உயிர் ! நீ இருக்கும் நிவேசம் நீசமடா ! நியர் அறியா வாழ்வை சிதிலமடைய வைக்கின்றாய் ? ஏனடா ?
நம்பிக்கையாய் இரு !
சதிபதி வாழ்வில் யாதபதியில் வீழ்ந்து கரை ஏறா தவிக்கின்றாய். நன்மதி, சன்மதி, பண்மதி, வின்மதி தெரியாமல், உன் மதியும் தெரியாமல் வீழ்ந்து போகின்றாய் !
ஏன் வந்தோம் என்று உனக்கு தெரியாது. ஆனால் எல்லாம் தெரியும் என்று பசப்புகின்றாய். பாழ்பட்ட மனதை வைத்துக் கொண்டு, ஒரு விநாடி அடக்க தெரியாமல், அகங்கார மனதை ஆளத் தெரியாமல் வாழ்கின்றாய். நம்பிக்கை என்ற போர்வை போர்த்தாமல் நாளும் பயந்து வாழ்கின்றாய்.
நான் எல்லாம் கொடுப்பேன் என்று சொன்னேன் ! கொடுப்பேன் ! உன்னை கைவிடமாட்டேன் ! உன் வாழ்வை உயர்த்துவேன் என்று சொன்னேன். நம்பிக்கையாய் இரு !
குழந்தை தன் தாயை நம்புவது போல என்னை நம்பு ! உன்னை நம்பு ! எல்லாம் கைகூடும் ! தளர்வாய் சாயும் போதெல்லாம் தென்றலாய் உனை வந்து வருடுவேன். நம்பிக்கையாய் இரு !
நான் உன்னை இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பேன். தவறு செய்தால் நான் தண்டிப்பேன். தப்பு, தவறாகி, பின் பாவமாகி புற்றை போல வளர விடாதே ! கரையான் புற்று பாம்பை அடைக்கலமாக்கியது !
உன் பாவ புற்று உன்னை அணு அணுவாக துன்பம் கொடுத்து உடலை நோயாய் கரைக்கின்றது. உன் குற்றம், துரோகம் பின் நோக்கி பார் ! மீண்டும் செய்ய நினைக்காதே ! மறைக்கப்பட்ட உண்மை செதுக்கிய சிற்பம் போல ! நீ பிறகுக்கு செய்த தவறை நினை ! மனதால் மன்னிப்பு கேள் ! உன் தண்டனை குறையும் ! நான் இந்த வினையிலிருந்து உன்னை விடுவிப்பேன்.
என் வார்த்தையில் நம்பிக்கை வை ! தன் தாய் பறவை எப்படியாவது இரை கொண்டு வரும் என்று அதன் குஞ்சு நம்பியிருக்கும் ! அப்படித் தான் நீயும் ! எப்போதும் கடவுளை நம்பி இரு ! கடவுள் தருவான் ! கருணைமிக்கவன் ! நிச்சயம் தருவான் !
உன் வாழ்வில் நான் இருந்தால் அதிசயம் நிகழும் ! ஆத்மாவின் நித்ய போகத்தை ஆழ்ந்து யோசி ! வைகறையில் வான் நோக்கி கூப்பிடு ! வசந்த காலம் உன் வாசலில் வந்து நிற்கும் !
காட்டில் உள்ள மரங்கள் கடவுளை நம்பி வளர்கிறது. மிருகங்கள், பறவைகள் நாளைய உணவை, நாளைய வாழ்வை சிந்திப்பதில்லை. எல்லாம் எப்போது கிடைக்க வேண்டும் என்று கடவுள் நிர்ணயித்தான் உன் விதியில் ! நீ கிடைக்கப் பெறுவாய் ! என் வார்த்தை மேல் நம்பிக்கை இருந்தால் இப்போதே ஜெயிப்பாய் !
உன் செயல் அறிவேன் !
உன் விதி அறிவேன் !
உன் வினை அழிக்கும் சூட்சும்ம் நானறிவேன் ! ஏனடா பயம் ?
ஆழ்ந்த நம்பிக்கையும், ஆத்மார்த்தமான அன்போடும் வாழ பழகு ! வாழ்வெல்லாம் வசந்தம் தான் ! இப்போது அன்பை தொலைத்து ஆணந்தம் தொலைத்து ஆர்பரிக்கும் கடல் அலை போல உன் மனம் ஆட கண்டேன் ! மணம் இல்லா மலரைப் போல வாழ்வில் இன்பமில்லாமல் நீ வாழ கண்டேன் !
என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் இந்த பாசமுள்ள அன்பு குழந்தை இநன்யாவின் சொல் கேட்பார்கள் ! நான் இது நாள் வரை கேட்டது எதையும் அவர்கள் தராமல் இருந்ததில்லை. நான் கேட்டதும் தருவார்கள். நானும் நீ கேட்டதை தருவேன் ! சிறிது கால தாமதம் ஆனாலும் நீ விரும்பியது கிடைக்கும் !
என் அன்பு தந்தை பிரபஞ்ச நாயகன் அன்பை உணராமல் இங்கே ஆர்பரிக்கின்றான். கும்பிட்டும் குறை போகாமல் அலைகின்றான். தாமரை மலர்பாதம் பட்ட சஞ்சிநாதம் மணக்கும் புணித புண்ணிய மண்ணை தொட்டும் குறையோடு வாழ்கின்றான். கேட்க தெரியாமல் வணங்க தெரியாமல் இங்கே வாடுகின்றான்.
இந்த பாசமுள்ள பிள்ளை எப்போதும் என் அப்பா பிரபஞ்ச நாயகனின் சொல் கேட்பேன். கல்வியும், செல்வமும், வீரமும், ஆக்கமும், ஊக்கமும் எனக்குள்ளே ! எல்லாம் எனக்குள் ! எல்லாம் நிரந்தரமாக ! உனக்கு தருவேன் ! என் நாமம் எல்லாம் தரும் ! நம்பிக்கை உன் மேல் வை !
என் அபயகரம் உன்னை கைவிடாது ! என்னை நம்பியவர்கள் யாரும் தோற்றதில்லை. தோற்பதுமில்லை ! வெற்றி திருமகனாக எல்லா செல்வங்களோடும் வலம் வர கண்டேன். நீயும் என் குழந்தை என்று குதுகலமடைவாயாக !
குறை ஒன்றும் உனக்கில்லை ! எல்லை இல்லா நிம்மதியும் , ஆணந்தமும் எனக்குள்ளே ! என்னை தோண்டிப் பார் ! விடை கிடைக்கும் ! நம்பிக்கையாய் என் நாமம் சொல் ! நலம் வாழ வழி பிறக்கும்.
கடவுளை நோக்கி உன் கால்கள் பயனிக்கும் போதும், நல்ல செயல்கள் செய்யும் போதும் கடும் சோதனைகள் வரும் ! துவண்டு விடாதே ! எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்து கரை சேர் நம்பிக்கை கொண்டு !
உன் விரல் பிடிக்க நான் இருக்கிறேன். நீ நம்பிக்கையாய் இரு ! நாயகன் நான் எப்போதும் துணை இருப்பேன் !
பொன்னாட்சியின் புணிதன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment