05-06-2018
ஈனில் ஆசியோடு இருக்கின்றேன். ஈனஜாதி மானுடம் உணராது இருப்பது ஏனோ ? புனிதன் நானடா ! புண்ணியமும் நானடா !
பலி கொடு !
உன்னில் இருக்கும் கோபத்தை பலி கொடு !
ஆணவத்தை அதிகாரத்தை பலி கொடு !
நான் என்ற அகங்காரத்தை பலி கொடு !
நாயகன் (ஆன்மா) எனை அறிவாய்.
ஆணவத்தை அதிகாரத்தை பலி கொடு !
நான் என்ற அகங்காரத்தை பலி கொடு !
நாயகன் (ஆன்மா) எனை அறிவாய்.
காமம், ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மதம், மாச்சர்யம் என்ற எட்டு தீய குணங்கள் தான் உன் கருவில் எட்டை போல ஓடி பாவம் சேர்க்க உதவுகிறது ! உருவாக்கத்திலேயே உன் பாவத்தை புகுத்தினாய் உன் கருவுக்கு. ஆதலால் எப்போதும் நற்சிந்தனை கொண்டு தினமும் வாழ்வில் போராடு !
தீய எண்ணங்களும், தீய சிந்தனைகளும் உனை திக்கு தெரியாமல் திகைப்புடன் வாழ வைத்து விரக்தியும் வேதனையும் தரும். பூமியில் மன சஞ்சலம் கொண்டு தினமும் போராட வழி வகை செய்யாதே ! லோபம் (கடும் பற்று) தான் உனில் காமத்தை உண்டாக்குகிறது. ஆதலால் கடும் பற்றை கடவுளிடம் வை ! பெண்ணில், மண்ணில், உன்னில் வைத்தால் உனக்கு பெருந்துன்பம் தான் !
மோகம் (கற்பு நெறி தவறுதல்) உன்னை மீண்டும் பிறக்க வழி செய்கிறது ! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை எல்லையை மீறும் பொழுது உன் பாவம் தொடங்குகிறது. ஆதலால் மோகத்தில் பிறழாதே ! பிறன்மனை நோக்காதே !
மதம் உன்னையும் உன் வாழ்வையும் நிர்ணயிக்கிறது. மதம் என்றால் உன்னை உயர்வாகவும், தாழ்வாகவும் நினைப்பது ! இங்கே உயர்வு என்பது ஒழுக்கம் தான் ! ஆனால் நீ உயர்வு என்று நினைப்பது பெரும் பணம், பெரும் நிலம் உன்னிடம் இருப்பதை தான் நினைக்கிறாய்.
உன் தவறுகளை துடைத்தெறி ! உனை தாழ்வாக எண்ணாதே !
நீ எப்போதும் கடவுளோடு பேசு ! கடவுளின் பிள்ளை என்று முழக்கமிடு ! கடவுளோடு இருக்கின்றேன் என்று பெருமிதம் கொண்டு மார்தட்டி வாழப் பழகு ! ஆள்பவன் உனை அரவணைக்க காத்திருக்கின்றான். உனக்கு ஆனந்த நிலை தர துடிக்கின்றான் உன் உள்ளே !
மாச்சர்யம் இருப்பவன் இங்கே தோற்றுப் போவான். மாச்சர்யம் என்றால் வஞ்சகம், சூது என்று பெயர். வஞ்சகம் கொண்டு வாழ்வை நிர்ணயிக்க முடியாது ! உணர் !
தடுமாறும் மனித மனமே இங்கே நிரம்ப கண்டேன். உன் எட்டு தீய குணங்களையும் கடவுளின் பொற்பாதத்தில் பலியிடு ! கடவுள் உனக்கு பேரின்பம் தருவான். உன் பாவம் கரைந்து உனை உணர்வாய். உலகம் உனை இரு கரம் கூப்பி வரவேற்க தயாராக இருக்கிறது. விரைந்து வா !
என்னுள் எல்லாவற்றையும் பலியிடு ! காலம் நான் ! காலத்தில் ஒரு சிறு புள்ளி நீ ! நான் மறைவதில்லை. இந்த யுகம் இருக்கும் வரை நான் இருப்பேன் ! யுகம் ஓர் போதும் அழியாது ! மலரில் தேன் இல்லாது எப்போது இருக்கின்றதோ அப்போது தான் யுகம் அழியும். இன்பம், துன்பம், நன்மை, தீமை, பகல், இரவு என்று இந்த யுகம் இருக்கும் !
நீ எப்போதும் இன்பத்தில் திளைக்க காலத்தில் எனை நோக்கி வா ! உன் ஆணவத்தை என்னில் பலியிடு ! ஆனந்தம் உனக்குள்ளே உணர்வாய் !
நான் சத்யம் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment