19-07-2018
நிரம்பியம் பெருக கண்டேன். எல்லா உட்பொருட்களும் உனக்கு உதவ கண்டேன். எல்லாம் பெருக, நீ சுருக்கி வாழ்வதேனடா ? பிரபஞ்ச இளவரசன் சத்திய விரதன் நான் ! என் சொல் வெல்லுமடா !
சுருக்கி, பெருக்கு !
பிலம் (குகை) என்பதில் வாழ்ந்தான் பெருமையாய் என் குல சித்தர்கள் ! !அகத்திலும், புறத்திலும் ஆனந்தமாக வாழ்ந்தான் ! ஆனால் நீ மாட மாளிகை, கோட கோபுரம், நிம்மதிக்காக கோவில், கேளிக்கை உல்லாசத்திற்கு எவைகளையோ கட்டினாய். ஆனால் மனம் எல்லாம் பாரமாக, நிம்மதி தொலைத்து அலைகின்றாய்.
ஆசையை சுருக்கி அன்பை பெருக்கடா ! நீ எல்லாவற்றையும் சுருக்கி ஆனந்தம் தொலைக்கின்றாய்.
நீ அன்பை பெருக்கு ! பக்தியை சுருக்கு !
கருணையை பெருக்கு !
கோபத்தை சுருக்கு !
ஆனால் விரதம் என்ற பெயரால் உன் வயிற்றை சுருக்கி வாழ்வில் இன்பத்தை தேடுகிறாய். நீ தவம் செய் ! தவம் என்றால் உறவுகளைவிட்டு காட்டுக்கு சென்று தனிமையில் அமர்வது இல்லை.
தவம் என்றால் சுருங்குதல் ! உன் ஆசை, கோபம், காமம், பொறாமை, சூது, வஞ்சம், கொலை, துஷ்ட எண்ணங்கள் இவைகளை சுருக்குவது தான் தவம் ! உன்னில் இருந்து இவைகளை அழிப்பது தான் தவம். உன் அறிவு என்ற ஒளியை மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்க வை ! இருட்டில் வெளிச்சம் பெற விளக்கு தேவை !
நீயும் உன்னை உணர ஒரு நல்குரு தேவை. உன் பயம் எதிரிகளுக்கு பலம். உனக்கு பலமின்மை ! நீ நல்லவனாக பெருகு ! உன் நேரத்தை கடவுளை தவிர வேறு யாருக்கும் செலவழிக்காதே ! மனதிற்கு பலம் கொடுத்து நீ அதன் பின்னால் செல்கிறாய். மனம் இடும் கட்டளையை ஏற்று வாழ்நாள் யாவும் கேட்டு மடிகிறாய். உன் ஆன்ம பலத்தை பெருக்கு !
உன் மனதிற்கும் வேறு எந்த ஜடப் பொருளுக்கும் அடிமையாகாதே !
உன் மனதிற்கும் வேறு எந்த ஜடப் பொருளுக்கும் அடிமையாகாதே !
பிளவுபட்ட பிறவி. மேலே மெய் உடல், கீழே பொய் உடல் ! இருபக்கமும் கால் வைத்தவனால் எந்த பாதையிலும் பயனிக்க முடியாது. ஒரு உடலை உன் மெய் உடலை எடுத்து ஆனந்தமாக மேலே வாழ முயற்சி செய் !
பாறையை போல மனதை கல்லாக்கி ஒருநிலைப்படுத்து ! வேருக்கு வழிவிடும் பாறையை போல அன்பாய் இரு ! எங்கேயும் முளைப்பாய் ! இங்கே முளைத்து இங்கேயே கருகிப் போகின்றாய். அறிவுக்கு வேலை கொடு !
நான் என்பதை நீ மறந்தால் நாயகன் உள்ளிருந்து எட்டிப் பார்ப்பான். ஆணவம் பிடித்த மானுடன் அசுர எண்ணத்தில் வீழ்ந்து மடிய நான் கண்டேன்.
நான் அன்பை பெருக்கினேன் ! ஆனந்தமாக வாழ்கின்றேன் !
எனக்கு பிறப்பில்லை ! இறப்பில்லை !
எப்போதும் உன்னுள் குடி இருக்கின்றேன் ! ஆனந்த நிலையில் என்னை அறிவாய் உன்னை சுருக்கு ! நான் உன்னை பல நிலையாய் பெருக்குவேன் !
எப்போதும் உன்னுள் குடி இருக்கின்றேன் ! ஆனந்த நிலையில் என்னை அறிவாய் உன்னை சுருக்கு ! நான் உன்னை பல நிலையாய் பெருக்குவேன் !
அகண்டமாய் விரிந்து உன்னை ஆட்சி செய்பவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment