Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 18, 2018

நிரம்பியம் பெருக கண்டேன். எல்லா உட்பொருட்களும் உனக்கு உதவ கண்டேன். எல்லாம் பெருக, நீ சுருக்கி வாழ்வதேனடா ? பிரபஞ்ச இளவரசன் சத்திய விரதன் நான் ! என் சொல் வெல்லுமடா ! சுருக்கி, பெருக்கு !


19-07-2018
நிரம்பியம் பெருக கண்டேன். எல்லா உட்பொருட்களும் உனக்கு உதவ கண்டேன். எல்லாம் பெருக, நீ சுருக்கி வாழ்வதேனடா ? பிரபஞ்ச இளவரசன் சத்திய விரதன் நான் ! என் சொல் வெல்லுமடா !
சுருக்கி, பெருக்கு !
பிலம் (குகை) என்பதில் வாழ்ந்தான் பெருமையாய் என் குல சித்தர்கள் ! !அகத்திலும், புறத்திலும் ஆனந்தமாக வாழ்ந்தான் ! ஆனால் நீ மாட மாளிகை, கோட கோபுரம், நிம்மதிக்காக கோவில், கேளிக்கை உல்லாசத்திற்கு எவைகளையோ கட்டினாய். ஆனால் மனம் எல்லாம் பாரமாக, நிம்மதி தொலைத்து அலைகின்றாய்.
ஆசையை சுருக்கி அன்பை பெருக்கடா ! நீ எல்லாவற்றையும் சுருக்கி ஆனந்தம் தொலைக்கின்றாய்.
நீ அன்பை பெருக்கு ! பக்தியை சுருக்கு !
கருணையை பெருக்கு !
கோபத்தை சுருக்கு !
ஆனால் விரதம் என்ற பெயரால் உன் வயிற்றை சுருக்கி வாழ்வில் இன்பத்தை தேடுகிறாய். நீ தவம் செய் ! தவம் என்றால் உறவுகளைவிட்டு காட்டுக்கு சென்று தனிமையில் அமர்வது இல்லை.
தவம் என்றால் சுருங்குதல் ! உன் ஆசை, கோபம், காமம், பொறாமை, சூது, வஞ்சம், கொலை, துஷ்ட எண்ணங்கள் இவைகளை சுருக்குவது தான் தவம் ! உன்னில் இருந்து இவைகளை அழிப்பது தான் தவம். உன் அறிவு என்ற ஒளியை மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்க வை ! இருட்டில் வெளிச்சம் பெற விளக்கு தேவை !
நீயும் உன்னை உணர ஒரு நல்குரு தேவை. உன் பயம் எதிரிகளுக்கு பலம். உனக்கு பலமின்மை ! நீ நல்லவனாக பெருகு ! உன் நேரத்தை கடவுளை தவிர வேறு யாருக்கும் செலவழிக்காதே ! மனதிற்கு பலம் கொடுத்து நீ அதன் பின்னால் செல்கிறாய். மனம் இடும் கட்டளையை ஏற்று வாழ்நாள் யாவும் கேட்டு மடிகிறாய். உன் ஆன்ம பலத்தை பெருக்கு !
உன் மனதிற்கும் வேறு எந்த ஜடப் பொருளுக்கும் அடிமையாகாதே !
பிளவுபட்ட பிறவி. மேலே மெய் உடல், கீழே பொய் உடல் ! இருபக்கமும் கால் வைத்தவனால் எந்த பாதையிலும் பயனிக்க முடியாது. ஒரு உடலை உன் மெய் உடலை எடுத்து ஆனந்தமாக மேலே வாழ முயற்சி செய் !
பாறையை போல மனதை கல்லாக்கி ஒருநிலைப்படுத்து ! வேருக்கு வழிவிடும் பாறையை போல அன்பாய் இரு ! எங்கேயும் முளைப்பாய் ! இங்கே முளைத்து இங்கேயே கருகிப் போகின்றாய். அறிவுக்கு வேலை கொடு !
நான் என்பதை நீ மறந்தால் நாயகன் உள்ளிருந்து எட்டிப் பார்ப்பான். ஆணவம் பிடித்த மானுடன் அசுர எண்ணத்தில் வீழ்ந்து மடிய நான் கண்டேன்.
நான் அன்பை பெருக்கினேன் ! ஆனந்தமாக வாழ்கின்றேன் !
எனக்கு பிறப்பில்லை ! இறப்பில்லை !
எப்போதும் உன்னுள் குடி இருக்கின்றேன் ! ஆனந்த நிலையில் என்னை அறிவாய் உன்னை சுருக்கு ! நான் உன்னை பல நிலையாய் பெருக்குவேன் !
அகண்டமாய் விரிந்து உன்னை ஆட்சி செய்பவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment