to INANYA MAHA MUNIVAR
12-07-2018
மகிழ்ச்சியின் வாசல் நான் ! புவியில் எல்லாம் எனக்கு வசப்படும். மகிழ்ச்சியில் உறவாடும் என்னுள் வந்தால் உன் உயிர்.
நான் உன்னை வழிநடத்துகிறேன் !
கடவுளிடம் உன்னை ஒப்படைத்து வாழ் ! உன் ஒவ்வொரு அடியிலும் கடவுள் இருக்கின்றார் என்று நம்பு ! உன்னை வழி நடத்துவது கடவுள் என்று உணர பார் ! உன் துன்பம், இடர், இன்பம் எது வந்தாலும் கடவுள் தருவதாக நினைத்து பூரித்து வாழ் ! நான் என்று நீ நினைப்பதாலே மிகுந்த துன்பம் என்று உணர் !
ஒழுக்கத்தில் தன்னிறைவு கொள். மற்றதெல்லாம் கடவுள் வழிநடத்துவான் ! எல்லாம் இங்கே நிர்ணயிக்கப்பட்டது. உணர் !
நீ நினைத்து ஏதும் நடவாது ! எந்த ஆன்மீகமும் மதத்தை போதிப்பதில்லை. மதம் தான் ”என் கடவுள் பெரிது, உன் கடவுள் சிறிது” என்று உதவாத ஆன்மிகத்தை போதிக்கிறது ! என் கடவுளை மட்டும் வணங்கினால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்று புலம்புகிறான் அறிவீலி மனிதன். தவறு செய்பவன் எந்த மதமானாலும் நரகத்தின் வாசலுக்கு தான் செல்வான். உன் பாவ, கர்ம கணக்குபடி தான் உன் வாழ்வு !
நீ எந்த மதமானாலும் நீ மனிதன் தான் ! கடவுளுக்கு ஜாதி இல்லை ! மதமில்லை ! உன்னை கண்டுபிடித்து அழைத்து செல்லும் தூயவன் நான் ! நான் உன்னை வழிநடத்துகிறேன் என்பதை உனை உற்று நோக்கி உணர் ! முதலில் உன்னை உணரப் பார் ! உன் எல்லா செயலிலும் கடவுள் இருப்பதை நீ அறிந்தால் நீயே மிகுந்த ஆனந்தமானவன். உன்னுள் உறைந்து உன்னை உற்று நோக்குகிறான் ஆன்மாவாக !
இந்த பூமியில் தவறு செய்தால் உன் அற்ப சட்டத்தை வைத்து தப்பித்துவிடுவாய். ஆனால் கடவுளின் நீதிமன்றத்தில் உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது. நான் உன்னை காப்பாற்றுவேன். ஏனென்றால் எனக்கு வலிமை உண்டு ! நீ ஒழுக்கத்தில் நிறைவு காணும் பொழுது உன்னை காப்பாற்றும் வல்லமை எனக்குண்டு !
உன் தர்மம் உனை காப்பாற்றும். ஆதலால் மிகுந்த எச்சரிக்கையோடு இரு ! நான் உன் வாழ்வை அழகாக, ஆனந்தமாக வைப்பேன். உன்னை கைபிடித்து அழைத்து செல்வேன் !
ஐந்து புனித மரத்தில் ஆல், அரசு, மனிதர்களுக்கு எதிலும் பயன்படும்படி இல்லாவிட்டாலும் அதில் உயிர்த்துவம் (மிகுந்த ஆக்ஸிஜன்) இருப்பதால் முதன்மை பெறுகிறது. நீ ஆக்ஸிஜன் என்று சொல்லும் புனித காற்று அவைகளில் நிரம்பி இருக்கிறது ! எதுவும் இங்கு சோடையான படைப்பில்லை. எல்லாம் கடவுளின் வழிகாட்டுதலின் படியே உயிர்த்துவம் பெற்று செயல்படுகிறது. உணர் !
நான் வழிநடத்தி செல்லும் தர்ம கூட்டம் உலகெல்லாம் நிரம்ப கண்டேன். தர்ம பாதையை தெளிவாக எடுத்துரைக்கும் சதுரங்க சேனா படை உலகமெல்லாம் கோடியாய் பரவக் கண்டேன். நான் உன்னை வழிநடத்தி செல்வேனடா ! அன்பால் எனை கட்டிப் போடு ! அறியனை யுகத்தில் உனக்கு காத்திருக்கிறது !
நான் உன்னை வழிநடத்துகிறேன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment