to INANYA MAHA MUNIVAR
28 -06-2018
அசரையில் குழம்பு வைத்து அம்புவியில் அமர்ந்து அம்புலியை பார்த்து மகிழ்ந்தாய் ! நீ அறிந்தது என்ன ? உணர் !
மகிழ்ச்சி ;;;
மகிழத் தெரியவில்லை. ஆதலால் உனக்கு மகிழ்ச்சியின் அருமை புரியவில்லை. கடவுளோடு பேசு ! மகிழ்ந்து மகிழ் ! நீ மகிழ்ந்தால் மாயவன் நான் மகிழ்வேன் !
பிறர் தர வராது மகிழ்ச்சி ! பிறரிடன் எதையும் எதிர்பார்க்காதே ! பிறருக்கு எதையும் கொடுத்து மகிழ் ! கடவுளிடம் எதிர்பார்த்து நில் ! கடவுள் கருணைமிக்கவன். அவன் கருணைக்கு ஈடு இங்கு ஏதுமில்லை !
என் அன்னை தந்தையின் கருணை என்னுள் நிறைந்தது ! என் அன்னை தந்தையிடம் அன்பை கற்றேன். மனைவி, குழந்தை, புறத்தில் அதிகாரம் கொள்ள நினைக்காதே ! எதிலும் குறை காண்பதே உன் வேலை, படைப்பில் எத்துணை மகிழ்ச்சி ? எத்துணை ஆனந்தம் ? எத்துணை நிம்மதி ? ஆனால் படைப்பையும் கூட குறை சொல்லி கோமாளியாகின்றாய்.
நீ நினைத்து எல்லாம் அடைய கடவுளின் பாதம் பற்று. கடவுளிடம் அன்பை கேள் ! ஆனந்தம் நிரம்ப பெறுவாய் ! தவறு செய்யாதே ! எப்போதும் உன்னை அறிய முற்படு ! இது தான் அறிவு ! இது தான் ஞானத்தின் திறவு கோல் ! சுதந்திரமாக நீ ஆசைப்பட்டால் சுத்தமாக இரு ! ஒழுக்கமாக இரு ! தவறுகளை ஒப்பு கொள்ளும் துணிச்சலை கொண்டு வா !
மண்ணிற்கு மேல் உள்ள பொருள்களை வைத்து வீடு, கோபுரம், மாளிகை கட்டினாய் ! அவையனைத்தும் இயற்கை சீற்றத்தில் பூகம்பத்தில் சின்னாபின்னமாக நான் கண்டேன். ஆனால் மண்ணிற்கு கீழே உள்ளவைகளை எடுத்து புணித கரையான் கட்டிய வீடு நங்கூரம் போல எந்த இயற்கை சீற்றத்துக்கும் அசையாது நிற்க கண்டேன். உணர் ! கரையான் திண்ணும் உடல் கொண்டவன் நீ ! கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய்.
அரங்கு, அரங்காக அறை கட்டி கரையான்கள் ஆனந்தமாக வாழ கண்டேன். ! நீ குளிர்சாதன அறையில் உறங்கி குறையோடு வாழ்கின்றாய் ! நான் இருக்கும் இடம் எந்த பூகம்பத்திற்கும் அழியாது ! யுகம் இருக்கும் வரை அழியாது ! ஏனென்றால் தாங்கி பிடிப்பது என் அன்னையின் (பூமி) தங்கத் திருகரங்கள் ! என்னை அறிந்து ஆனந்தம் நிலை பெற முயற்சி செய்யடா !
எனை ஆனந்தபடுத்த என்ன செய்யப் போகிறாய் ? உன் உறவுகளை நேசி ! உன் தாயையும் தந்தையையும் நேசி ! பிள்ளைகளை நேசி ! மனைவியை நேசி !
தாங்கவொனா துயரம் வந்தாலும் உன்னையும், பிறரையும், கடவுளை வெறுக்காதே ! நீயே அனைத்திற்கும் பொறுப்பெடுத்து ஆள கற்றுக் கொள். ஆனந்தம் உனக்குள்ளே ஆர்பரிக்கும் ! . ஆத்ம சொரூபன் நான் உனக்குள் !
மகிழ்ந்து மகிழ் !
மாயவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment