கண் பார்க்கும் தூரம் உன் கால்கள் நடந்து செல்லுமா ? உன் பின்னால் உன்னால் பார்க்க முடியுமா ? உன் பார்வையின் நீளம் என்ன ?
பார்வை ;;;
உன் பார்வை நீசம் தானடா ! அறிந்து பார்த்து, தெரிந்து தவறு செய்கிறாய். உன் கண்ணுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்பு இருப்பதை அறியாமல் எண்ணத்தால் நினைவில் மூழ்கி தவறு செய்கிறாய். தவறு செய்து கடவுளை குறை சொல்லி காலம் யாவும் துன்புறுகின்றாய் !
நீ இன்புற எப்போது உணர்வாயடா ! மலையை பார்த்துவிட்டேன் என்று சொன்னால் மலையின் உட்புறத்தில் எல்லாம் அறிந்துவிட்டாய் என பொருளாகுமா ? என்னை பார்த்துவிட்டால் என்னுள் இருப்பதை அறிந்துவிட்டாய் என பொருள் கொள்ள இயலுமா ?
எதையும் முழுவதும் பார்க்காமல் தான் முடமாகிப் போனாய். எல்லாம் தெரிந்தவன் அசைவற்று இருப்பான் ! நாக்குக்கு வேலை கொடுக்கமாட்டான். கடவுளை கூவி விற்கமாட்டான். புத்தகத்தை படித்து உளறமாட்டான். ஒருவன் சிரித்துவிட்டால் நல்லவன் என்று பொருள் கொள்ள இயலுமா ?
எதையும் உள்ளே அறியாமல் பார்த்துவிட்டேன் என்று மனிதன் துடிக்கின்றான். பெண்ணை பார்த்து அவளின் உள்குணத்தை ஒன்று கூட அறியாமல் அவளை பார்த்து அறிந்துவிட்டேன் என மனிதன் பிதற்றுகிறான். அவள் ஓராயிரம் எண்ணங்களும். ஓராயிரம் சூட்சுமங்களும் நிறைந்தவள். உனக்காக, நீ அறிவதற்காக படைக்கபட்டாள் பெண். ஆனால் பெண்ணை அடிமையாகத் தான் நினைத்து வரலாறு எழுதுகின்றான்.
தினமும் மனைவி, குழந்தைகளை பார்த்து கொண்டிருக்கின்றாய். எதை அறிந்தாய் ? எதிலும் நுண் அறிவு, விளக்கம் புரியாமலே மனிதன் பிதற்றுகின்றான். ஆழ்ந்து உற்று நோக்கும் அறிவை தேட முயலவில்லை !
மேலோட்டமாக பார்த்து எல்லாம் அறிந்துவிட்டேன் என்று மார்தட்டுகிறான். என்னை பார்த்து எதை சரி செய்தாய் ? என் உள் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதை நீ அறிவாயா ? பாவமடா மானிடன் !
பறவையின் பறக்கும் சூட்சுமம் ஒரு சின்ன பொறிகல் தான் ! அதை உணர்ந்தால் மனிதன் கூடுவிட்டு கூடு பாய்வான். தன்னை அறிவான். தன்னை தானே அழிக்கமாட்டான். ஞானிகள், மகான்கள் எல்லாம் தன்னைத் தானே அழிக்க முற்படும் பொழுது தான் தன்னை அறிந்தார்கள். அதனால் கடவுளை எட்டாக் கனியாய் நின்று துதி பாடி சென்றார்கள்.
நீ உன்னை அழிக்காமல் சூட்சுமம் உணர் ! சத்தியத்தில் நிலைக்கும் பொழுது உன்னை அறிந்துவிடுவாய் !
ஒவ்வொன்றிலும் மறந்திருக்கும் மறை பொருளை பார்க்காமல் எதையும் முழுதும் அறிய முடியாது.
உன் பார்வையின் நீளம் என்ன ?
நீ எங்கிருந்து எங்கு வந்தாய் ?
உன் பயணம் எங்கே முடிவடையும் ?
முதலில் அறிந்து உணர் ! என் பார்வை கூர்மை ! நான் கண் பார்க்கும் தூரம் சென்று வருவேன் ! என்னுள் நிலை பெரு ! உன்னையும் அழைத்து செல்கிறேன் !
உன் பார்வையின் நீளம் என்ன ?
நீ எங்கிருந்து எங்கு வந்தாய் ?
உன் பயணம் எங்கே முடிவடையும் ?
முதலில் அறிந்து உணர் ! என் பார்வை கூர்மை ! நான் கண் பார்க்கும் தூரம் சென்று வருவேன் ! என்னுள் நிலை பெரு ! உன்னையும் அழைத்து செல்கிறேன் !
சொல், செயல் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment