Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 7, 2018

புழுதிபாட்டை கொத்தி சீராக்கி சமநிலை செய்து பயிர் வளர்த்தால் உன் உடல் சமநிலை போல் தானியம் உண்டு செயல்படும். மனதை சமநிலையாக்கு ! சம நிலை ;;;

Inanya Maha Munivar
புழுதிபாட்டை கொத்தி சீராக்கி சமநிலை செய்து பயிர் வளர்த்தால் உன் உடல் சமநிலை போல் தானியம் உண்டு செயல்படும். மனதை சமநிலையாக்கு !
சம நிலை ;;;
எப்போதும் கோபம், வெறுப்பு, விரக்தி, காமம், பொய், மோகம் ஆகிய இவைகளைத் தான் உன்னுள் ஓடவிட்டு கொண்டிருக்கிறாய். எப்போதும் கவலை என்ற மூட்டையை தலையில் சுமந்து உன்னுள்ளே விரக்தியாய் பேசி குப்பையை சேர்த்து ஆறு நரம்புகளை அசைவற்று போகச் செய்கிறாய். எப்போதும் நல்ல நினைவுகளை உன்னுள் பதிய வை !
வெளி உலகம் உன்னை நல் வழிக்கு அழைத்து செல்லும் சூழ்நிலையில் இல்லை ! பார்க்கும் இடம் எல்லாம் காமத்தை வைத்தான் ! கூத்தும், பாட்டும், நடனமும், நாட்டியமும் உன்னை எதிர் வினைக்கு அழைத்து செல்கிறது.
உன்னில் உனை தேடு ! ஆனந்தம், நிம்மதி உனக்குள் தான் !
வெளியில் கண்களை மூடிக் கொண்டு வாழக் கற்றுக் கொள் ! ஆனால் கடவுளை வேண்டும் போது கண்களை திறந்து பேசு ! கண் திறந்து வேண்டினால் தான் உன் உள்ளே உறங்கும் ஆன்மா விழிநிலை அடையும்!
கண் மூடி பிரார்த்தனை செய்யாதே ! ஆயிரம் பேர் கூடி அழுதாலும் கடவுள் இரக்கம் கொள்ளமாட்டான். மனைவியின் அங்கம் தவிர புற உலகில் நீ எதையும் பார்த்து பாவம் சேர்க்காதே !
எல்லாம் சமநிலையாய் பூமியில் இருக்க நீ இயற்கைக்கு மாறாக அடிமைபடுத்துகிறாய். இங்கே முதலாளி யாருமில்லை.
எல்லாம் கூலிகள் ! பொம்மைகள் !
கடவுள் மட்டுமே முதலாளி !
கண் தான் எல்லா பாவத்திற்கும் மூலம். ஆதலால் பார்வையில் தெளிவை வை ! எந்த நினைவும் இல்லாமல் இருக்க பழகு ! இங்கே முடியாதது எதுவுமில்லை ! நீ நல் பாதையில் பயணிக்க ஆரம்பித்தால் கடவுளே உனக்கு தோழனாக வருவான். நல்ல நினைவுகளோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தம் தான் !
மனிதன் தான் சித்தன், ஞானி, மகான் ஆகிறான். நீ விதிவிலக்கல்ல. உன்னாலும் தெய்வ நிலை அடைய முடியும் ! உன் ஒளியை பார்க்க நினை ! உன்னை அடக்க பழகு ! பூமியை சமமாக்கி உழுது பயிராக்கி உனக்கு தந்தான் உழவன். வாழ்வில் மேடு பள்ளங்கள் இருந்தால் சமமாக்கு ! உன்னால் முடியும் !
எல்லா உயிரிடமும் சமநிலை கொள் ! இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யாருமில்லை. நீர் எப்போதும் சமநிலையாய் இருக்கக் கண்டேன். நீரின் தத்துவம் உணர் ! உடல் சமநிலை இல்லாது (சூடு) இருந்தால் நோய் தான் உருவாகும். மனதை ஓர் போதும் மேடு பள்ளத்திற்கு அழைத்து செல்லாதே ! சம நோக்குடன் வை !
தரணியில் துன்பமில்லா வாழலாம் ! நீ துன்பமென்று எதை நினைக்கின்றாய் என புரியவில்லை. இந்த துன்பமெல்லாம் ஒன்றுமில்லை. மேலே நீ செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும் போது கீழே உள்ள துன்பங்கள் பெரியதாக தோனாது !
நீர் கூட ஓடி ஒரு சமமான இடத்தில் தேங்கி நிற்கிறது. நீ காலம் யாவும் ஓடி எதையோ தேடுகின்றாய். நீ அமரும் இடத்திலேயே உன்னை தேடு !
ஓர்மையில் சொல்கிறேன். உனை கரை சேர்பேன் !
நான் உனை சமநிலை கொண்டு பார்க்கிறேன் !
வென்றவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment