புழுதிபாட்டை கொத்தி சீராக்கி சமநிலை செய்து பயிர் வளர்த்தால் உன் உடல் சமநிலை போல் தானியம் உண்டு செயல்படும். மனதை சமநிலையாக்கு !
சம நிலை ;;;
எப்போதும் கோபம், வெறுப்பு, விரக்தி, காமம், பொய், மோகம் ஆகிய இவைகளைத் தான் உன்னுள் ஓடவிட்டு கொண்டிருக்கிறாய். எப்போதும் கவலை என்ற மூட்டையை தலையில் சுமந்து உன்னுள்ளே விரக்தியாய் பேசி குப்பையை சேர்த்து ஆறு நரம்புகளை அசைவற்று போகச் செய்கிறாய். எப்போதும் நல்ல நினைவுகளை உன்னுள் பதிய வை !
வெளி உலகம் உன்னை நல் வழிக்கு அழைத்து செல்லும் சூழ்நிலையில் இல்லை ! பார்க்கும் இடம் எல்லாம் காமத்தை வைத்தான் ! கூத்தும், பாட்டும், நடனமும், நாட்டியமும் உன்னை எதிர் வினைக்கு அழைத்து செல்கிறது.
உன்னில் உனை தேடு ! ஆனந்தம், நிம்மதி உனக்குள் தான் !
வெளியில் கண்களை மூடிக் கொண்டு வாழக் கற்றுக் கொள் ! ஆனால் கடவுளை வேண்டும் போது கண்களை திறந்து பேசு ! கண் திறந்து வேண்டினால் தான் உன் உள்ளே உறங்கும் ஆன்மா விழிநிலை அடையும்!
கண் மூடி பிரார்த்தனை செய்யாதே ! ஆயிரம் பேர் கூடி அழுதாலும் கடவுள் இரக்கம் கொள்ளமாட்டான். மனைவியின் அங்கம் தவிர புற உலகில் நீ எதையும் பார்த்து பாவம் சேர்க்காதே !
எல்லாம் சமநிலையாய் பூமியில் இருக்க நீ இயற்கைக்கு மாறாக அடிமைபடுத்துகிறாய். இங்கே முதலாளி யாருமில்லை.
எல்லாம் கூலிகள் ! பொம்மைகள் !
கடவுள் மட்டுமே முதலாளி !
எல்லாம் கூலிகள் ! பொம்மைகள் !
கடவுள் மட்டுமே முதலாளி !
கண் தான் எல்லா பாவத்திற்கும் மூலம். ஆதலால் பார்வையில் தெளிவை வை ! எந்த நினைவும் இல்லாமல் இருக்க பழகு ! இங்கே முடியாதது எதுவுமில்லை ! நீ நல் பாதையில் பயணிக்க ஆரம்பித்தால் கடவுளே உனக்கு தோழனாக வருவான். நல்ல நினைவுகளோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தம் தான் !
மனிதன் தான் சித்தன், ஞானி, மகான் ஆகிறான். நீ விதிவிலக்கல்ல. உன்னாலும் தெய்வ நிலை அடைய முடியும் ! உன் ஒளியை பார்க்க நினை ! உன்னை அடக்க பழகு ! பூமியை சமமாக்கி உழுது பயிராக்கி உனக்கு தந்தான் உழவன். வாழ்வில் மேடு பள்ளங்கள் இருந்தால் சமமாக்கு ! உன்னால் முடியும் !
எல்லா உயிரிடமும் சமநிலை கொள் ! இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யாருமில்லை. நீர் எப்போதும் சமநிலையாய் இருக்கக் கண்டேன். நீரின் தத்துவம் உணர் ! உடல் சமநிலை இல்லாது (சூடு) இருந்தால் நோய் தான் உருவாகும். மனதை ஓர் போதும் மேடு பள்ளத்திற்கு அழைத்து செல்லாதே ! சம நோக்குடன் வை !
தரணியில் துன்பமில்லா வாழலாம் ! நீ துன்பமென்று எதை நினைக்கின்றாய் என புரியவில்லை. இந்த துன்பமெல்லாம் ஒன்றுமில்லை. மேலே நீ செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும் போது கீழே உள்ள துன்பங்கள் பெரியதாக தோனாது !
நீர் கூட ஓடி ஒரு சமமான இடத்தில் தேங்கி நிற்கிறது. நீ காலம் யாவும் ஓடி எதையோ தேடுகின்றாய். நீ அமரும் இடத்திலேயே உன்னை தேடு !
ஓர்மையில் சொல்கிறேன். உனை கரை சேர்பேன் !
நான் உனை சமநிலை கொண்டு பார்க்கிறேன் !
வென்றவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment