வறுமை தீர ஓடி உழைக்கின்றாய். உன் வருமை தீர ஏது செய்தாய் ? ஏது உணர்ந்தாய் ?
பூ உலகம் ;;;
பூ என்றால் உலகம் என்று அர்த்தம். இந்த மணமிக்க பூக்களுக்கும் உலகத்திற்கும் சம்பந்தம் உண்டு ! அதனாலே பூஜைக்கு பூக்களையும், மலர்களையும் முதன்மையாக்கினான் சித்தர்கள் ! பூ லோகம் என்று விளம்புகின்றாய். மென்மையான உலகையும் மேன்மையான பிறவியையும் மறந்தாய். என் மேல் குற்றம் சொல்லி எனக்கு நேராய் முகஸ்துதி செய்து என் பின்னால் இகழ்கின்றாய். அறியாதான் என பொருளாகுமோ ?
ஏதுணர்ந்தாய் ? எவையறிந்தாய் ? மலரை பூவை பெண்ணுக்கு உவமைபடுத்தினான். பெண் என்ற மலரிலே உதித்த மானிடன், மலர் தேடி அலைகின்றான் மாயவனை உணராமல் ! பூ உலகில் பூவை போல வாசம் வீசாமல் உதிர்ந்து போகின்றான்.
பூமி பந்து என்றால் உருண்டை அல்ல ! பூமியை பந்து என்று சொல்லக் காரணம். பந்து என்றால் பந்தம் என்று பொருள். இந்த பூமியிலே தான் இரத்த பந்தம். மேலே இல்லை ! மேலே உன் போல் மனிதருண்டு ! மரமுண்டு ! பறவைகள் உண்டு ! மாயமயக்கமும், பொறாமையும், சூதும், வஞ்சகமும் அங்கில்லை !
பந்து என்பதை உருண்டை என்று தவறாக புரிந்து தறிகெட்டு போகும் மனதின் சொல் கேட்கின்றான். அறிவு வழி நடப்பவன் ஆளுமையை உணர்கின்றான்.
மனம் வழி நடப்பவன் மாயமயக்கத்தில் மயக்கமுற்று திரிகின்றான். பூமி என்ற தட்டையான தட்டு அந்தரத்தில் தொங்குகின்றது. அதில் நீ தொங்குகின்றாயே, இதை என்றாவது அறிந்தாயா ?
என் தந்தை அன்பினிற்கினிய கருணையாளன் யாகவா சொல்வார்கள். “மேலிருந்து பார்த்தால் இந்த மானிடன் பூமியில் பாசக்கயிற்றில் தொங்குகின்றான். இதை அறியாமல் வாழ்கின்றானே ? இதை எப்போது அறிவானடா என் செல்ல மகனே இநன்யா” என்று சொல்வார்கள்.
பூடகத்தை வெளியில் சொன்ன பூமியை படைத்தவன் விளம்பியதை அறியாமல் போனான் சூத்திரம் தெரியா சூதுள்ள மானிடன். அத்தனையையும் யுக யுகமாய் பார்க்கின்றேன். ஆனால் பூமியில் ஐம்பது வருடம் பார்த்து எல்லாம் அறிந்தவன் போல் மதிமயங்கி போனான் மானுடன். மீண்டும் அடுத்த பிறவியில் மறந்துவிடுகிறான்.
எல்லாம் கனவைப் போல வாழ்ந்து காலத்தில் உதிர்ந்து போகின்றாய். உன் எண்ணம் குறுகல் என்பதாலேயே ஞாபகமில்லை. என்னை நம்பிக்கையோடு நினை. உன் ஜென்மம் புரியும். சத்தியம் நான் தான். சகலமும் என்னுள் உற்று பாரடா ! பூ உலகத்தில் புனிதன் எனை நோக்கு !
பூமி பந்து உனை புரிய வைக்கும் ! மீண்டும் பிறவாத வரம் தந்து வழி அனுப்பி வைக்கும் ! நில மகள் தூய்மை ! நிஜத்திலே காண்பாய் !
பூரிப்போடு வாழடா ! புணிதன் நான் உனக்குள் என்று !
காலத்தின் நாயகன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment