அதிகாரி உன்னுள் இருக்க, நீ அதிகாரம் கொள்ளலாகுமா ? உன் அதிகாரம் எதை சாதித்தது ?
அதிகாரம்
நீ எதன் மீதும் அதிகாரம் செலுத்த முடியாது. உன் கடிவாளம் கடவுளின் கையில் ! பூமியில் ஆகாத ஆட்டம் ஆடுகிறாய் ! பின் மண் தான் உனை திண்ணக் கண்டேன் ! இந்த உடல் மணக்க அதிகாரம் கொள்ளாதே ! ஆணவம் கொள்ளாதே ! உன் உயிர் அதிகாரம் கொள்ளும்.
உயிருக்கு தண்டனை அல்ல. உடலுக்கு தான் தண்டனை. உயிர், ஆன்மா, உடல் என்று மூன்றும் ஒன்றில் நின்று தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் இருக்கின்றது. இது எல்லாம் ஒன்று சேர்ந்த உருவம் தான் நீ ! இதில் ஒன்றை இழந்தாலும் நீ நீயல்ல ! இந்த மாய சூத்திரம் தெரிந்தும் நான் என்று அதிகாரம் செய்கின்றாய்.
உடலை கொன்றான். சோம்பேறி மானிடன் உயிரைக் கொன்றானா ? இந்த உடலை கொல்வதில் பெரிய அதிகாரி என்று பிதற்றி கொள்கிறான் மனிதன் ! பாவமடா நீ ! நீ என்ன செய்தாலும் உன் இறப்பை தடுக்க முடியுமா ? வயோதிகத்தை நிறுத்த முடியுமா ?
இங்கே அதிகாரி என்பது கடவுள் மட்டும் தான் ! நீ அகங்காரம் கொண்டால் கடவுள் அதிகாரம் கொள்கிறான்.
மனிதனால் மரணத்தை வெல்ல முடியாது ! நான் நினைத்தால் இந்த நொடியே மேலே செல்ல முடியும். ஆனால் நீ வதைப்பட்டு, நோய்பட்டு, நொந்து கொண்டு தான் உயிரை மாய்க்கிறாய். உன் மூச்சு காற்று நிம்மதியோடு போக உனை அடக்கு !
கடவுளை எப்போதும் துணை கொள். நல்லவர்கள் சொல்லும் நல்ல வார்த்தைகளை கேள் ! இங்கே நல்லவர் என்பது தாய் தந்தை தான் . தந்தையின் சொல் வேதத்தை போல ! தாயை மதிக்க கற்று கொள். மனைவியை நேசிக்க கற்று கொள். நீ அதிகாரம் கொண்டு யாரையும் அடக்க நினைக்காதே ! இயல்பாக இரு ! எல்லாம் இன்பமாக தெரியும் !
சதுராட்டம் போடும் மனம் அடங்க என் நாமம் சொல் ! உனை நல்வழிக்கு அழைத்து செல்லும் ! தீய வழியில் நான் உன்னை பயனிக்கவிடமாட்டேன்.
அன்பிற்கு அடைக்கும் கதவுகள் எதுவும் இல்லை ! என் அன்பு நிகரற்றது. தண்ணிகரில்லா பெருங்கருணை எனக்குள் ! நான் யாரிடமும் அதிகாரம் கொள்வதில்லை. ஆனால் கர்மாக்களை என் அதிகாரம் கொண்டு துவஷம் செய்கிறேன் !
அதிகாரம் என்பதெல்லாம் கல்லறை வரையில் தான் ! மரண படுக்கையில் கடவுளை கெஞ்சுகிறாய். நீ கெஞ்சும் நிலையில் உனை வைக்காதே ! நான் உனை கரை சேர்ப்பேன். நீ எந்நிலையில் இருந்தாலும் உனை உயர்த்துவேன் !
நான் அதிகாரி !
நான் இநன்யா !
No comments:
Post a Comment