வஞ்சவம் வணங்கி வஞ்சகனாகிப் போனாய் !
கச்சகத்தை வணங்கி கண் மூடிப் போனாய் ! ஏது உரைப்பேன் உன் அறியாமையை ?வஞ்சவம் என்றால் "பாம்பு"
கச்சகம் என்றால் "குரங்கு"
கச்சகம் என்றால் "குரங்கு"
தூக்கம், துக்கமே !
நான் விடங்கமாய் வேதமானேன் ! வேத சாரமானேன். பரப்பிரம்மம் நான் ! நீ விப்பிரமமாக இருக்கின்றாயே ? நான் இமய பிரமோதம் என்பதை மறவாதே ! ஆனி மாலையில் கருவில், காற்றில் உதயமாகி ,சித்திரை வைகறையில் உச்சி பிஷேகமாக தாலாட்டும் பூமியில் ஜனனமானேன் !
நீ தூங்கும் போது உன் உயிரோடு பேசுகிறேன். நீ அறியாது இருக்கின்றாயே ? உன் செல்வம், கல்வி, திமிர், ஆணவம் எல்லாம் தூக்கத்தில் கரைந்து போகின்றது. தூக்கத்தில் குழந்தை போல ஆகின்றாய். பிணம் போல் கிடக்கின்றாய். உன் அறியாமையை உணராதது ஏனோ ?
நீ உணர்வோடு என்னிடம் பேசு ! யுகத்தில் பூத, பிரேத, பிசாசு, பேய், முனி, மோகினி, வேதாள பிண்டங்கள், பெண்களை தொடரும் பிரம்மராட்சர்களையும், துவஷம் செய்தாகிவிட்டது. இனி பூமியில் அதனால் மனிதர்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது. க்ஷத்திரிய வர்ணத்திலிருந்து உலக ராஜ்ஜியத்தை ஒருவன் ஆள்வான். அவன் கையில் அக்ஷ்ய மாலையும், அணந்த அருணமும் இருக்கும் ! அவனுக்கு என் சதுரங்க சேனா படை துணை நிற்கும் !
என் சக சிர திரி சதி நாமத்தில் ஒன்றைத் தான் அறிந்தாய் ! இன்னும் பல கோடி உண்டு ! என் நாமம் வேதசாரம் ! வினை அழிக்கும் சூட்சுமம் ! விதி மாற்றும் பிரம்மாஸ்திரம் ! சொல்லிப் பார் ! உன் துயரம் போகும் ! பில்லி, சூண்யம், பெரும் பாவத்தையும் கரைக்கும் !
எப்போதும் தூக்கத்தில் இருக்கிறாய். தூக்கத்தோடு வாழ்கிறாய். உன்னை தட்டி எழுப்பி உறக்க நிலை கலைந்து உணர்வோடு வாழ எவரும் சொல்லித் தரவில்லை. ஐயாயிரம் வருடமாக அல்லல்பட்டு நிற்கிறாய். வாழ்வு என்னவென்று அறியாது வாழ்கின்றாய். ஏமாற்றும் மூடர் கூட்டம், துதி பாடும் கயவர் கூட்டம் இங்கே மிகுதியானது.
மதம் என்ற போர்வையில் மாயமாலம் காட்டுகிறான் !
தரைக்கு மதமில்லை !
தண்ணீருக்கு மதமில்லை !
காற்றுக்கு மதமில்லை !
உப்பிற்கும் மதமில்லை !
உனக்கு ஏனடா மதம் ? எதற்கடா மதம் ? மதம் உனக்கு என்ன செய்தது என்று என் தந்தை பிரபஞ்ச நாயகன் அடிக்கடி கேட்பார்கள். வித்தை இருப்பதாக சொல்லி உன் சக்தியை வீணடிக்கிறான். உன்னை தூக்க நிலையிலேயே வைத்திருக்கின்றான். ஏதாவது வசிய கலையை கற்று உன்னை உணரவிடாமல் தடுக்கும் மூடர் கூட்டத்தினையே இங்கு பார்த்தேன். பிடறி தெறிக்க உன்னை உலக மாயையின் பிடியிலிருந்து விரட்ட யாரும் இங்கே குருவாய் இல்லை !
குரு என்று யாரையும் காணேன். ஒப்பாறி போல் உபதேசம் செய்து உன்னை உறுக்குலைக்கும் மனித ஜாதியே அவதாரம் என்று பிதற்றக் கண்டேன். என்னை உணர்வார் யாருமில்லை. நான் அருண உதயமாகி அவதரித்து யுகத்தில் உலாவுகின்றேன். என்னை அறிவார் யாருமில்லை !
மனிதன் கையில் செங்கோல் பிடிப்பான் என்று நினைத்தேன். ஆனால் நெஞ்சில் கையை வைத்து கடவுளே காப்பாற்று என்று கதறுகின்றான்.
கனவு கண்டேன் என்று தினமும் புலம்புகின்றான். நினைவோடு எப்போது வாழக் கற்பாய் ? நெஞ்சை நிமிர்த்தி நிஜமான முகம் காட்டு ! இன்றே உன் இலக்கை அடைய எழுந்திரு ! உன் ஊர் செல்ல எப்போதும் ஆயத்தமாயிரு ! இந்த வாடகை இருப்பிடத்தில் இருந்து கொண்டு ஆள நினைக்கிறாய் !
ஆயிரம் வருடம் இருப்பதாய் நினைத்து நீ ஆள நினைக்கின்றாய், மண் உன்னை ஆள நினைப்பதை மறந்து ! உணர்வோடு இரு ! உலக மாயை உனை விரட்டாது. ஒவ்வொரு நிமிடமும் கரையானைப் போல அரிக்கும் மனதை தூய்மையாய் வை ! துன்பம் துடைக்க உணர்வோடு இரு !
தூங்கிவிடாதே ! மிருகங்கள் தூங்குவதைப் போல பாசாங்கு செய்யும் ! பறவை மரத்தில் தூங்குவதை போல இருந்தாலும் அதன் உணர்வு அதன் கால்களிலேயே இருக்கும் ! நீ தூங்கினால் பிணமாகிக் போகின்றாய்.
நான் தூங்குவது இல்லை !
கனவு கண்டு கண் விழித்து புலம்புகின்றாய். எப்போதும் உன்னை பற்றிய உணர்வு உனக்குள்ளே வை ! சந்த்ர மானஸவர்ணமாய் உன் முகம் எப்போதும் ஜொலிக்கட்டும். சத்தியத்தின் பாதை உன் முன்னால். உன் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்ல தயாராக இருக்கிறேன். தூங்கிவிடாதே !
மூன்று குறும்புகள் உன்னை மூடனாக்குகிறது ! (காமம், கோபம், மயக்கம் ) வேதன் என் துணை கொண்டு விரட்டு ! உனக்கு எப்போதும் வழிகாட்ட நான் தயாராக இருக்கின்றேன். உனக்கு கற்று தரவும், காலத்தின் சூட்சுமம் சொல்லி தரவும் !
வா ! வசந்த காலத்தை (ஞானம்) சொல்லி தருகிறேன் ! உன்னை அனந்த அலை கடலில் ஆர்பரிக்காமல் வாழ்வதற்கு சொல்லி தருகிறேன். என் ஞான குலமே என் பாதை சத்யம் ! என் சொல் சத்யம் !
அம்மன்புரம், திருபுரம் கண் திறப்பு, அகிலமெல்லாம் பசுமை வயல் வரப்பு ! வேத வித்தகன் என் சொல் வேதமடா !
என் நாமம் சம்சார நிவிருத்தி, மோக்ஷ சாம்ராஜ்ஜியத்தை சூசகமாக சொல்லி தரும். பரம ஞானத்தை அள்ளி தரும் !
தூங்கிவிடாதே ! உன்னை பார்த்து நான் கண் மூடிப் போவதில்லை ! உன்னை எப்போதும் கைவிடப் போவதும் இல்லை.
திருவிடங்கன் நான் இநன்யா !
No comments:
Post a Comment